
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு இன்று (ஜூலை 12) நிறைவடைகிறது.
இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்து உள்ளதாகவும், வரும் 16-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு
–ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில், விண்ணப்பப் பதிவு புதன்கிழமை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.