இந்திய நலன் காக்கும் முடிவெடுத்த மோடிக்கு இந்து மக்கள் கட்சி பாராட்டு !

pmmodi in thai - 2026

இந்திய நலன் காக்கும் முடிவெடுத்த மோடிக்கு இந்து மக்கள் கட்சி பாராட்டு ! வாழ்த்துக்கள் ! தமிழ் திரு அர்ஜுன் சம்பத் அறிக்கை!

RCEP தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என்று தெரிவித்தார் பிரதமர் மோடி…

இந்தியா முன்வைத்த ஆலோசனை களுக்கு தீர்வு காட்டப் படவில்லை என்பதால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்து விட்டது என்று தாய்லாந்து பாங்காங் நகரில் நடைபெற்ற 16 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார்…

சீனாவின் தயாரிக்கப்படும் மலிவான வேளாண் தொழில்முறை பொருட்களை இந்திய சந்தையில் குவிக்க சீனா திட்டமிட்டது முறியடிக்கப்பட்டது…

காங்கிரஸ் ஆட்சியில் தான் மிகப்பெரிய தவறு இழைக்கப்பட்டது…
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தான் ஆசியான் கூட்டமைப்பு புருணே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகளுக்கு இந்தியாவில் 74% சந்தை வாய்ப்பை தடையின்றி வாரி வழங்கியுள்ளது…

ஆனால், இந்தியாவுக்கு 50% வாய்ப்புகளை மட்டும் அந்த நாடுகளில் கிடைத்தது…

சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்ட காங்கிரஸ் ஆட்சியில்…
2007 ம் ஆண்டு சீனாவுடன் தடையற்ற வர்த்தகம் குறித்து வாய்ப்பை ஆராய முன்வந்து ஒப்புக் கொண்டது…

2011-2012 ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், சீனாவுடன் இணைந்து RCEP ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டது…

இப்படி காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவால் RCEP நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருகிறது…

காங்கிரஸ் ஆட்சியின் தவறான முடிவால் தான் இதன் தாக்கம் உள்நாட்டு தொழில்துறையில் இப்போதும் நீடித்து வருகிறது…

இந்தியாவின் கோரிக்கைகள்…

  • சீனாவில் மற்றும் பிற நாடுகளிலும் இந்திய உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்த வாய்ப்புகள் தர வேண்டும்…
  • இந்தியாவில் உள்நாட்டு தொழிற்சாலைகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்…
  • தடையற்ற வர்த்தகம் என்று இந்தியாவில் பொருட்களை குவிக்க சீனாவிற்கு தராமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்…
  • RCEP ஒப்பந்தத்தில்…
    தடையற்ற வர்த்தகம் என்ற பெயரில் இந்திய சந்தையில் பிற நாடுகள் பொருட்களை குவிக்க இயலாத வகையில் பாதுகாப்பு நுட்ப ஒப்பந்தம் வேண்டும்…

இந்த கோரிக்கையை மற்றும் நிபந்தனைகளை ஏற்க மறுப்பதால் இந்திய RCEP ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்தார்…

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் RCEP ஒப்பந்தம் ஏற்க முடியாது என்று தெரிவித்தார் மோடி…

எந்த ஒரு நாடும் பொருட்களை குவித்தால் அதன் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் ஷரத்து சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் பிரதமர் மோடி…

RCEP ஒப்பந்தப்படி அனைத்து 16 உறுப்பினர் நாடுகளுக்கும் MNF-
Most Favoured Nation அந்தஸ்து தர முடியாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக மறுத்துள்ளார்…

இந்தியாவின் விவசாய உற்பத்தி பொருட்களை, சிறு, குறு, நடுத்தர உற்பத்தி தொழிற்சாலைகள் பாதுகாக்கும் வகையில் RCEP ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா திட்டவட்டமாக மறுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது…
சீனாவிற்கு பாடம் புகட்டி இந்திய நலன் காத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

  • அர்ஜுன் சம்பத் (தலைவர் இ. ம. க.)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories