December 5, 2025, 8:22 PM
26.7 C
Chennai

எச்சரிக்கை: திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ‘நேர்மை’ ஆளுநர்களை அசிங்கப்படுத்திய வரலாறுகள்!

modi edappadi banwarilal - 2025

ஆய்வுகள் என்ற பெயரில், திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் நடைபெற்ற ஊழல்களைத் தெரிந்து கொண்டு கிடுக்கிப் பிடி போட்டு வரும் ஆளுநரை தமிழகத்தை விட்டு விரட்டுவதற்கு, திராவிடக் கட்சிகள் கூட்டு சதியில் இறங்கியுள்ளன என்று தலைமைச் செயலக பணியாளர்கள் மட்டத்தில் பேசிக் கொள்கிறார்கள்!

ஆளுநர் மாளிகை சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் எனத் தோன்றுகிறது. சுதந்திரத்துக்குப் பின்னர், இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல், பொய்யும் புரட்டும் திருட்டும் நிறைந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் திராவிடக் கட்சியினர்.

திராவிட அரசியல் என்பது பொய்யும் புரட்டும் திருட்டும் நிறைந்த அரசியல். தமிழகத்தின் அரசுக் கட்டிலில் அமர்ந்திருப்போர், தங்கள் எண்ணம் ஈடேறும் வரை ஆளுநர் கழுத்தில் ஆளுயர மாலையைப் போட்டுவிட்டுக் காத்திருப்பார்கள். ஆளுநரால் காரியம் ஆகவில்லை என்றாலோ, தங்கள் சுதந்திரமான தில்லுமுல்லுகளுக்கு ஆளுநர் முட்டுக் கட்டை போட்டாலோ, ஊழல்களை சுதந்திரமாகச் செய்ய முடியவில்லை என்றாலோ, ஆளுநர் பதவிக்கே மாலையைப் போட்டு சங்கு ஊதி விடுவார்கள்.

jayalalitha - 2025

இதற்கு 1991-1996 அதிமுக., ஆட்சியில் ஆரம்பத்தில் ஆளுநராக இருந்த பீஷ்ம நாராயண் சிங் சரியான உதாரணம். ஊழல் ஆட்சியின் உச்ச கட்டம் என்று பெயரெடுத்த அந்த ஐந்து ஆண்டுகளும் ஆளுநர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப்தான். அப்போது எதையும் கண்டுகொள்ளாமல் பெட்டிப் பாம்பாகக் கிடந்த பீஷ்ம நாராயண சிங்குக்குக் கிடைத்த ராஜ மரியாதையையும், அவருக்குப் பிறகு பதவிக்கு வந்த சென்னா ரெட்டிக்கு கிடைத்த அவமரியாதையையும் உதாரணமாகக் காட்டலாம்.

இந்திய முதல்வர்கள், ஆளுநர்கள் வரலாற்றில் ஒரு பெண் முதல்வர், ஒரு ஆண் ஆளுநரைப் பற்றி, மாநில சட்டமன்றத்திலேயே என்னிடம் தகாத முறையில் ஆளுநர் நடந்து கொண்டார் என்று கூறிய பெருமை தமிழ்நாட்டு திராவிட அரசியலுக்கு மட்டுமேயான தனிச்சிறப்பு!

தன் மீது வழக்குத் தொடர அனுமதி கொடுத்த ஆளுநர் சென்னா ரெட்டியை பழி வாங்க 1995இல் தமிழக சட்டமன்றத்தில் ஒரு பெண்ணான என்னிடம் ஆளுநர் தவறாக நடந்து கொண்டார் என்று கூறி தமிழ்நாட்டு திராவிட அரசியலின் புகழை நிலை நிறுத்தினார் ஜெயலலிதா.

அவரின் வழியில் அரசு நடத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் அதிமுக., அம்மா தொண்டர்கள், அவர் காட்டிய வழியிலேயே தொடர்ந்து பணியாற்றக் களமிறங்கியிருக்கிறார்கள் என்பது, தற்போதைய நடவடிக்கைகளில் இருந்து நன்றாகத் தெரிகிறது என்று தெளிவாகச் சொல்கிறார்கள் இந்த விவகாரங்களை உற்று நோக்குபவர்கள்.

ஜெயலலிதா வழியில் ஆளுநரை நேரடியாக எதிர்கொண்டு குறை கூறத் திறன் இல்லாமல், திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் மறைமுகக் கூட்டு வைத்துக் கொண்டு, ஆளும் கட்சியினரே ஆளுநர் விவகாரத்தில் நற்பெயரைக் கெடுக்கும் வேலைகளைச் செய்யக் கூடும் என்று எச்சரிக்கிறார்கள் பொது நோக்கர்கள். தொடர்ந்து அவர்களின் சுதந்திரமான அதிகாரங்களைப் பறித்து கொண்டிருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைப் பழிதீர்க்க என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள் என்றும் எச்சரிக்கிறார்கள்.

இங்கே ஆளும் கட்சிக்கு தாளம் போட்ட பீஷ்ம நாராயண் சிங்கும் பர்னாலாவும்தான் புகழோடு இருக்க முடியும். மாறாக ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுத்தால் சென்னா ரெட்டி மாதிரி பன்வாரி லாலையும் அசிங்கப்படுத்தி அனுப்பி விடுவார்கள். எந்த வித உச்சத்துக்கும் செல்லத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு உதாரணம்தான் அண்மைய சம்பவங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories