ஆன்மிக வேடதாரிகள்!

8 write down8 - 2026

*இன்று எந்தத் தொலைக்காட்சி அலைவரிசையும் ஆன்மிகத்தைப் புறக்கணிக்க இயலவில்லை. காலை நேரங்களில் ஏறக்குறைய எல்லா அலைவரிசைகளிலும் ஆன்மிக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

தல புராணங்கள், பக்திப் பாடல்கள், சுவாமிக்கு நிகழ்த்தப்படும் அபிஷேக ஆராதனைகள், குடமுழுக்கு நேரடி வர்ணனைகள் இவற்றோடு ஏராளமான ஆன்மிகச் சொற்பொழிவாளர்களும் பல நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்கிறார்கள்.

ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்கு முன்பை விட இப்போது அதிகமாகக் கூட்டம் வருகிறது.

ஆனால் இந்தச் சொற்பொழிவுகள் மக்களிடையே உண்மையான பக்தி உணர்வையும் தத்துவச் சிந்தனைகளையும் தோற்றுவிக்கின்றனவா என்பது கேள்விக்குறி. ஒருசிலர் தங்கள் ஆரவாரமற்ற கருத்தாழம் நிறைந்த உரைகளால் சிறந்த ஆன்மிகத் தொண்டாற்றி வருகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

என்றாலும் பொதுவாக இந்த ஆன்மிகச் சொற்பொழிவுத் துறையில் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படைக் கோட்பாடுகளை எல்லாச் சொற்பொழிவாளர்களும் கடைப்பிடிக்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதில்.

முக்கியமாகக் கருத்தை எடுத்துச் சொல்லும் முறை. பக்தி உணர்வுடையவர்களின் நெஞ்சங்களில் பக்தி அலையை எழுப்ப வேண்டும் என்பதே இத்தகைய சொற்பொழிவுகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

ஒரு சொற்பொழிவாளர் பாற்கடலில் பரந்தாமனுக்கு ஸ்ரீதேவியும் பூதேவியும் பாதசேவை செய்து கால்பிடித்து விடும் காட்சியை வர்ணிக்கும்போது, அவர்கள் திருமாலுக்கு மசாஜ் செய்தார்கள் என்று பேசினார். தன் பாதங்களில் சரணடைபவர்களைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து கரைசேர்க்கும் பரமனைப் பற்றிப் பேசும்போது இப்படியா கொச்சை மொழியைப் பயன்படுத்துவது?

இன்னொரு சொற்பொழிவாளர் `அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்` என்ற கம்பராமாயணக் காட்சியை விவரிக்கும்போது, ராமனும் சீதையும் ஒருவரையொருவர் சைட் அடித்துக் கொண்டார்கள் என்று பேசினார். பாற்கடலை விட்டுப் பிரிந்து மண்ணுலகம் வந்த தெய்வீகக் காதலர்களின் புனித உணர்வை இப்படியா விவரிப்பது?

வேறொரு சொற்பொழிவாளர் தான் நாத்திகனா ஆத்திகனா என்று தனக்கே தெரியவில்லை எனத் தன் ஆன்மிகச் சொற்பொழிவின் இடையே குறிப்பிட்டார். இந்த சந்தேகம் அவருக்கே இருக்கும்போது அவர் ஆன்மிக மேடைகளுக்கு வருவானேன்? முதலில் தன்னைத் தெளிவுபடுத்திக் கொண்டு தன் இயல்புக்கேற்ற மேடைகளில் அவர் பேசலாமே?

ஆன்மிகத்தின் மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று தனிமனித ஒழுக்கத்தை வளர்ப்பதுதான். தனிமனித ஒழுக்கமில்லாதவர்கள் ஆன்மிக மேடைகளைத் தாங்களாகவே தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டாலும், கூட்ட அமைப்பாளர்கள் அத்தகையவர்களை ஆன்மிக மேடைகளில் ஏற்றாமலிருப்பது நல்லது. ஆன்மிகச் சொற்பொழிவாளர்களைத் தெய்வம் போல எண்ணும் மக்கள் கூட்டம் ஒன்று தமிழகத்தில் இருக்கிறது. அவர்களை ஏமாற்றுவது சரியல்ல.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

`இப்படியெல்லாம் பேசக் கூடாது` என்று சொன்னால் எப்படியெல்லாம் பேச வேண்டும் என்ற கேள்வியும் எழும். அதற்கான பதில், கிருபானந்த வாரியாரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான்.

வாரியார் பாமரர்க்கும் புரியக் கூடிய மொழியில்தான் பேசினார். பாமரர்களை ஏராளமான எண்ணிக்கையில் அவரது சொற்பொழிவு கவர்ந்தது. ஆனால் பக்தி உணர்வே அவரது பேச்சின் அடிநாதமாக இருந்தது. காரணம் அவரே பெரிய பக்தராக வாழ்ந்தார்.

தாங்கள் பின்பற்றாத கோட்பாடுகளை மற்றவர்களைப் பின்பற்றச் சொல்லி ஆன்மிகச் சொற்பொழிவு செய்பவர்கள் முன்பும் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிச் சொல்லும்போது ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னார்: `பஞ்சாங்கத்தில் மழை எப்போது வரும் என்று போட்டிருக்கும். ஆனால் பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராது!` என்று.

பரமஹம்சரே ஒரு மிகச் சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளர்தான். அவரது உரைகளால் கவரப்பட்டுத்தான் விவேகானந்தர், பரமஹம்சரின் அமுத மொழிகளைத் தொகுத்த மகேந்திரர் போன்ற உன்னத ஆன்மிகவாதிகள் உருவானார்கள்.

தமிழின் ஆன்மிகச் சொற்பொழிவுத் துறையை வளர்த்த முன்னோடிகளில் ஒருவர் வள்ளலார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். வள்ளலார் மரபில் ஆன்மிகச் சொற்பொழிவுத் துறை வளர வேண்டும்.

ALSO READ:  இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

அரசியல், சினிமா, இலக்கியம் போன்ற துறைகளைப் போன்றதல்ல ஆன்மிகத் துறை. மற்ற துறைகளில் வேடதாரிகள் அனுமதிக்கப்படலாம். (சினிமாத் துறை வேடதாரிகளுக்கென்றே உருவானது!)

ஆனால் ஆன்மிகத் துறையில் பசுத்தோல் போர்த்திய புலிகளை அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால் கடும் துயரங்களுக்கு ஆட்பட்டு ஆன்மிகத்தில் சரணடைய விரும்பும் அன்பர்கள் தவறாக வழிநடத்தப்படும் அபாயம் இருக்கிறது. இதை உணரவேண்டிய காலகட்டம் இது

  • திருப்பூர் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories