February 11, 2025, 1:23 AM
26 C
Chennai

கருணாநிதி தொடங்கி வைத்த கழிசடைத்தனம்..! தினகரன் வரை தொற்றிக் கொண்டிருப்பது அபாயம்!

 

நீ எந்த பத்திரிகை? எந்த ஊடகம்? இப்படி எல்லாம் கேட்க சொல்லி அனுப்பி வெச்சாங்களா? ஏன் இதை அங்க போய் கேட்கலாமே! இதை ஏன் அந்த அம்மையாரிடம் கேட்கவில்லை!?

– இப்படியும் இதற்கு மேலும், செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தனிப்பட்ட வகையில் நிருபர்களை அடையாளம் காண்பது, அடையாளம் காண வைப்பது, நிருபர்களிடமே அரசியல் விளையாட்டு மேற்கொள்வது, நிருபர்களை அரசியல் ரீதியாக பிரிப்பது, தனிப்பட்ட வகையில் பெயரைக் கேட்டு, அச்சுறுத்துவது… என திமுக., தலைவராகவும் தமிழக முதல்வராகவும் இருந்த மு.கருணாநிதி செய்த கழிசடைத்தனம் எண்ணிலடங்கா. இப்போது அந்த வியாதி புதிய அரசியல்வாதி டிடிவி தினகரனுக்கும் தொற்றிக் கொண்டிருக்கிறது!

அண்மையில் டிடிவி தினகரனும் மு.க.ஸ்டாலினும் ரகசியமாக சந்தித்துக் கொண்டனர் என்ற ரீதியில் ஒரு செய்தியை, போட்டி அரசியல் கட்சி இதழ் வெளியிட, அது தொடர்ந்து 24 மணி நேர பொழுது போக்கு டிவி., செய்தி சேனல்களில் விவாதப் பொருளாக எடுக்கப்பட… விவாதத்துக்கு உரியவரான டிடிவி தினகரன் கடும் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியபோது,

தொலைக்காட்சியில் விவாதம் செய்யும் அளவுக்கு இது ஒரு விஷயமா? அது, ஒரு பத்திரிகைன்னே யாருக்கும் தெரியாது, நீங்க நமது பாட்டி, கொள்ளுப்பாட்டி சொல்றதை எல்லாம் நம்பிக்கிட்டு விவாதம் செய்யிறீங்க… என்று கேலி செய்கிறார் டிடிவி.

நான் மதிக்கும் தொலைக்காட்சியில் ஒரு விவாதம்னு இதை நடத்துறீங்க! விவாதத்துக்கு எவ்வளவோ விஷயம் இருக்கு.. இதுவெல்லாமா ஒரு விஷயம்!

புதிய தலைமுறைக்கு வெச்சிருக்கேன்… இருங்க சுபாஷ்.. என்று டிவி நிருபரை பெயர் சொல்லி… தனிமைப்படுத்துகிறார்!

விவாதம் செய்தால், ரபேல், அடிமை ஆட்சி, ஒபிஎஸ் பிரதமர் சொல்லிதான் சேர்ந்தார் என்றெல்லாம் விவாதம் செய்யுங்க என்று அறிவுரை கொடுக்கிறார் டிவி நிறுவனத்துக்கு!

மேலும், திருவண்ணாமலை அர்ப்பணா ஹோட்டலில் தங்கியிருந்தபோது… பாஜக., தமிழக தலைவர் தமிழிசை அங்கே தங்கியிருந்தார். அப்போது யாரும் இது ஒரு ரகசிய சந்திப்பா என்று கேட்கவில்லையே என்று ஆதங்கப்படுகிறார்.

எதையோ கதை கட்டிவிட்டு, சொல்லப் படுகிறது வாங்கப்படுகிறது என்று என்ன சொல்ல வேண்டியிருக்கிறது? திருட்டுத்தனமாக நான் யாரையும் சந்திக்க வேண்டிய தேவையில்லை. யாராய் இருந்தாலும் பொதுவில் சந்திப்பேன்.. ஒருவரை பார்ப்பதாலேயே கற்பு போய்விடாது… அதாவது நீங்கள் சொல்வது போன்ற, அரசியல் கற்பு போய்விடாது.

நீங்களே தரத்தை தாழ்த்திக் கொள்ளாதீர்கள் என்று கூறும் டிடிவி., நிருபர் ஒருவர் தூத்துக்குடி விவி மினரல்ஸ் ரூ. இரண்டரை கோடி ஆர்.கே.நகர் தேர்தல் நேரத்தில் கொடுத்தார்கள் என்று கூறப்படும் செய்தி குறித்து கேட்கிறார். அதற்கு அவர், எனது டிவிட்டர் பதிவினை பார்க்கவில்லையா .. அதிலேயே போட்டிருக்கேனே..! என்ன பத்திரிகை நீங்க..? என்கிறார்.
அதற்கு அந்த நிருபர், நியூஸ் ஜே எனச் சொல்ல, நியூஸ் ஜேல உள்ளவங்க டிவிட்டர் பாக்கலைன்னா எப்படி..? நீங்க எப்படி ரிப்போர்ட்டரா இருக்கீங்க?! என்று தகுதியைக் குறித்து கேள்வி எழுப்புகிறார்…

தொடர்ந்து, வேறொரு கேள்விக்கு, நீங்க என்ன தொலைக்காட்சி..? என்று கேட்க, அதற்கு அவர், தந்தி டிவி சார்… என்கிறார்.

அவருக்கு பதிலளிக்கு டிடிவி., உங்க நிருபருக்கு மதுரையிலே பதில் கொடுத்து தனியாக சிடில்லாம் அனுப்பிவெச்சேன்… கத்துக்குட்டிகளுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று சொன்னேன்.. முதல்ல நான் சொல்ல அந்த பதிலை போடுங்க பிறகு சொல்கிறேன்… என்கிறார் டிடிவி.

இன்னொரு கேள்வி கேட்கப் பட்டபோது, உங்க சேனலுக்கு அரசு இதை எல்லாம் கேளுங்க உங்களுக்கு விளம்பரம் தர்றோம்னு பேரம் பேசியிருக்கறதா சொல்றாங்களே.. அது உண்மைன்னா இதுவும் உண்மை என்கிறார்.

நிருபர்களுடன் ஏதோ ஹோட்டலில் டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டு தனிப்பட்ட முறையில் பேசுவது போல், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கையாளும் டிடிவி.,யின் இத்தகைய போக்கு மாற வேண்டும்! தனிப்பட்ட முறையில் செய்தியாளர்களை சுட்டிக் காட்டி, அடையாளப் படுத்தும் கருணாநிதியின் பாணி, அவருடன் சேர்ந்து சவக்குழியில் மூடப் பட்டாக வேண்டும்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

Topics

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!

ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

Entertainment News

Popular Categories