அக்.15: கிராமப்புற பெண்கள் தினம்!

village women
village women

அரசுத் திட்டங்கள் கிராமப் பெண்களை சேர வேண்டும்
~ ஜெயஸ்ரீ எம். சாரி, நாந்தேட் ~

“நம் நாடு கிராமங்களில் தான் வாழ்கிறது,” என்று அன்றே கூறிய காந்தியடிகளின் வாக்கு இன்றும் நிதர்சனமாய் உள்ளது. அந்தக் கிராமங்களில் வாழ்வியலை உயர்த்த பெண்களின் கணிசமான பங்கும் உள்ளது.

அக்டோபர் 15-ஆம் தேதி கிராமப்புற பெண்கள் தினம்.

ஆதவனின் கதிர்கள் தங்கள் இல்லங்களின் முற்றத்தில் விழும் நேரத்திற்கு முன்பாகவே பெரும்பாலான கிராமப் பெண்களின் கால்கள் தங்கள் பணியிடமான வயல்களை நோக்கி நடக்க தொடங்கி விடும்.

கனுக்காலிற்கு மேல் கட்டப்பட்ட சேலை, தலையில் சாப்பாடு, சில பெண்களின் இடுப்பில் குட்டி குழந்தைகள் என அவர்கள் பரபரப்பாய் நடக்கும் காட்சிகளைக் காணும் கவிஞர்களுக்கு நல்ல கவிதைகளும், புகைப்படக் கலைஞர்களுக்கோ அருமையான புகைப்படங்களும் கிடைக்கும். ஆனால், இப்பெண்களுக்கோ வாழ்வாதாரத்திற்காக ஓடும் ஓட்டத்திலும் கூட கிராமிய பொருளாதரத்தில் ஒர் குறிப்பட்ட சதவீதம் உள்ளது என்பதை மறுக்க முடியாது.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

இன்று, பன்பாட்டு நிறுவனங்களில் வேலையில் இருக்கும் பெண்களுக்கு அவர்களின் குழந்தைகளை பணி இடத்திலேயே வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்தக் கருத்தை நம் கிராமப்புற பெண்களோ பல வருடங்களுக்கு முன்பே வயலில் இருக்கும் மரங்களில் தூளியைக் கட்டி தங்கள் குழந்தைகளை தூங்க வைப்பார்கள். கைகள் வயல் வேலையில் இருந்தாலும் மனமும், கண்களும் குழந்தைகளின் தூளியையும் கவனிக்க தவறாது.

பல சமயங்களில் ஊர் விட்டு ஊர் வந்து கூட வயலில் வேலைப்பார்ப்பவர்களும் உண்டு. ஒருமுறை, வயலில் இருந்த டிராக்டரில் குழந்தைக்காக தூளிக்கட்டி குழந்தைக்கு தாலாட்டுப் பாடிய பெண்ணை நான் கண்டதும் மனம் கலங்கியது. தோள் சுருங்கிய பின்னரும் மனதில் தைரியத்துடன் வயல் வேலையிலும், பிற வேலைகளிலும் ஈடுபட்டு தன் குடும்பத்திற்கு ஆதாரமாய் இருக்கும் பேரிளம்பெண்களும் பலர்.

village women1
village women1

மஹாராஷ்டிராவில் உள்ள காந்தி மாவட்டமான வர்தாவில் இருக்கும் சமூக சேவகரான மாலதி தேஷ்முக் கூறும் போது “தற்போது வயல் வேலைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்து தான் போயுள்ளது. இதில் கடுமையாய் உழைக்கவும் வேண்டியுள்ளது. நிரந்த வருமானத்திற்கும் தற்போதைய சூழலில் பெண்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர். பெண்களுக்கான கூலியும் குறைவாக இருப்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்,” என்றார்.

ALSO READ:  திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

“பல பெண்களுக்கு தங்கள் உடல் நலத்தைப் பற்றியும், தனிப்பட்ட சுகாதாரப் பற்றிய விழுப்புணர்வும் குறைவாகவே உள்ளது. அவர்களுக்கு இவற்றைப் பற்றி விளக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம்,” என்றார்.

தற்போது இப்பெண்கள் கல்வியின் அவசியத்தை அறிந்து தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க ஆர்வம் காட்டுகின்றனர் என்ற ஒரு மகிழ்ச்சிகரமான விஷயத்தையும் பகிர்ந்தார், மாலதி தேஷ்முக்.

அரசின் பல்வேறு திட்டங்களைப் பற்றிய விஷயங்கள், இப்பெண்கள் வரை சேரவில்லை என்பதே கசப்பான உண்மை.

விவசாயம் சார்ந்த மற்றும் பல்வேறு பணிகளை செய்து எண்ணற்ற குடும்பங்களில் வாழ்வாதாரத்திற்கு அஸ்திவாரமாய் இருக்கும் கிராமப்புற பெண்களுக்கு ஒரு சலாம் தரும் நேரமிது.
அவர்களுக்கு அடிப்படை வசதி மற்றும் சுகாதாரம் தருவதற்கு அரசுகள் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories