April 30, 2025, 9:42 PM
31.3 C
Chennai

இது பள்ளிகளில் கட்டாயம்.. பள்ளிக் கல்வி துறை உத்தரவு!

school
school

அனைத்து பள்ளிகளிலும் நூலக பாட வேளைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை கமிஷனரகத்தில் இருந்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

‘அனைத்து பள்ளிகளிலும் வாரம் ஒரு முறை நூலக பாட வேளைகளை கட்டாயம் நடத்த வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

பல பள்ளிகளில் நூலகங்களின் பயன் மாணவர்களுக்கு கிடைக்காமல் உள்ளது. நூலக பாட வேளைகள் முறையாக நடத்தப்படுவதில்லை.

எனவே, ஒவ்வொரு பள்ளியும் வாரம் ஒரு முறை நூலக பாட வேளைகள் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். நூலகத்துக்கு தனி அறை ஒதுக்க வேண்டும்.

நூலக பாட வேளைகளில், மாணவர்கள் புத்தகங்களை படிப்பதுடன், வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கவும் அனுமதிக்க வேண்டும். இதற்கான பதிவேடு பராமரிக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகத்தை படித்ததும், அவர்களுக்கு கட்டுரை, நூல் அறிமுகம் செய்தல் போன்ற போட்டிகள் நடத்த வேண்டும்.

ALSO READ:  மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!
kural library
kural library

விருப்பம் உள்ள மாணவர்களை தேர்வு செய்து, வாசகர் வட்டம் உருவாக்க வேண்டும். அருகில் உள்ள நூலகங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். புத்தக நன்கொடையாளர்களை அதிகரிக்க வேண்டும்.

தேவையான புத்தகங்கள் இல்லாவிட்டால், அருகில் உள்ள மாவட்ட மைய நூலகம் மற்றும் பிற நூலகங்களை அணுகி, மாணவர் வாசிப்புக்கு ஏற்ற புத்தகங்களை பெற்று பயன்படுத்தலாம்.

நூலகங்களில் நாளிதழ்களை படிக்கவும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்’ என அந்த சுற்றறிக்கையில் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

Topics

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories