நாகபுரி: ஒரு நாகரிக சமுதாயத்தில், மேற்கு வங்கத்தில் நடந்த கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம் போன்ற செயல்களுக்கு இடமில்லை, அதை ஆர்.எஸ்.எஸ். வன்மையாகக் கண்டிக்கிறது என்று அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் சிந்தனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற செயல்கள் கண்டனத்துக்கு உரியவை. ஆனால் இதுபோன்ற சம்பவங்களை பயன்படுத்தி சமுதாயத்தில் பதற்ற நிலையை ஏற்படுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறினார் சுரேஷ் பையாஜி ஜோஷி. மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்களுக்கு, அங்கே உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைப்பதில்லை. பாகிஸ்தானில் இருந்து நூற்றுக்கணக்கான இந்துக் குடும்பங்கள் இந்தியாவுக்கு தப்பி வந்து குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வசித்து வருகின்றன. அவர்கள், இந்திய அரசு தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். அவர்களுடைய கோரிக்கையை அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பசுக்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர், ஹரியானா மாநில பாஜக அரசு, மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளது. பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மற்ற மாநிலங்களிலும் இதேபோல் தடை விதிக்க வேண்டும். பசுவதைத் தடைச் சட்டம் பேச்சளவில் இருந்தால் மட்டும் போதாது. அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று கூறினார் சுரேஷ் பையாஜி ஜோஷி.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...
சற்றுமுன்
ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!
ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

