ஏபிவிபி., போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி! நெல்லை பல்கலை வருகை பதிவு அபராதக் கட்டணம் குறைப்பு!

nellai university abvp students met vc - 2026நெல்லை: நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நிகழும் முறைகேடுகள் குறித்து கவனத்துக்குக் கொண்டு வந்து, முறைகேடுகளை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு, அக்.15 முதல் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.

ஏபிவிபி., விடுத்த கோரிக்கைகள்…
• வருகைப் பதிவு அபராதக் கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.500 அறிவித்ததை ரத்து செய்ய வேண்டும்
• வருகைப் பதிவு தொடர்பான புதிய கட்டுப்பாடுகளை சரி செய்ய வேண்டும்
• இதுவரை தமிழில் தேர்வெழுதிய இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மீண்டும் தமிழில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்.
• செனட், சிண்டிகேட் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மான நகலை பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிட வேண்டும்
• மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியன கட்டண (common fees structure) முறையை அமல்படுத்த வேண்டும்
• ONE SUBJECT ONE TEACHER என்ற பல்கலைக்கழக விதிமுறையை உடனே அனைத்து கல்லூரிகளிலும் நடைமுறைப் படுத்த வேண்டும்
• திருமாவளவனின் ஆய்வுக் கட்டுரையை ரத்து செய்ய வேண்டும்… உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி, கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டங்களில் அக்டோபர் 15 முதல் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது!
– என்று ஏபிவிபி மாநில இணைச் செயலாளர் எம்.பிரித்விராஜன் வெளியிட்டள அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

இந்நிலையில், மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்த நெல்லை பல்கலை துணைவேந்தர், இது குறித்துப் பேச வருமாறு கூறியிருந்தார்.

அதன்படி, நெல்லை பல்கலைக் கழக துணை வேந்தர் பாஸ்கரனை ஏபிவிபி மாணவர் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் பிரித்விராஜன் உள்ளிட்ட மாணவர் குழுவினர் சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனர்.

அப்போது, மாணவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறிய துணைவேந்தர், வருகைப் பதிவு அபராதத் தொகை கட்டணத்தைக் குறைத்துக் கொள்வதாக உறுதி அளித்தார். மேலும், ஒரு பாடம் ஓர் ஆசிரியர் – என்ற முறையை பல்கலை.,யின் அனைத்து உறுப்புக் கல்லூரிகளிலும் நடைமுறைப் படுத்த ஆவன செய்வதாகவும், இதனை நடைமுறைப் படுத்தாத கல்லூரிகள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தெரிவித்தார்.

ஏபிவிபி அமைப்பு கூறியிருந்த கோரிக்கைகளில், திருமாவளவன் குறித்த அம்சத்தைத் தவிர மற்ற அனைத்தையும் பரிசீலிப்பதாகக் கூறினார். மேலும், திருமாவளவன் குறித்த ஆய்வு நூல் வந்த பின்னர் அது குறித்து பேசலாம், அதற்கு முன் தேவையற்ற சர்ச்சைகள் வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட துணை வேந்தர், உடனே பல்கலைக் கழக பதிவாளரிடம் சுற்றறிக்கை அனுப்பவும் ஏற்பாடு செய்தார்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

nellai university circular - 2026

அதன்படி, சுற்றறிக்கை அனைத்து உறுப்புக் கல்லூரிகளுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. அதில், வருகைப் பதிவு அபராதத் தொகை ரூ.500 என்று அறிவிக்கப் பட்டதில் இருந்து ரூ.200 ஆகக் குறைக்கப் பட்டுள்ளது. இது, நவ.2018ல் இருந்து நடைமுறைப் படுத்தப் படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை அறிவிப்பு, ஏபிவிபி., மாணவர் அமைப்பின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

Entertainment News

Popular Categories