அண்ணா என் உடைமைப் பொருள் (27): நமஸ்காரம், திரஸ்காரம்!

anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 27
நமஸ்காரம், திரஸ்காரம்
– வேதா டி. ஸ்ரீதரன் –

எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் இருந்தார். எண்பது பிராயம் கடந்தவர். சிருங்கேரி, காஞ்சி இரண்டு பீடங்களின் மீதும் மிகுந்த மரியாதை உடையவர். தமிழ், ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆழ்ந்த தேர்ச்சி உடையவர்.

அண்ணாவைப் பார்க்க வேண்டும் என்று அவர் மிகவும் ஆசைப்பட்டார். ஒருநாள் மாலை அவரை அண்ணா இருந்த இல்லத்துக்கு அழைத்துச் சென்றேன். (அது ஒரு சிறிய அறை மட்டுமே. திருவான்மியூரில் ஒரு வீட்டின் பின் பகுதியை ஒட்டி அண்ணாவுக்காகப் பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட அறை. அண்ணா அதை அதிக காலம் பயன்படுத்தவில்லை.)

அப்போது அண்ணா மாலை நேர அனுஷ்டானங்களில் இருந்தார். எனவே, அந்தப் பெரியவரை மருந்தீஸ்வரர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்றேன். நாங்கள் திரும்பி வரும் போது அண்ணா நடைப்பயிற்சிக்காகக் கடற்கரைக்குச் செல்லத் தயாராக இருந்தார். அவரையும் கடற்கரைக்கே அழைத்து வருமாறு சொல்லி விட்டார்.

அண்ணா வாக்கிங் முடித்துத் திரும்பும் வரை நான் அந்தப் பெரியவருடன் கடற்கரையில் அமர்ந்திருந்தேன். அண்ணா வந்து சேர்ந்ததும் இருவரும் பெரியவா பற்றிக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். கிளம்பும் போது அந்தப் பெரியவர் அண்ணாவை நமஸ்கரிக்க விரும்பினார். அவர் அண்ணாவை விட மிகவும் மூத்தவர். எனினும், அண்ணா அவரை நமஸ்காரம் பண்ண அனுமதித்தார்.

anna alias ra ganapathy14 - 2026

நமஸ்காரம் பண்ணி முடித்ததும் அந்தப் பெரியவர் மனதில் திடீரென ஒருவித கூச்சம் ஏற்பட்டது. தன்னை விடச் சிறியவரை நமஸ்கரித்து விட்டோம் என்பதால் ஏற்பட்ட கூச்சம் அது. கூச்சத்தைப் போக்கிக் கொள்ளும் விதமாக அவர் ஏதேதோ சமாதானங்கள் சொல்லி, இறுதியாக, ‘‘ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம், ஸர்வ தேவ நமஸ்காரம் கேசவம் ப்ரதிகச்சதி (ஆகாயத்தில் இருந்து பெய்யும் மழைத்துளி ஒவ்வொன்றும் எவ்வாறு இறுதியில் சமுத்திரத்தையே சென்றடைகிறதோ, அதேபோல, எந்த தேவதைக்குச் செய்யப்படும் நமஸ்காரமும் இறுதியில் கேசவனையே சென்றடைகிறது’’ என்று குறிப்பிட்டார்.

அதற்கு அண்ணா, ‘‘நமஸ்காரம் மட்டுமல்ல, திரஸ்காரமும் தான். ஸர்வதேவ திரஸ்காரமும் கேசவம் தான் ப்ரதிகச்சதி-ன்னு பெரியவா அடிக்கடி சொல்லுவா’’ என்று குறிப்பிட்டார். (எந்த தெய்வத்தை இழிவுபடுத்தினாலும் அதுவும் கேசவனையே சென்றடைகிறது என்பது இதன் பொருள்.)

நாம் ஆங்கில வார்த்தைகள் கலந்த தமிழில் பேசுவது போலவே, தமிழ் வார்த்தைகளைச் சேர்த்துப் பெரியவா சொன்ன புதுமையான அந்த சம்ஸ்கிருத சுலோகத்தை அந்தப் பெரியவர் மிகவும் ரசித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Topics

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories