வேலூர் காட்டும் ‘நீட்’ உண்மை! மதவாதத்தின் அப்பட்டமான கோரமுகம்!

neet2 - 2026

வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரி, சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் மருத்துவ படிப்பிற்கான (MBBS) அனுமதியை மறுக்கும் எனத் தெரிகிறது.

நீட் தேர்வு முறையால் தங்களின் கல்லூரியின் குறிக்கோள் மற்றும் கொள்கைகளை அமல்படுத்த முடியாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இது நாள் வரை சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தில், தகுதி வேண்டும் என்பதோடு தங்கள் கல்லூரியில் பயில்வதற்கு ஏற்ற ‘பொருத்தமும்’ (!) வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையை ‘நீட்’ தேர்வு தகர்ப்பதாக கூறி அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. அந்தப் பொருத்தம் என்பது கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது கண்கூடு.

மிக சாமர்த்தியமாக நீட் தேர்வை வரவேற்பதாக சொல்லும் இந்த கல்லூரி, அதற்கு மேல் தங்கள் கல்லூரியின் சட்ட திட்டங்களுக்கிணங்க, தகுதி மற்றும் பொருத்தத்தின் அடிப்படையில் அனுமதி அளிப்போம் என்று கூறுவது மதவாதத்தின் அப்பட்டமான கோர முகம்.

ALSO READ:  ‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தக் கல்லூரியில் இது நாள் வரை 100 எம் .பி .பி.எஸ். இடங்களில் 85 இடங்கள் கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர்களுக்கே ஒதுக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசு ஒதுக்கீடு இந்த கல்லூரிக்கு இல்லை என்பதும், இந்த கல்லூரியின் தேர்வு முறைக்கேற்பவே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள் என்பதும் கவனிக்கப்படவேண்டிய விவகாரம். இது குறித்த வழக்கில் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டால், மற்ற தனியார் கல்லூரிகளும் தங்களின் விருப்பத்திற்கேற்ப, பொருத்தத்திற்கேற்ப அனுமதி முறையை பின்பற்றுவோம் என்ற நிலை உறுதியாக எழும்.

நீட் தேர்வின் அடிப்படையே கடையனுக்கும் மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே. மேலும், இந்த கல்லூரியில் இது வரை அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பாலோனோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கில மொழி பாடத்திட்டத்தில் படித்தவர்களே அனுமதிக்கப்படுவார்கள் என்பது விதி. அதாவது தமிழ் மொழி பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு இந்த கல்லூரியில் அனுமதியில்லை என்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என்று, தமிழ், தமிழர்கள் உரிமை, தமிழின பாதுகாவலர்கள், தமிழ் மண்ணின் மைந்தர்கள், முற்போக்குகள், தமிழுக்காக, தமிழனுக்காக உயிரையும் கொடுப்போம் என்று கூக்குரலிட்டு கொண்டிருக்கின்றவர்கள், திராவிட அடைமொழி கொண்ட அரசியல்வாதிகள் பொங்கியெழாது இருப்பது ஏன்?

ALSO READ:  வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

சி எம்.சி கல்லூரியின் இந்த முடிவிற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

நீட் தேர்வு தர வரிசைப்பட்டியலின் படி, சமூக நீதியின் படி தமிழ் மாணவர்களுக்கு அனுமதி கொடுக்க முடியாத அந்த கல்லூரிக்கு தமிழர்கள் மீது உள்ள வெறுப்பு என்ன?

கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே இடம்; மற்றவர்களுக்கு இல்லை என்ற இந்த கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பார்களா தமிழ் பாதுகாவலர்கள்? எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று அறைகூவல் விடும் தமிழக அரசியல்வாதிகள், ஓட்டுக்காக தமிழர்களுக்கு வேட்டு வைப்பது முறையா?

நாராயணன் திருப்பதி,
ஊடக ஒருங்கிணைப்பாளர் (பாஜக.,)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories