தினசரி ஒரு வேத வாக்கியம்: 53. வெறுப்பில்லாமல் வாழ்வோம்!

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

53. வெறுப்பில்லாமல் வாழ்வோம்!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“மா வித்விஷா வஹை” – கேனோபநிஷத் 

“பரஸ்பரம் துவேஷம் இல்லாமல் இருப்போம்!”

இது குருவும் சீடர்களும் கூறிக் கொள்ளும் சாந்தி பாடமாக புகழ்பெற்ற கூற்று.

கல்வி கற்றதற்கு பயன் வெறுப்பின்றி இருப்பதே!  ஒருவர் மேல் மற்றவருக்கு தனிப்பட்ட கருத்து இருப்பதே துவேஷம். அந்த துவேஷத்தையே வெறுக்கும் பண்பாடு நம்முடையது. வெறுக்கும் குணத்தை வென்று விட்டால் அனைத்தையும் வென்றது போலத்தான். ஒவ்வொரு சிறந்த மார்க்கத்திற்கும் அடிப்படை இதுவே! 

துவேஷம் என்ற எதிர்மறை குணத்திற்கு அசூயை, கோபம், பகை, இம்சை, எதிர்ப்பு இவையனைத்தும் பிள்ளைகள். இந்த கிழங்கைக் கிள்ளி எறிந்தால் போதும். வேற்றுமை எண்ணங்கள் என்னும் மரம் வேரோடு அழிந்து விடும்.

அதனால்தான் நம் தேசம் துவேஷ குணத்தை துவேஷிக்கிறது. படையெடுத்து வந்த எதிரிகளை போரில்எதிர்கொள்வது துவேஷமாகாது. தானாக பகையை வளர்த்துக் கொண்டு தாக்குவது துவேஷம். நம் இருப்பையும் ஆத்மாவையும் அழிக்க நினைக்கும் தீயவர்களிடம் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சி துவேஷமல்ல. 

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

நாமாகவே பிறரை அழிக்க நினைத்தால் அதுவே வெறுப்பு. அத்தகைய வெறுப்பு நம் பாரத பூமியில் இல்லை. நம் தேசக் காற்றிலும் இல்லை. நம் தர்மத்திலும் இல்லை அதனால்தான் பாரததேசம் அனைவரையும் தாயைப் போல் ஆதரித்து ஏற்றது. சகித்துக் கொண்டது. அமைதியாக பொறுத்துக் கொண்டது. அனைத்திலிருந்தும் நல்லவற்றை ஏற்று நன்மையைப் பகிர்ந்தது. ஆக்கிரமித்தவர்களைக் கூட அரவணைத்துக் கொண்டது.

பக்தி மார்க்கத்தில் கூட வெறுப்பின்மையே முக்கிய குணம்  என்கிறார் கீதாசார்யன். “அத்வேஷ்டா சர்வபூதானாம் மைத்ர: கருண ஏவச”.

ஒரு விஷயம் நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம் அபிப்பிராய பேதம் இருக்கலாம் ஆனால் அது வெறுப்புக்கு வழிவகுக்கக் கூடாது. ஒருவரின் வழிமுறை ஆபத்தானதாகவோ அறியாமையாகவோ நமக்குத் தோன்றலாம் அதிலிருந்து நம்மையும் நம் வாழ்வாதாரத்தையும் காத்துக் கொள்ள முயற்சி செய்யலாம். ஆனால் துவேஷத்தோடு பகைமையை வளர்த்துக் கொள்ளலாகாது. 

ஒரு வர்க்கத்தில் சிலரின் புரிதலின்மையும் தீய வழி முறையும் சமுதாய நலனுக்கு தீங்கு விளைவிக்கலாம். அதிலிருந்து கவனமாக சமுதாயத்தை காக்கும் முயற்சி செய்வதில் தாமதிக்கக் கூடாது. ஆனால் அந்த வர்க்கத்தினர் அனைவரின் மீதும் வெறுப்பை வளர்த்துக் கொள்வது சரியல்ல.

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!
uppu moottai
uppu moottai

வெறுப்பு ஒரு வர்க்கத்தையோ ஒரு அமைப்பையோ சேர்ந்தது அல்ல. அது தனி மனிதனைச் சேர்ந்தது. மனிதனுக்கு மனிதன் வேறுபாடு இருக்கும். ஜாதி, மொழி, மதம், குலம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு மனிதனிடம் இருக்கும் தனிப்பண்பு மற்றொரு மனிதனுக்கு ஒத்துவராது என்று தோன்றலாம். அதற்காக அது வெறுப்பாக மாறக்கூடாது.

நட்பு, கருணை இவற்றையே உள்ளத்தின் இயல்புகளாக கொண்டு நம்மை வெறுப்பவரிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு தகுந்த விதத்தில் பதில் வினையாற்றி எதிர் கொள்ள வேண்டும். நம் தேசம் பண்டைக்காலம் முதல் போதித்து வரும், கடைப்பிடிக்கத் தகுந்த வழிமுறை இது.

பிடித்த விஷயத்தை அன்போடு ஆதரித்தால் அது நம் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல் பிடிக்காத விஷயத்தை விட்டு விலக வேண்டுமே தவிர அதை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் அந்த வெறுப்பு கூட ஒரு இயல்பாக மாறி நம் மனதை கீழ்மையாக மாற்றிவிடும். 

அன்பு, இரக்கம் இவை சாதிக்கக் கூடியவற்றை வெறுப்பு என்றுமே சாதிக்க இயலாது. அடுத்தவரின் மதம், தர்மம் போன்ற வழிமுறைகள் எதுவும் பயனற்றது என்றும் தம்முடையதே சிறந்தது என்றும் தீய போதனை செய்து ஆக்கிரமிக்கும் சுபாவம் கொண்ட மதங்கள் பல உள்ளன. அந்த சுபாவங்கள் துவேஷ பீஜத்திலிருந்து முளைவிட்ட விஷ விருட்சங்கள்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

ஆனால் பிறரை ஆக்கிரமிப்பதற்கு நம் தர்மத்தில் தடை உள்ளது. சொந்த தர்மத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுவதைக் கூட நாம் அங்கீகரிப்பதில்லை. ஏனென்றால் ஆக்கிரமிப்பது, பிற மதத்தை ஏற்பது இவ்விரண்டுமே வெறுப்பினால் பிறப்பவையே! 

இதில் முதலாவது… பிறர் மீது உள்ள துவேஷத்தால் நிகழ்வது. இரண்டாவது நம் மீது நமக்குள்ள துவேஷத்தால் நிகழ்வது. இரண்டுமே ஆபத்தானவை. வெறுப்பு குணம் தர்மத்திற்கு பிரதான எதிரி. அதுவே பாரதிய தரிசனங்கள் தெரிவிக்கும் முக்கிய கருத்து.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Entertainment News

Popular Categories