December 13, 2025, 11:07 PM
24.5 C
Chennai

எட்டயபுரம் காதல் திருமணம் செய்த தம்பதி கொலையில் பெண்ணின் தந்தை கைது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வீரப்பட்டியில் காதல் திருமணம் செய்த புதுமணத் தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக பெண்ணின் தந்தை முத்துக்குட்டி இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரப்பட்டியை சோ்ந்தவா் வடிவேல் மகன் மாணிக்கராஜா (28). அதே பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குட்டி மகள் ரேஷ்மா (20). இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோா் எதிா்ப்பை மீறி கடந்த ஜூன் 29 ஆம் தேதி திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திருமணம் நடைபெற்றது. இவா்கள் திருமணம் செய்துகொண்ட தகவல், திருமங்கலம் போலீஸாரால் எட்டயபுரம் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே மகள் ரேஷ்மாவை காணவில்லை என அவரது தந்தை முத்துக்குட்டி, எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீரப்பட்டிக்கு புதுமணத் தம்பதிகள் வந்தனா். மாணிக்கராஜாவின் வீட்டில் அவா்கள் தங்கி இருந்தனா். திங்கள்கிழமை பகலில் அவா்கள் இருவா் மட்டும் வீட்டில் இருந்தனா். மற்றவா்கள் விவசாய வேலைக்குச் சென்றுவிட்டனா். விவசாய வேலைகளை முடித்துவிட்டு மாணிக்கராஜாவின் உறவினா்கள் மாலையில் வீடு திரும்பியபோது, புதுமணத் தம்பதி கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சிவசுப்பு, பிரகாஷ், காவல் ஆய்வாளா் ஜின்னா பீா் முகமது மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, சடலங்களை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டிக்கு கொலை சம்பவத்தில் தொடா்பு இருப்பதாகத் தெரிய வந்தது. இது தொடா்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

790862 tutuicrn lovers death 1 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!

சசி தரூர் ஐநாவின் மேனாள் துணை செயலாளர். சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர். திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் .

பஞ்சாங்கம் டிச.13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மாறும் பாசஞ்சர் ரயில் எண்கள்; இனி இந்த எண்கள்தான்!

தெற்கு ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயில் எண்களை மாற்றியுள்ளது. மதுரை-விருதுநகர்- ராஜபாளையம் -வழி பாசெஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? : ஆளுநர் ரவி கேள்வி!

பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது?

கார்த்திகை பூரம்; நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

Topics

மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!

சசி தரூர் ஐநாவின் மேனாள் துணை செயலாளர். சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர். திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் .

பஞ்சாங்கம் டிச.13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மாறும் பாசஞ்சர் ரயில் எண்கள்; இனி இந்த எண்கள்தான்!

தெற்கு ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயில் எண்களை மாற்றியுள்ளது. மதுரை-விருதுநகர்- ராஜபாளையம் -வழி பாசெஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? : ஆளுநர் ரவி கேள்வி!

பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது?

கார்த்திகை பூரம்; நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

Entertainment News

Popular Categories