குடியுரிமைச் சட்டத்தை விடுங்க… என்பிஆர்., என்ஆர்சி.,யை கவனிங்க..!

caa nrc npr - 2026

குடியுரிமை திருத்தச்சட்டத்தை விட தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) இவை தான் கள்ளக்குடியேறிகளுக்கு வைக்கப்பட்ட ஆப்பு. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு சரிபார்க்கப்பட்டு போலி ஆதார் போலி ரேஷன் இவை பிடிபட்டால் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆட்களுக்கு வளைகுடா உள்ளிட்ட உலக நாடுகளில் ஆப்பு காத்திருக்கிறது.

இன்று வரை என்னதான் படித்திருந்தாலும் (இங்கிலாந்து, அமெரிக்க படிப்புகள் தவிர) பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆட்களுக்கு வெளிநாடுகளில் அலுவலகங்களில் பெரிய பொறுப்பான வேலைகளோ, பிரமோஷனோ லேசில் தருவதில்லை.

எடுபிடி போல வைத்துக் கொள்கிறார்கள். கணக்கு வழக்கு, நிர்வாகம் போன்றவற்றில் இந்தியர்களுக்கு கிடைக்கும் முன்னுரிமை பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆட்களுக்கு இல்லை.

விஞ்ஞானம் படித்திருந்தாலும் அப்துல் காதர் கான் மாதிரி களவாணியாக இருக்க மாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று உலக நாடுகள் யோசிக்கின்றன. ஆகவே இவர்களில் பலர் போலி இந்திய பாஸ்போர்ட்களில் வேலைக்குப் போய்வந்தனர்.

இப்போது உலக நாடுகள் சோதனைகளைக் கடுமையாக்கி விட்டன. போலி பாஸ்போர்ட்களில் சிக்கினால் கண், கைரேகை என்று பதிவு எடுத்துக்கொண்டு வேறு பெயரில் வந்தாலும் புற மண்டையில் அடித்துப் பத்திவிடுகிறார்கள்.

இதைச் சமாளிக்க இவர்கள் இந்நியா வந்து ரேஷன் அட்டை, ஆதார், வாக்காளர் அட்டை என்று பெற்றுக் கொண்டு பாஸ்போர்ட் எடுத்தனர். தேர்தல் நேரத்தில் பலர் இங்கே வந்து வாக்களித்தனர். வாக்குவங்கி பெருகியதில் செக்கூலர் கட்சிகளுக்கும் மகிழ்ச்சி.

இவர்களை குஷிப்படுத்த வெளிநாட்டார் சட்டத்தை திருத்துவதாக 2006ல் சோனியா அசாமில் பிரச்சாரம் செய்தார். மற்ற செக்கூலர் கட்சியினர் ஆதரித்தனர். அசாம் மக்கள் எதிர்த்த போதும் கள்ளக்குடியேறிகளுக்கு கொண்டாட்டம்.

ஆனால் தற்போது உச்சநீதிமன்ற மேற்பார்வையில் தேசிய குடிமக்கள் பதிவேடு அசாமில் சரிபார்க்கப்பட்ட போதிருந்தே அவர்கள் வயிற்றில் புளி கரைய ஆரம்பித்தது. இப்போது 2010ல் சரிபார்க்கப்பட்ட தேசிய மக்கள்தொகைப் பதிவேடு இப்போது பத்தாண்டுகளுக்கு ஒரு முறைக்கான சரிபார்த்தல் 2020ல் தொடங்கப்படுகிறது.

கள்ளக்குடியேறிகளுக்கு பிழைப்பு போகுமே என்ற பயம், செக்கூலர்களுக்கும் ஓட்டு வங்கி திவாலாகுமே என்ற பயம். கள்ளத்தனமாக வந்தவர்கள் பிடிபட்டால் அவர்கள் நாட்டுக்குத் திரும்பிப் போவது ஒரு விஷயம்.

அதுவரை பாதுகாப்பு முகாமில் வைக்கப்படுவார்கள். ஓட்டு, ரேஷன், ஆதார், பாஸ்போர்ட் எதுவும் கிடையாது. அகதி என்ற கதி கூட கிடையாது.

சொந்த நாடு தவிர வேறு நாட்டுக்குப் போக முடியாது. பிழைப்பு ஃபணால். ஓட்டு போட முடியாவிட்டால் இவர்களால் சட்சிகளுக்குப் பிரயோசனமில்லை.

இதை எல்லாம் கோர்வையாக யோசித்தால் இந்தப் போராட்டங்கள் ஓட்டு வங்கியைத் தக்கவைக்கவும், சொந்த நாட்டுப் பெயர் சொல்லிப் பிழைக்க முடியாமல் போலியாக இந்தியன் என்று பிழைத்த பிழைப்பைத் தொடரவுமே என்பது புரியும்.

பரம்பரை இந்தியர்களுக்கு இதில் பாதிப்பில்லை. பஞ்சத்துக்கு இந்தியன் என்பவர்களுக்கே பாதிப்பு.

எதிர்ப்பு என்று ஒண்ட வந்த பிடாரிகள் ஊர்ப்பிடாரிகளை மிரட்டுகின்றன. எந்த ஊர்ப்பிடாரிக்கும் இதில் பாதிப்பில்லை என்றாலும் ஊர்ப்பிடாரிகள் சில ஒண்ட வந்த பிடாரிகளுக்கு ஒத்து ஊதுகின்றன. இவைகளோடு சேராத ஊர்ப்பிடாரிகள் பதிலடி கொடுத்தால் தாங்க முடியாது.

  • ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories