
சாத்தான் வேதம் ஓதலாமா?
– ஷெசாத் பூனாவல்லா
தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
ஜூன் 25 தேதியை அரசமைப்பு பாதுகாப்பு தினமாக நரேந்திர மோடி அரசு அறிவித்தது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 25 ஆம் தேதியன்று அப்போதைய பிரதமர் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அது நம் நாட்டின் ஜனநாயக வரலாற்றில் கருப்பு தினமாகும்.
நாடகம்
இந்திரா காந்தி அரசமைப்பு சாசனத்தை அவமதித்தார். எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறித்தார். சர்வாதிகார இருளில் இந்தியாவை மூழ்கடித்தார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அரசு அமைப்பை அடித்து நொறுக்கிய கட்சி இன்று அரசமைப்பை பாதுகாப்ப போவதாக வேடமிடுகிறது.
தலைச்சுற்றல்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் இந்த நாளிதழில் (மேட்ச் பிக்சிங் – மகாராஷ்டிரா . இந்திய எக்ஸ்பிரஸ் , ஜூன் 7 தேதி) எழுதிய கட்டுரையில் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநில தேர்தலின் போது மேட்ச் பிக்சிங்கில் (தேர்தல் முடிவை முன்கூட்டியே தீர்மானித்தல்) ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அவரது பிற்போக்குதனம் தலை சுற்ற வைப்பதாக இருக்கிறது.
ஆன்மாவை நசுக்கியவர்கள்
தற்போதுள்ள ஜனநாயக வழிமுறைகளின் மீது எந்தவிதமான ஆதார மும் இன்றி குற்றம் சாட்டும் ராகுல் காந்தி , தன் சொந்த குடும்பம் மற்றும் குடும்பப் கட்சி நெருக்கடி நிலையின் போது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்து கொன்றதை கருத்தில் கொள்ளாமல் வசதியாக மறந்துவிட்டார்.அரசமைப்பின் அடிப்படை பண்புகளின் மீது நடந்த கொடூர தாக்குதல் நெருக்கடி நிலை அறிவிப்பு. அரசமைப்பு உறுதி கூறும் ஜனநாயக குடியரசு என்பதை இந்திரா காந்தி ஒழித்த கட்டினார். அவரது வார்த்தைகள் சட்டமாகின. அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன.
நீதியின் வாய் பூட்டப் பட்டது
கேசவானந்த பாரதி வழக்கின் மூலம் நீதித்துறை நிலைநாட்டிய அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பு நாடாளுமன்றத் தீர்மானங்கள் மூலம் பொருளற்றுப் போகும்படி செய்யப்பட்டன. இந்திராவின் சொல் சட்டமானது.
42 ஆவது சட்ட திருத்தம் மூலமாக அரசு நிர்வாகம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்றானது. நீதிமன்றத்தின் அதிகாரம் அலட்சியப் படுத்தப்பட்டன. அரசு நிர்வாகம் நீதிமன்றத்துக்கு பதில் அளிக்க தேவையில்லை என்றானது.
ஊடக அடக்குமுறை
356 சட்ட பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. பணி மூப்பு அடிப்படையில் என்றில்லாமல் தன் துதிபாடுகளை உயர்மட்ட நீதிபதிகளாக நியமித்து நீதித்துறையின் சுதந்திர முடக்கப்பட்டது. ஊடகங்களின் வாய் கட்டப்பட்டது. செய்தித்தாள்கள் அரசின் புகழை பாடும்படி கட்டாயப் படுத்தப்பட்டன. மறுக்கும் செய்தியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். செய்தி ஊடகங்களின் தணிக்கைக்கு எதிராக ராம்நாத் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் தலையங்கம் பகுதியை காலியாக விட்டு (வெற்றிடமாக விட்டு) வெற்று தலையங்கத்தின் மூலம் தன் எதிர்ப்பை தெரிவித்தது.
காங்கிரஸ் செய்தது மேட்ச் பிக்சிங் அல்ல கொலை
மேற் சொன்னவை எல்லாம் மேட்ச் பிக்சிங் இல்லை மாறாக ஜனநாயக அமைப்புகளை கொலை செய்வதுதான் என்று ராகுல் காந்தி சொல்வாரா ? இந்திரா ஆட்சியின் வரம்பு மீறல் யாரையும் விட்டு வைக்கவில்லை. கலைஞர்களும் கவிஞர்களும் இலக்கியவாதிகளும் ஒடுக்கப்பட்டார்கள்.பிரபல பாடகர் கிஷோர் குமார் நெருக்கடி நிலையை ஆதரிக்க மறுப்பதற்காக அவரது பாடல்கள் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனிலும் தடை செய்யப்பட்டன.
வேட்டையாடப்பட்டவர்கள்
சாதாரண மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள், சஞ்சய் காந்தியின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு இயக்கம் என்ற பெயரின் கட்டாய கருத்தடை செய்யப்பட்டனர் . அரசியல் எதிர்ப்பாளர்கள் வேட்டையாடப்பட்டனர். அரசியல் ஆர்வலர்கள், செய்தியாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நெருக்கடி காலகட்டத்தில் சிறையில் இருந்த போது தனது தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள கூட அனுமதி மறுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
ஜெ பி இயக்கம்
காங்கிரசின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை நடத்திய காந்திய சோஷலிஸ்டான ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற உயர்ந்த தலைவர்கள் குறிவைக்கப் பட்டனர் . ஜே பி இயக்கத்தில் முன்னணி தலைவர்களாக இருந்து காங்கிரஸ் ஆட்சிக்கு , கட்சிக்கு எதிராக செயல்பட்ட முலாயம் சிங் , லாலு பிரசாத் போன்ற சோசியலிஸ்ட் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். *
U டர்ன்
இந்த தலைவர்கள் காங்கிரஸின் சர்வாதிகாரத்துக்கு எதிராக செயல்பட்டார்கள். ஆனால் இன்று அந்த தலைவர்களும் அவர்களது கட்சிகளும் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக்கொண்டு சொகுசாக இருப்பது ஒரு வரலாற்று சோகம் தான்.
துரோகம்
ஆயிரக்கணக்கானோர் எந்த விசாரணையும் இன்றி மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது நினைவாக லாலு பிரசாத் தன் மகளுக்கு மிசா என்று பெயரிட்டார். இன்று அப்படியே திரும்பி காங்கிரசுடன் கைகோத்திருப்பது தங்களது கொள்கைகளுக்கு மட்டுமல்ல இவர்கள் பேச்சைக் கேட்டு காங்கிரசின் அடக்கு முறையை எதிர்த்து தியாகம் செய்த எண்ணற்ற இந்தியர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
(இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்)





