ஏப்ரல் 20க்குள்.‌. நேரில் விண்ணப்பம்.‌.!

Published:

jobs - 2026

சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை, காரைக்குடி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, சீமாங் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டரும், மாவட்ட நல வாழ்வு சங்கத் தலைவருமான கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:

“சிவகங்கை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, காரைக்குடி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, சீமாங் பிரிவு, மாவட்ட மன நல திட்டத்தின் கீழ் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களை மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரேடியோ கிராபர் (கல்வித் தகுதி: இளநிலை ரேடியோ கிராபி), ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் (கல்வித்தகுதி: 3 மாத ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் படிப்பு), மருத்துவமனை பாதுகாவலர் (கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி), பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.

விண்ணப்பங்களை சிவகங்கை முந்தைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் ஏப்ரல் 11 முதல் 20-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 20-ம் தேதிக்குள் இதே அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img