பிளஸ் 2 தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

Published:

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று துவங்கின. தேர்வு முடிவுகள் வரும் மே மாத முதல் வாரத்தில் வெளியாகிறது. ப்ளஸ் 2 தேர்வுகள், கடந்த 5–ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 31–ந்தேதி வரை நடக்கும் இந்தத் தேர்வை சுமார் 8,45,000 மாணவ மாணவிகள் எழுதி வருகின்றனர். தமிழ், ஆங்கிலம் மொழி பாடங்கள் மற்றும் சில பாடப்பிரிவுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. நாளை மறுநாள் (புதன்கிழமை) கணிதத் தேர்வு நடக்கிறது. தேர்வுகளில் முறைகேடு எதுவும் நடைபெறாமல் தடுக்க அரசு தேர்வுத்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்கி விட்டன. தமிழகம் முழுவதும் 63 கல்வி மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. முதலில் தமிழ் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். விடைத்தாள் காப்பு மையத்தில் இருந்து கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்புடன் வெளியே எடுக்கப்பட்டன. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் கவனமாகவும், தவறுகளுக்கு இடம் அளிக்காத வகையில் ஈடுபடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே 10ந்தேதிக்குள் வெளியிடப்படுகிறது. கடந்த வருடம் மே 9ந்தேதி தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டும் அதே போல வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img