தலைப்புச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும்போதே மாற்றி அமைத்த சாணக்கியன் அமித் ஷா!

Published:

uttav headline - 2026

அச்சிடப்பட்ட முதல் பக்க தலைப்புச் செய்தியையே மாற்றியமைத்த அரசியல் சாணக்கியன் அமித்ஷா மட்டுமே… என்று புகழ்கின்றனர் பாஜக.,வினர்.

இன்று காலை நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் ஆவார் என்றும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அதற்கு ஆதரவு அளிக்கிறது என்றும் முக்கட்சிக் கூட்டணியில் எந்த எந்த அமைச்சர்கள் பதவி ஏற்பர் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், அந்தத் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், டிவி.,க்களில் தலைப்புச் செய்திகள் வேறாக ஓடிக் கொண்டிருந்தன.

uttav amitsha - 2026

அவற்றில், பாஜக.,வின் முதல்வராக மீண்டும் பட்நாவிஸுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாகவும், அதற்கு, தேசிய வாத காங்கிரஸின் அஜித் பவார் ஆதரவு அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.

இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ள பாமக., நிறுவனர் ராமதாஸ்…. காலை நாளிதழ் செய்திகளில் சிவசேனா ஆட்சி, காலை தொலைக்காட்சி செய்திகளில் பாஜக ஆட்சி, மகாராஷ்டிராவில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி என்று கூறியிருந்தார்.

photoonw - 2026

இதையே இப்போது பல்வேறு மீம்ஸ்களாக நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

காங்கிரசுடன் பேச்சு வார்த்தை முடிந்து பொழுது விடிந்தால் முதலமைச்சர் னு நினைச்சு ஜாலியா தூங்க போனால்..
தூங்கி எழுவதற்குள் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?
மஹாராஷ்டிராவில் முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்
உத்தவ் தாக்கரே நீ படிச்ச ஸ்கூல்ல ஹெட் மாஸ்டர்டா இவர்! – என்று ஒரு டிவிட்டர்வாசி கூறியுள்ளார்.

bjp ncp - 2026
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img