காவியில் இருந்து பச்சைக்கு! நிறம் மாறிய சேனா!

sivasena - 2026

இந்துத்துவா… வீர சாவர்க்கர்… அயோத்தி கோவில்… இந்து மகா சபா… பேரிலேயே சிவபெருமான்.. இப்படி இருந்ததுதான் சிவசேனா! சிவனின் சேனைகள்! அப்படித்தான் கட்சியைக் கட்டமைத்தார் பால் தாக்கரே!

சொல்லப் போனால், ஹிந்துத்துவ சிந்தனைகளை பெருமளவில் கைவிட்டு, மற்ற கட்சிகளைப் போல் சிறுபான்மை வாக்கு வங்கியைக் குறிவைத்து இயங்கிக் கொண்டிருப்பது பாஜக., ஆனால் பாஜகவை விட மிகுந்த ஹிந்துத்துவப் பிடிப்புள்ள கட்சியாக இருந்ததும் சிவசேனாதான். அதன் நிறம் காவி. காவி ஒன்றே! பாஜக.,வோ தனது கட்சிக் கொடியிலேயே பச்சையை இச்சையுடன் கலந்து கொண்டது. ஆனால், காவி சிவசேனை இன்று கிறிஸ்துவப் பின்னணி கொண்டது என்று இதுகாறும் தம்மால் வசை பாடப்பட்ட, இஸ்லாமியர்களுக்கான கட்சி என்று குற்றம்சாட்டபட்ட காங்கிரஸுடன் கைகோத்து… தன்னை பச்சையாக மாற்றிக் கொண்டிருக்கிறது சிவசேனா. நிறம் மாறிய பூக்களாக தடம் மாறிப் போயுள்ளது சிவசேனா!

இதனால்தான் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, இரு கட்சிகளும் முதல்வர் பதவியில் சமரசம் செய்து கொண்டு, ஹிந்துத்துவ சித்தனைகளை தோற்கடிக்காமல் இருக்க வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

பால் தாக்கரே – பேரச்சொன்னாலே சும்மா அதிருதில்லே… என்று சொல்லுமளவுக்கு அதிரடி அரசியலில் ஆர்வம் காட்டியவர். மராட்டியச் சிங்கம் என்று பேர் வாங்கினார். வீரசிவாஜி, வீரசாவர்க்கர் என்று மராட்டிய மண்ணின் வீரம் விளைந்த போராளிகளின் வரிசையில் பால்தாக்கரேவும்கடந்த நூற்றாண்டில் மக்கள் மனத்தில் இடம் பிடித்தார்.

மராட்டியம் பேசியவர். ஹிந்தி எதிர்ப்பையும் அவ்வப்போது கைக்கொண்டவர். மராட்டியம் மராட்டியர்களுக்கே என்று முழக்கமிட்டவர். தமிழர்கள் உள்ளிட்ட நாட்டின் வேற்று மாநிலத்தவர் ஆதிக்கம் மும்பையில் அதிகரித்த போது, தேசத்தின் ஒற்றுமை என்பதையும் கவனியாமல், மாநிலத்தின் நலன் என்ற மராட்டியத்தின் குறுகிய வட்டத்திலேயே நின்று அரசியல் செய்தவர்.

அயோத்தி ராமர் கோயிலா… காஷ்மீர பண்டிதர்கள் பால் இரக்கம் காட்டுவதா… பாகிஸ்தானியர்களை வசை பாடுவதா… எல்லாவற்றிலும் பால் தாக்கரே தனித்து நின்றார்.

மும்பைக்கு வந்து பாகிஸ்தானியர்கள் கிரிக்கெட் ஆடுவதைக் கூட முன்னணியில் நின்று எதிர்த்தவர். அவரது கட்சியினர் ஒரு படி மேலே போய்… அப்போது மும்பை வாங்க்டே மைதானத்தின் ஆடுகளத்தையும் சேதப் படுத்தினர். அதையும் சிவசேனை தனது சாதனையாகப் பார்த்தது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

எந்தக் காலகட்டத்திலும் நானோ எனது வாரிசுகளோ ஆட்சிப் பொறுப்பில் அமர மாட்டோம் என்று சூளுரைத்தவர் பால் தாக்கரே!

இந்துத்துவப் போராளியான பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேதான் மகாராஷ்டிரத்தின் முதல்வர் நாற்காலியில் கனவு கண்டு, இந்துத்துவக் கூட்டணிக் கரமான பாஜக.,வை உதறினார். பச்சை காங்கிஸுடன் கை கோத்து, காவிச் சாயத்தில் இச்சையுடன் இப்போது பச்சையைக் கலந்து விட்டார் என்று வருத்தப் படுகின்றனர் மகாராஷ்டிரத்து இந்துத்துவ சிந்தனையாளர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories