ஜனநாயக ஆட்சியா, குடும்ப ஆட்சியா?

emergency period - 2026

ஜனநாயக ஆட்சியா குடும்ப ஆட்சியா?

  • தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்

நெருக்கடி நிலை அறிவிப்பு வெறும் நிர்வாக தவறு அல்ல. மாறாக ஜனநாயக ஆட்சியை விட குடும்ப ஆட்சி உயர்வானதென்று நிறுவுவது ஆகும். காங்கிரஸ் இன்றும் அதை தொடர்கிறது.

இந்திய தேர்தல் ஆணையம் பக்கசாய்வுடன் செயல்படுவதாக எந்த அடிப்படை ஆதாரமுமின்றி இன்று குற்றம் சாட்டும் காங்கிரஸ் கட்சி தான் ஆளும் தெலுங்கானா , கர்நாடகாவில் செய்தியாளர்களையும் சமூக ஊடகவியலாளர்களையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது. சில முக்கிய செய்தியாளர்களை பகிஷ்கரிக்கிறது . சிலரை கைது செய்துள்ளது. இவையெல்லாம் வரலாற்றில் அவர்கள் இழைத்த குற்றங்களால் எந்த விதமான குற்ற உணர்வும் அவர்களுக்கு ஏற்படவில்லை என்று தெரிவிப்பதும் மறுப்பதும் மட்டுமன்றி அரசமைப்பு சட்டத்தை மதிக்காமையையும் காட்டுகிறது. அவர்கள் மதிப்பு காட்டுவது உயர்ந்த மாண்புகளின் மீது அவர்களுக்கு இருக்கும் மரியாதை காட்டுவதில்லை. மாறாக அவர்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மதிப்பார்கள் என்பதை காட்டுகிறது.

வென்றால் சரி, தோற்றால் ‘மேட்ச் பிக்சிங்’

தெலுங்கானாவிலும் கர்நாடகாவிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்போது தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுகிறது. மகாராஷ்டிராத்திலும் அரியானாவிலும் தோற்கும் போது தேர்தல் ஆணையம் மேட்ச் பிக்சிங் செய்கிறது என்று குற்றம் சாட்டுவது.

குறுக்கு வழியில்

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் இருண்ட கால வாரிசு என்பதிலிருந்து தப்ப முடியாது. 356 சட்டப்பிரிவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது அவர்களுக்கு சட்ட அரசமைப்பு சட்டத்தின் மீதுள்ள வெறுப்பையே காட்டுகிறது. குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்றும் வெறியை காட்டுகிறது.

காங்கிரஸூம் 370 வது சட்டப்பிரிவும்

அம்பேத்கர் இயற்றிய அரசமைப்பு சட்டத்தை ஜம்மு காஷ்மீரில் பல பத்தாண்டுகள் நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் தடுத்த , மற்றும் எஸ் சி , எஸ் டி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்த 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவை நீக்கியதை காங்கிரஸ்காரர்கள் ஏன் எதிர்த்தார்கள் ?

இட ஒதுக்கீடு மத அடிப்படையிலா

அரசமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் எதிரான மதரீதியான இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுக்க தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் துடிப்பது ஏன் ? பாஜக அரசமைப்பு சட்டத்தை மாற்ற முனைவதாக ராகுல் குற்றம் சாட்டுகிறார். ஆனால், உண்மையில், அவரது குடும்பமும் கட்சியும் தான் அதை மிதிக்கின்றனர்.

இந்திய ஜனநாயகத்தை நசுக்கிய நெருக்கடி கால அறிவிப்புதான் உண்மையில் மேட்ச் பிக்சிங். அது விதிவிலக்காக இல்லாமல் , காங்கிரஸ் ஆட்சி முறையை வரையறை செய்வதாக பல பத்தாண்டுகளாக நீடித்து வருகிறது.

வருத்தமல்ல நியாயப்படுத்துவது

காங்கிரஸ் அந்த இருண்ட காலம் பற்றி உண்மையில் வருத்தம் படுவதாக தெரியவில்லை. மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொடுமைக்குள்ளானவர்களுக்கு மாத ஓய்வுதியும் வழங்க பாஜக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. அந்த அரசு ஆணையை பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு திரும்ப பெற்றுக் கொண்டு, தியாகிகளை ஓய்வூதியத்தை நிறுத்தியது. அதன் மூலம் இருண்ட நெருக்கடி காலகட்டத்தை நியாயப்படுத்தியது.

கண்ணாடியில் காங்கிரஸ் முகம்

அரசமைப்பு சட்ட பாதுகாப்பு தினத்தின் பொன் விழா ஆண்டு அரசமைப்பை பாதுகாக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடிமகனுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த மட்டுமல்லாமல் , அதை கொலை செய்துவிட்டு இன்று அதை காப்பதாக நாடகமாடுபவர்களுக்கு உண்மையை எடுத்து அவர்கள் முகத்தெதிரே காட்டுவதாகவும் அமையட்டும்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் 1-7-25ல் வெளியானதன் தமிழாக்கம்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories