புது தில்லி: தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் வயது வரம்பை அதிகரிகப்பது குறித்து மத்திய அரசு எந்த பரிசீலனையும் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய அமலாக்கக் குழு குறுகிய கால சேவைகளுக்கான ஓய்வூதிய வயதை 50 ஆண்டுகளில் இருந்து 55 ஆண்டுகளாக அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளது. தொழிலாளர் வைப்பு நிதியின் மத்திய அறக்கட்டளைகள் வாரியம் இதனை பரிசீலனை செய்து வருகிறது. இத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் குறுகிய கால சேவையினால் குறையும் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

