அஞ்சி நடுங்கிய இந்திரா! அசகாய சூரனாய் மோடி!

Published:

indira gandhi - 2026

“என்னால் 370 மற்றும் 35A மீது கை வைக்க இயலாது” – தன் பயத்தை 1981இல் நியூயார்க்கில் இருந்த டாக்டர் மித்ரா என்பவருக்கு தன் கடிதத்தில் எழுதிய அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. அந்த பயம் மோதிக்கு இல்லை! 56″ ராக்ஸ்! ????????

அந்தக் கடிதத்தில், “உங்கள் கவலையை நானும் பகிர்கிறேன். காஷ்மீரை பூர்விகமாக நாமிருவரும் கொண்டிருந்தாலும், (370 மற்றும் 35A காரணமாக) அங்கே ஒரு துண்டு நிலமோ வீடோ வாங்க முடியாது என்பது வருந்தத் தக்க ஒன்று.

ஆனால் தற்சமயம், இந்த விவகாரம் (370 மற்றும் 35A) பற்றி என் கையை மீறிய விஷயம். இந்திய ஊடகங்கள் வெளிநாட்டு ஊடகங்களுடன் சேர்ந்து கொண்டு என்னை எதேச்சாதிகாரியாக காட்டிவருகிறார்கள் என்ற நிலையில் என்னால் இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய இயலாது.

காஷ்மீர பண்டிட்டுகளும், பௌத்தர்களும் லடாக்கில் நியாயமற்ற முறையிலும் பாரபட்சமாகவும் நடத்தப்படுகிறார்கள் (என்பது உண்மை)” என்று குறிப்பிட்டிருக்கிறார் இந்திரா காந்தி…

காங்கிரஸ் இந்த கடிதத்தை எப்படிக் கையாளும்? 370 மற்றும் 35A க்கு இந்திரா காந்தியே பயந்திருக்கிறார். காஷ்மீரில் நடந்த கொடுமைகளையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

பிரதமராக இருந்தாலும், காஷ்மீரை பூர்விகமாக கொண்டவரானாலும் இந்திராவால் அங்கே ஒரு நிலம் வாங்க இயலாத நிலையை ஒப்புக் கொண்டுள்ளார்.

indira letter - 2026

Related articles

Recent articles

spot_img