லஞ்ச் பாக்ஸ் கார்னர்: நவதானிய சாதம்!

Published:

navathaniya sadam - 2026

நவதானிய சாதம்

தேவையான பொருட்கள்
பரிமாறும்: 2
பாசுமதி அரிசி 100 கி
ஊறவைக்க:
பாசிப்பயிறு 2 டீஸ்பூன்
கொண்டைக்கடலை 2 டீஸ்பூன்.
உளுந்து 2 டீஸ்பூன்.
கானம் 2 டீஸ்பூன்.
நிலக்கடலை 2 டீஸ்பூன்
எள் 2 டீஸ்பூன்
கோதுமை 2 டீஸ்பூன்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய்
நெய்
கடுகு உ.பருப்பு 1 டீஸ்பூன்
வத்தல் 2 கிள்ளியது
கருவேப்பிலை
முந்திரி பருப்பு
தேங்காய் பூ 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு.
மிளகுப்பொடி அரை டீஸ்பூன்

செய்முறை
பாசுமதி அரிசியை வேக வைத்து உலர வைக்கவும்.
ஊற வைக்க வேண்டிய தானியங்களை முந்தய நாள் இரவே ஊற வைக்கவும்.
பின் வெள்ளைத்துணியில் கட்டி 2 மணி நேரம் கழித்து எடுத்தால் முளை கட்டியிருக்கும்.
பின் இவற்றை பிளாஸ்கில் வெந்நீர் ஊற்றி அரை மணி நேரம் வைக்கவும். ( அவித்தால் சத்தை இழக்க நேரிடும்)
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு , கிள்ளிய வத்தல், போட்டு தாளித்து பிளாஸ்கில் ஊற வைத்த தானியங்களை போட்டு வதக்கவும்.
பின் உப்பு, தேங்காய் தூவி சிறிது மிளகுப்பொடி தூவி கிளறவும்.
பின் வேக வைத்த சாதத்தைப் போட்டு கிளறவும்
பின் நெய்யில் முந்திரி வறுத்துப் போடவும்.
பின் நன்கு கிளறி சூடாக பரிமாறவும்.
இந்த மழைக்காலத்துக்கேற்ற சத்தான மதிய உணவாகும்.
முளைகட்டிய தானியங்கள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மிளகு மழைக்காலத்தில் சளி, இருமலுக்கு நல்லது. மழைக்கால டெங்கு காய்ச்சலுக்கு காரணமான வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க வல்லது.
சிறந்த, ஆரோக்கியமான புரதச் சத்து நிறைந்த அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மதிய உணவாகும்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Related articles

Recent articles

spot_img