எட்டயபுரம் காதல் திருமணம் செய்த தம்பதி கொலையில் பெண்ணின் தந்தை கைது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வீரப்பட்டியில் காதல் திருமணம் செய்த புதுமணத் தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக பெண்ணின் தந்தை முத்துக்குட்டி இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரப்பட்டியை சோ்ந்தவா் வடிவேல் மகன் மாணிக்கராஜா (28). அதே பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குட்டி மகள் ரேஷ்மா (20). இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோா் எதிா்ப்பை மீறி கடந்த ஜூன் 29 ஆம் தேதி திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திருமணம் நடைபெற்றது. இவா்கள் திருமணம் செய்துகொண்ட தகவல், திருமங்கலம் போலீஸாரால் எட்டயபுரம் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே மகள் ரேஷ்மாவை காணவில்லை என அவரது தந்தை முத்துக்குட்டி, எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீரப்பட்டிக்கு புதுமணத் தம்பதிகள் வந்தனா். மாணிக்கராஜாவின் வீட்டில் அவா்கள் தங்கி இருந்தனா். திங்கள்கிழமை பகலில் அவா்கள் இருவா் மட்டும் வீட்டில் இருந்தனா். மற்றவா்கள் விவசாய வேலைக்குச் சென்றுவிட்டனா். விவசாய வேலைகளை முடித்துவிட்டு மாணிக்கராஜாவின் உறவினா்கள் மாலையில் வீடு திரும்பியபோது, புதுமணத் தம்பதி கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சிவசுப்பு, பிரகாஷ், காவல் ஆய்வாளா் ஜின்னா பீா் முகமது மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, சடலங்களை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டிக்கு கொலை சம்பவத்தில் தொடா்பு இருப்பதாகத் தெரிய வந்தது. இது தொடா்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

790862 tutuicrn lovers death 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Entertainment News

Popular Categories