December 6, 2025, 12:00 AM
26 C
Chennai

காவியில் இருந்து பச்சைக்கு! நிறம் மாறிய சேனா!

sivasena - 2025

இந்துத்துவா… வீர சாவர்க்கர்… அயோத்தி கோவில்… இந்து மகா சபா… பேரிலேயே சிவபெருமான்.. இப்படி இருந்ததுதான் சிவசேனா! சிவனின் சேனைகள்! அப்படித்தான் கட்சியைக் கட்டமைத்தார் பால் தாக்கரே!

சொல்லப் போனால், ஹிந்துத்துவ சிந்தனைகளை பெருமளவில் கைவிட்டு, மற்ற கட்சிகளைப் போல் சிறுபான்மை வாக்கு வங்கியைக் குறிவைத்து இயங்கிக் கொண்டிருப்பது பாஜக., ஆனால் பாஜகவை விட மிகுந்த ஹிந்துத்துவப் பிடிப்புள்ள கட்சியாக இருந்ததும் சிவசேனாதான். அதன் நிறம் காவி. காவி ஒன்றே! பாஜக.,வோ தனது கட்சிக் கொடியிலேயே பச்சையை இச்சையுடன் கலந்து கொண்டது. ஆனால், காவி சிவசேனை இன்று கிறிஸ்துவப் பின்னணி கொண்டது என்று இதுகாறும் தம்மால் வசை பாடப்பட்ட, இஸ்லாமியர்களுக்கான கட்சி என்று குற்றம்சாட்டபட்ட காங்கிரஸுடன் கைகோத்து… தன்னை பச்சையாக மாற்றிக் கொண்டிருக்கிறது சிவசேனா. நிறம் மாறிய பூக்களாக தடம் மாறிப் போயுள்ளது சிவசேனா!

இதனால்தான் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, இரு கட்சிகளும் முதல்வர் பதவியில் சமரசம் செய்து கொண்டு, ஹிந்துத்துவ சித்தனைகளை தோற்கடிக்காமல் இருக்க வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்.

பால் தாக்கரே – பேரச்சொன்னாலே சும்மா அதிருதில்லே… என்று சொல்லுமளவுக்கு அதிரடி அரசியலில் ஆர்வம் காட்டியவர். மராட்டியச் சிங்கம் என்று பேர் வாங்கினார். வீரசிவாஜி, வீரசாவர்க்கர் என்று மராட்டிய மண்ணின் வீரம் விளைந்த போராளிகளின் வரிசையில் பால்தாக்கரேவும்கடந்த நூற்றாண்டில் மக்கள் மனத்தில் இடம் பிடித்தார்.

மராட்டியம் பேசியவர். ஹிந்தி எதிர்ப்பையும் அவ்வப்போது கைக்கொண்டவர். மராட்டியம் மராட்டியர்களுக்கே என்று முழக்கமிட்டவர். தமிழர்கள் உள்ளிட்ட நாட்டின் வேற்று மாநிலத்தவர் ஆதிக்கம் மும்பையில் அதிகரித்த போது, தேசத்தின் ஒற்றுமை என்பதையும் கவனியாமல், மாநிலத்தின் நலன் என்ற மராட்டியத்தின் குறுகிய வட்டத்திலேயே நின்று அரசியல் செய்தவர்.

அயோத்தி ராமர் கோயிலா… காஷ்மீர பண்டிதர்கள் பால் இரக்கம் காட்டுவதா… பாகிஸ்தானியர்களை வசை பாடுவதா… எல்லாவற்றிலும் பால் தாக்கரே தனித்து நின்றார்.

மும்பைக்கு வந்து பாகிஸ்தானியர்கள் கிரிக்கெட் ஆடுவதைக் கூட முன்னணியில் நின்று எதிர்த்தவர். அவரது கட்சியினர் ஒரு படி மேலே போய்… அப்போது மும்பை வாங்க்டே மைதானத்தின் ஆடுகளத்தையும் சேதப் படுத்தினர். அதையும் சிவசேனை தனது சாதனையாகப் பார்த்தது.

எந்தக் காலகட்டத்திலும் நானோ எனது வாரிசுகளோ ஆட்சிப் பொறுப்பில் அமர மாட்டோம் என்று சூளுரைத்தவர் பால் தாக்கரே!

இந்துத்துவப் போராளியான பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேதான் மகாராஷ்டிரத்தின் முதல்வர் நாற்காலியில் கனவு கண்டு, இந்துத்துவக் கூட்டணிக் கரமான பாஜக.,வை உதறினார். பச்சை காங்கிஸுடன் கை கோத்து, காவிச் சாயத்தில் இச்சையுடன் இப்போது பச்சையைக் கலந்து விட்டார் என்று வருத்தப் படுகின்றனர் மகாராஷ்டிரத்து இந்துத்துவ சிந்தனையாளர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories