December 6, 2025, 6:02 AM
23.8 C
Chennai

தனியார் பள்ளி கட்டணம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!

school - 2025

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு. பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் புதிய அறிவிப்பு.

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கான வகுப்பு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பள்ளிகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவிப்பு அரசு வெளியிட்டுள்ளது.

சென்னையில் நேற்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் மாணவர் சேர்க்கை ஆன்லைன் கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடைபெற்றது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்று அறிக்கை அனுப்பபட்டுள்ளது.

அதில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணத் தொகையில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் 75 சதவீத கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தை பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு பள்ளியும் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.

மேலும் கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பிலிருந்து தனியார் பள்ளிகள் நீக்கக் கூடாது என்று அறிவுறுத்தபட்டுள்ளது.

அதே போல பள்ளிகளில் சீருடை, பேருந்து கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களை செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் மாற்று சான்றிதழ் கேட்டால் காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு செயல்பாடுகளை அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளி முதல்வர்கள் கண்காணித்து புகார்களுக்கு இடமின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களை நீக்கவோ, கற்பித்தல் செயற்பாடுகளை பங்கேற்பதை தவிர்க்கவோ கூடாது எனவும் முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories