சுற்றுலாவுக்கு செல்லும் பொழுது பல கட்டுப்பாடுகளை விதித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்பெல்லாம், பள்ளிகள் தாங்கள் நினைக்கும் நேரத்தில் சுற்றுலாவுக்கு நேரத்தை ஒதுக்கி மாணவர்களை அழைத்துச் சென்று வந்தன. ஆனால், பல சமயங்களில் சுற்றுலாவுக்கு செல்லும் இடத்தி்ல் விரும்பத் தகாத சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து பல கட்டுப்பாடுகளை விதித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் ஒரு அம்சமாக தண்ணீர் உள்ள இடங்களுக்கு (அதாவது டேம்) மாணவர்களை அழைத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தியுள்ள கல்வித்துறை. சுற்றுலா செல்வதற்கு முன்பாக மாவட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். மேலும். பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்ற பின்னரே மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

