புல்வாமா போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழும்: நாங்கள் தாக்குவோம்: மிரட்டுகிறார் இம்ரான் கான்!

370 வது பிரிவை ரத்து செய்தல் மற்றும் ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரிப்பது ஆகியவை தொடர்பாக இந்தியாவின் உள் விவகாரத்தில் பதிலளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “புல்வாமா போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழும்” என்று இந்தியாவை மிரட்டியுள்ளார்.

காஷ்மீருக்கான விசேஷ அந்தஸ்து அளிக்கும் 370 வது பிரிவை திரும்பப் பெற்றுக் கொண்டது இந்திய அரசு. இதுகுறித்து கருத்து தெரிவித்த இம்ரான் கான், புல்வாமா போன்ற ஒரு பயங்கரவாத தாக்குதல் மீண்டும் நடக்கும் என்று நான் முன்கூட்டியே கூற முடியும். ஆனால் அவர்கள் மீண்டும் எங்கள் மீது பழியைப் போட முயற்சிப்பார்கள். அவர்கள் எங்களை மீண்டும் தாக்கக்கூடும், நாங்கள் மீண்டும் தாக்குவோம்.” என்று கூறினார்.

இந்தியாவின் நடவடிக்கையை அடுத்து பாகிஸ்தானின் பதிலை உலகுக்குச் சொல்வதற்காக செவ்வாய்க் கிழமை இன்று தேசிய அவையின் கூட்டுக் கூட்டத்தில் இம்ரான் கான் உரையாற்றினார்!

காஷ்மீருக்கான 370 வது பிரிவை திரும்பப் பெறுவதற்கான இந்தியாவின் முடிவுக்கு பாகிஸ்தானின் பதில் குறித்து விவாதிக்கப் பட்டது. அப்போது அவர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தார்கள். நான் ஆட்சிக்கு வந்ததும், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதே எனது அரசாங்கத்தின் முன்னுரிமை என்று நான் கூறியிருந்தேன்.” என நினைவு கூர்ந்தார்.

ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தியாவுடனான எனது முதல் தகவல் தொடர்புகளில், அவர்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளைப் பற்றி கவலை தெரிவித்தனர். ராணுவப் பள்ளி படுகொலைச் சம்பவத்துக்கு பின்னர், பாகிஸ்தானில் உள்ள அனைத்து அரசியல் அமைப்புகளும் தங்கள் நிலங்களை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த விடமாட்டோம் என்று உறுதியளித்ததாக நான் மோடிக்கு உறுதியளித்தேன்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

இருப்பினும், இந்திய தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஆர்வம் காட்டுவதாக உணர்ந்தேன். பிக்‌ஷேக்கிற்கான எனது பயணத்தில் எனது சந்தேகங்கள் உறுதியாயின! அங்கு இரு நாடுகளுக்கிடையேயான நெருக்கடியான உறவுகளைப் பற்றி பேச இந்திய தரப்பு விருப்பம் காட்டவில்லை” என்றார் இம்ரான் கான்!
 
இந்திய ஆட்சியாளர்கள், இந்து மேலாதிக்கத்தையும், ஜம்மு-காஷ்மீரை பிளவுபடுத்துவதையும், 370 வது பிரிவை அகற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளனர்…

இந்துக்களை மற்ற மதங்களுக்கு மேலானதாக, ஓர் ஆதிக்கசக்தியாக வைத்துக் கொண்டு, சிறுபான்மையினரை நசுக்குவதன் மூலம் அவர்களை அடிபணிய வைப்பதை நோக்கமாகக் கொண்டதுதான் அவர்களின் உறுதியான சித்தாந்தத்தின் வெளிப்பாடு! காஷ்மீரில் நடந்தது அவர்களின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகிறது. அவர்கள் இனவாதிகள் என்றார் இம்ரான் கான்.

பல முறை தோல்வியடைந்த பின்னர் காஷ்மீரை நோக்கி உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கான மற்றொரு முயற்சியாக, “காஷ்மீர் மீது இந்தியா இப்போது தங்கள் இறுக்கத்தை தீவிரப்படுத்தும். இதனால் புல்வாமா தாக்குதல் போன்ற சம்பவங்கள் ஏற்படும். அவர்கள் எங்கள் மீது பழி சுமத்துவார்கள். நாங்கள் பதிலடி கொடுப்போம், இரு நாடுகளும் போருக்குச் செல்லும், இது உலகின் பிற பகுதிகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது அணுசக்தி அச்சுறுத்தல் அல்ல. இந்த விஷயத்தை உலகத் தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்திய அரசாங்கத்தால் முஸ்லிம்கள் அடக்கப் படுவது குறித்து மேற்கத்திய உலகிற்கு தெரிவிப்பேன்.” என்றார் இம்ரான் கான்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

இம்ரான் கானின் இந்த மிரட்டல் பேச்சு, பாகிஸ்தான் தனது நிலத்திலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளைத் தடுத்து நிறுத்துவதாக பாசாங்கு செய்வதையும், பங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தீவிரமாகவும் உறுதியுடனும் இருப்பதாக சொன்னதெல்லாம் பொய் என்றும் வெளிப்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் புல்வாமா பகுதியில் 40 இந்திய வீரர்களைக் கொன்ற புல்வாமா தாக்குதல் போன்ற பயங்கரவாத தாக்குதல்களை தாங்கள் தான் முன்னின்று நடத்தினோம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இம்ரான் கானின் பேச்சு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories