தனியார் பள்ளி கட்டணம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!

school - 2026

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு. பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் புதிய அறிவிப்பு.

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கான வகுப்பு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பள்ளிகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவிப்பு அரசு வெளியிட்டுள்ளது.

சென்னையில் நேற்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் மாணவர் சேர்க்கை ஆன்லைன் கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடைபெற்றது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்று அறிக்கை அனுப்பபட்டுள்ளது.

அதில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணத் தொகையில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் 75 சதவீத கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தை பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு பள்ளியும் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.

மேலும் கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பிலிருந்து தனியார் பள்ளிகள் நீக்கக் கூடாது என்று அறிவுறுத்தபட்டுள்ளது.

அதே போல பள்ளிகளில் சீருடை, பேருந்து கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களை செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் மாற்று சான்றிதழ் கேட்டால் காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு செயல்பாடுகளை அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளி முதல்வர்கள் கண்காணித்து புகார்களுக்கு இடமின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களை நீக்கவோ, கற்பித்தல் செயற்பாடுகளை பங்கேற்பதை தவிர்க்கவோ கூடாது எனவும் முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories