தினசரி ஒரு வேத வாக்கியம்: 63. தானம் எவ்வாறு செய்ய வேண்டும்?

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

63. தானம் எவ்வாறு செய்ய வேண்டும்?

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“ஸ்ரத்தயா தேயம்” – யஜுர்வேதம்
“எது கொடுத்தாலும் சிரத்தையோடு கொடுக்க வேண்டும்”

நாம் எவ்வாறு தானம் செய்ய வேண்டும் என்பது பற்றி வேத விஞ்ஞானம் சிறந்த புரிதலை அளித்துள்ளது.

பாத்திரம் அறிந்து தானம் செய்ய வேண்டும் என்று கூறும் போதே அதனை சிரத்தையோடு கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறது. தானம் என்னும் செயலால் இருப்பவரும் இல்லாதவரும் வாழும் சமுதாயத்தில் சற்றாவது சமநிலை நிலவும்.

செல்வம் இருப்பது சுக போகத்திற்காக அல்ல. அதில் சிறு பகுதியையாவது பாத்திரமறிந்து பகிர வேண்டும் என்று எடுத்துரைக்கிறது வேத கலாசாரம். இதன்மூலம் செல்வந்தன் என்ற கர்வம் குறையும் வாய்ப்புள்ளது. தனம் என்னுடையது என்ற கர்வத்தோடும், நான் தானம் செய்கிறேன் என்ற பெருமையோடும் தானம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கிறது வேதம்.

ஸ்ரத்தயா தேயம்” என்ற வாக்கியத்தோடு கூட “”பியா தேயம்“, ஹ்ரியா தேயம்“என்றும் உபதேசிக்கிறாள் வேதமாதா.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

என்னால் வேண்டிய அளவு கொடுக்க இயலுகிறதோ இல்லையோ! என்ற அச்சமும், இத்தனை குறைவாகத்தான் கொடுக்கிறேன் என்ற நாணமும் தானம் செய்பவருக்கு இருக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

தானமளிப்பவர் தாழ்ந்தும், பெறுபவரை பரமேஸ்வரனாகக் கருதியும் அளிப்பது என்பது மிக உயரிய சிந்தனை. இது கொடுப்பவரிடம் வரக்கூடிய அகங்காரத்தை நீக்கக்கூடிய வழிமுறை. பெறுபவர் கூட கிருஷ்ணார்ப்பணம் என்றோ சிவார்ப்பணம் என்றோ கூறி ஏற்கிறார். அவருக்கும் கர்வமோ, பேராசையோ ஏற்படக்கூடாது என்ற கருத்தும் இதில் உள்ளது.

செல்வமிருந்தும் தானம் செய்யாதவர், ஏழ்மையில் இருந்தும் தவம் செய்யாதவர்… இருவரும் வீண் என்று வேதநூல் போதிக்கிறது. 

annapurnamandir
annapurnamandir

தரித்திரம் நிரம்பியவர் பிறர் செல்வத்தின் மேல் ஆசைகொண்டு யாசகம் செய்து வாழக்கூடாது. தன் காலத்தை தவத்தில் அதாவது ஸ்வதர்மத்தை மேற்கொண்டு அனுஷ்டானத்தில் ஈடுபட வேண்டும் என்று எச்சரிக்கிறது.

அதுவரை பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தில் பயின்ற சீடனுக்கு (ஸ்நாதகம்) கல்வி முழுமையடைந்ததை அறிவித்து மேற்படி உபதேசங்களை அளித்து,  இல்லறத்தை ஏற்பதற்கு அனுமதி அளிப்பார் குரு. அந்த சந்தர்ப்பத்தில்  “ஸ்ரத்தயா தேயம்” என்ற  உபதேசத்தை அளிப்பார்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

இல்லற வாழ்க்கை என்பது சமுதாயத்தில் ஒருவர் தேவையை மற்றவர் மூலம் தீர்த்துக் கொள்ளும் அமைப்பு. கொடுக்கல்-வாங்கல், பரிவர்த்தனை என்பது சமுதாய வாழ்வில் மறுக்க முடியாத முக்கியத் தேவை.  இதில் சொந்த லாபத்திற்காக நிகழும் லேவாதேவிகள் ஒருபுறம் இருக்க, உலகியல் பயன்களுக்காக ஆசைப்படாமல் செய்யும் கொடையே தானம் எனப்படும்.

இதன் மூலம் மனிதனின் கண்ணோட்டம் உலகியலுக்கு அப்பாற்பட்டு ஆலோசிக்க முடியும். அந்தரங்கத் தூய்மைக்கு இது உதவுகிறது. ஆன்மீக நலன் என்ற திசையை நோக்கி தனிமனிதனை பயணிக்கச் செய்கிறது. சமூக நலனை எளிதாக சாதிப்பதற்குத் தகுந்த மானசீக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இந்த வழிமுறையை அறிமுகப்படுத்தினர் மகரிஷிகள்.

“மாத்ரு தேவோ பவ! பித்ரு தேவோ பவ! ஆசார்ய தேவோ பவ! அதிதி தேவோ பவ!” போன்ற வாக்கியங்களைக் கூறி குடும்பத்தாரோடு எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்று போதித்தனர். அதோடு அத்யயனம்  (பயில்வதும், பயிற்சி செய்வதும்) என்ற செயலிலிருந்து ஒருநாளும் விலகக் கூடாது என்றும் எல்லோரும் இடைவிடாது அத்யயனத்தில் ஈடுபடவேண்டும் என்றும் போதித்தனர். அதோடுகூட சமுதாயத்தோடு எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் போதித்தனர்.

ALSO READ:  மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

தெய்வ, பித்ரு காரியங்களை மறக்கக்கூடாது என்று எச்சரித்தனர். சிரத்தையோடும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் தானம் செய்ய வேண்டும் என்று கூறியதோடு “அஸ்ரத்தயா அதேயம்” என்றார்கள். அதாவது “அசிரத்தையோடு எதையும் கொடுக்காதே!‘ என்று மீண்டும் பிரத்தியேகமாக எச்சரித்தனர்.

தேவ, பித்ரு காரியங்களுக்கு சமர்ப்பிக்கும் பொருட்களைக் கூட ஏதோ கடனே என்று அல்லாமல் சிரத்தையோடும் பக்தியோடும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அறிவுரையும் இதில் உள்ளது.

அதிலும் தேவர்கள் சிரத்தையை கவனிக்கும் பார்வை கொண்டவர்கள். கொடுக்கும் பொருளை எந்த அளவு சிரத்தையோடும் அன்போடும் அளிக்கிறார்கள் என்பதை கவனிப்பார்கள். அதற்கு தகுந்த பலனையே அருளுவர்கள். இதை நினைவில் நிறுத்த வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories