ஜல்லிக்கட்டை பாரம்பரியத் தன்மையில் இருந்து பிரித்துவிடாதீர்

ஜல்லிக்கட்டு என்பது, தமிழர்களின் வீர விளையாட்டு என்று எவன் சொன்னானோ தெரியவில்லை! அது இன்றைய நவீன விளையாட்டு அல்ல… ஆன்மிகச் சடங்கு!

ஏறு தழுவுதல் எனும் பெயரில் நமக்காக உழைக்கும் காளைக்கும் மனிதனுக்குமான நெருக்கத்தைக் காட்டுவது. தட்டிக் கொடுத்து, கட்டித் தழுவி, அன்பைக் காட்டி, குழந்தைகளுடன் விளையாடுவதைப் போல் அன்புள்ளத்துடன் அணுக வேண்டிய ஒன்று – ஏறுதழுவுதல்.

இது தமிழர்களின் பண்டைய கிராமத்து தேவதைகளின் கால் தொட்டு, அனுமதி கேட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்து, பூஜை செய்து, வணங்கி வழிபட்டு பின்னர் நடத்தப் படும் ஆன்மிகச் சடங்கு. கோயில் காளையை முன்னிட்டு அதன் தொடர்ச்சியாக காளைகளைக் கட்டவிழ்த்து ஓடிப் பிடித்து விளையாடி அடக்கும் செயல்… சொல்லப் போனால் நம் வீட்டுக் குழந்தைகளுடன் விளையாட்டுக் காட்டி மல்லுக்கு நிற்பதைப் போலானது!

ஆனால், விளையாட்டு என்ற பெயரில், கோயில்களின் ஆன்மிக வழியில் இருந்து அதனைப் பிரித்தால்… விபரீதங்கள் ஏற்பட்டு விடுகின்றன. நாம் கோயில் காளைக்கு பழமும் பொங்கலும் இன்னும் பிற உணவுப் பொருட்களும் கொடுத்து வணங்குவோம். மனிதனை மிருகமாக்கும் சாராயத்தை அதற்குக் கொடுத்து உசுப்பேற்ற மாட்டோம். இங்கே தான் மிருக வதை வருகிறது. இந்து சமய கோயில் வழிபாட்டு முறைகளில் இருந்து இதனைப் பிரித்து, வேற்று மதப் பின்னணிகளில் வைக்கும் போது, இதன் தன்மை கெட்டு… இப்போது நாம் சந்தித்த அனைத்துப் பிரச்னைகளும் தலைதூக்குகிறது.

இன்னும் விளையாட்டு என்ற வகைப்பிரிவில் இறங்கிவிட்டால், நவீன விளம்பரதாரர்கள் காத்திருக்கிறார்கள். சென்னை சூபர்கிங்க்ஸ் போல் உலகம்பட்டி மாடர்ன் மாடூஸ், செவலம்பட்டி சேட்டை காளைஸ், அகிலம்பட்டி அடங்கா ரூடர்ஸ், பனையம்பட்டி பணியா பாய்ஸ், அலங்காநல்லூர் அசத்தல் தெறீஸ் என்றெல்லாம் டீம் போட்டு, டிவி பொட்டியில் விளம்பரம் செய்து, லைவ் ஷோவெல்லாம் வைத்து, நம் கலாசாரத்தின் விழுதுகளையே வெட்டி எறிந்து நாசப் படுத்தி விடுவார்கள்…

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

எனவே மீண்டும் ஒரு முறை வேண்டுகோள்…
என் இனிய தென்னாட்டு மக்களே!
காளைகளை இந்து சமய ஆன்மிக விழாவில் இருந்து பிரித்து விடாதீர்கள்.
டிவி.,க்காரர்களை உள்ளே விடாதீர்கள்.
நீங்களும் போதை ஏற்றி, மாடுகளுக்கும் போதை தராதீர்.
விளம்பர யுகம் இது எச்சரிக்கை எச்சரிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories