spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகல்விமதக் காழ்ப்பில் செயல்படும் ‘மதிகெட்ட’ கல்வித்துறை அதிகாரிகள்!

மதக் காழ்ப்பில் செயல்படும் ‘மதிகெட்ட’ கல்வித்துறை அதிகாரிகள்!

- Advertisement -

கல்வித்துறையில் சில அதிகாரிகளின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது – என்று இந்து முன்னணி புகார் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்….

பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு நம்பிக்கை, மன உறுதி, படிப்பில் ஆர்வம், வெற்றி தோல்வியை ஏற்றுக்கொண்டு முன்னேறும் மனநிலையை ஏற்படுத்த பல்வேறு வகையான பூஜைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர் ஹோமம் மற்றும் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜையில் வைத்து வழிபட்ட காப்புக் கயிறுகள் (ரட்சை) மாணவர்களுக்கு கைகளில் கட்டுவதற்காக வழங்கப்படுவது வழக்கம்.

சில பள்ளிகளில், மாணவர்கள் கட்டியிருந்த (ரட்சை) காப்புக் கயிறை மற்றும் திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து வருவதை கண்டித்து, அவற்றை அகற்றியுள்ளனர். இதுகண்டிக்கத் தக்கது. இவ்வாறு செய்வது மாணவர்களின் தன்னம்பிக்கை, மன உறுதியை குலைத்துவிடும். ஒவ்வோர் ஆண்டும் தேர்வு பயத்திலும், தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களில் சிலரும் தற்கொலை செய்து கொள்வதை காண்கிறோம். இவற்றிற்குத் தீர்வாகத்தான் இந்த வழிபாட்டு முறை நடத்தப் பெற்று வருகிறது.

இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளில், மாணவர்களிடம் நல்ல மாற்றமும் தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்பட்டுள்ளதை உறுதியாகக் கூற முடியும். ஆன்மிக நம்பிக்கை என்பது அறிவியல் பூர்வமானதும், மனோதத்துவ முறையிலானதும் ஆகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  மாணவர்களிடம் உள்ள சமய நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். அதை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அதுபோல, சமீபத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவரும், சமய சின்னங்களை அகற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை மூலம் எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளார்.

எனவே, மத காழ்ப்புணர்ச்சியோடும், வெறுப்போடும் செயல்பட்டு, மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்… என்று இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர்  சி.பரமேஸ்வரன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe