கருணாநிதி தொடங்கி வைத்த கழிசடைத்தனம்..! தினகரன் வரை தொற்றிக் கொண்டிருப்பது அபாயம்!

 

நீ எந்த பத்திரிகை? எந்த ஊடகம்? இப்படி எல்லாம் கேட்க சொல்லி அனுப்பி வெச்சாங்களா? ஏன் இதை அங்க போய் கேட்கலாமே! இதை ஏன் அந்த அம்மையாரிடம் கேட்கவில்லை!?

– இப்படியும் இதற்கு மேலும், செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தனிப்பட்ட வகையில் நிருபர்களை அடையாளம் காண்பது, அடையாளம் காண வைப்பது, நிருபர்களிடமே அரசியல் விளையாட்டு மேற்கொள்வது, நிருபர்களை அரசியல் ரீதியாக பிரிப்பது, தனிப்பட்ட வகையில் பெயரைக் கேட்டு, அச்சுறுத்துவது… என திமுக., தலைவராகவும் தமிழக முதல்வராகவும் இருந்த மு.கருணாநிதி செய்த கழிசடைத்தனம் எண்ணிலடங்கா. இப்போது அந்த வியாதி புதிய அரசியல்வாதி டிடிவி தினகரனுக்கும் தொற்றிக் கொண்டிருக்கிறது!

அண்மையில் டிடிவி தினகரனும் மு.க.ஸ்டாலினும் ரகசியமாக சந்தித்துக் கொண்டனர் என்ற ரீதியில் ஒரு செய்தியை, போட்டி அரசியல் கட்சி இதழ் வெளியிட, அது தொடர்ந்து 24 மணி நேர பொழுது போக்கு டிவி., செய்தி சேனல்களில் விவாதப் பொருளாக எடுக்கப்பட… விவாதத்துக்கு உரியவரான டிடிவி தினகரன் கடும் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியபோது,

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

தொலைக்காட்சியில் விவாதம் செய்யும் அளவுக்கு இது ஒரு விஷயமா? அது, ஒரு பத்திரிகைன்னே யாருக்கும் தெரியாது, நீங்க நமது பாட்டி, கொள்ளுப்பாட்டி சொல்றதை எல்லாம் நம்பிக்கிட்டு விவாதம் செய்யிறீங்க… என்று கேலி செய்கிறார் டிடிவி.

நான் மதிக்கும் தொலைக்காட்சியில் ஒரு விவாதம்னு இதை நடத்துறீங்க! விவாதத்துக்கு எவ்வளவோ விஷயம் இருக்கு.. இதுவெல்லாமா ஒரு விஷயம்!

புதிய தலைமுறைக்கு வெச்சிருக்கேன்… இருங்க சுபாஷ்.. என்று டிவி நிருபரை பெயர் சொல்லி… தனிமைப்படுத்துகிறார்!

விவாதம் செய்தால், ரபேல், அடிமை ஆட்சி, ஒபிஎஸ் பிரதமர் சொல்லிதான் சேர்ந்தார் என்றெல்லாம் விவாதம் செய்யுங்க என்று அறிவுரை கொடுக்கிறார் டிவி நிறுவனத்துக்கு!

மேலும், திருவண்ணாமலை அர்ப்பணா ஹோட்டலில் தங்கியிருந்தபோது… பாஜக., தமிழக தலைவர் தமிழிசை அங்கே தங்கியிருந்தார். அப்போது யாரும் இது ஒரு ரகசிய சந்திப்பா என்று கேட்கவில்லையே என்று ஆதங்கப்படுகிறார்.

எதையோ கதை கட்டிவிட்டு, சொல்லப் படுகிறது வாங்கப்படுகிறது என்று என்ன சொல்ல வேண்டியிருக்கிறது? திருட்டுத்தனமாக நான் யாரையும் சந்திக்க வேண்டிய தேவையில்லை. யாராய் இருந்தாலும் பொதுவில் சந்திப்பேன்.. ஒருவரை பார்ப்பதாலேயே கற்பு போய்விடாது… அதாவது நீங்கள் சொல்வது போன்ற, அரசியல் கற்பு போய்விடாது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

நீங்களே தரத்தை தாழ்த்திக் கொள்ளாதீர்கள் என்று கூறும் டிடிவி., நிருபர் ஒருவர் தூத்துக்குடி விவி மினரல்ஸ் ரூ. இரண்டரை கோடி ஆர்.கே.நகர் தேர்தல் நேரத்தில் கொடுத்தார்கள் என்று கூறப்படும் செய்தி குறித்து கேட்கிறார். அதற்கு அவர், எனது டிவிட்டர் பதிவினை பார்க்கவில்லையா .. அதிலேயே போட்டிருக்கேனே..! என்ன பத்திரிகை நீங்க..? என்கிறார்.
அதற்கு அந்த நிருபர், நியூஸ் ஜே எனச் சொல்ல, நியூஸ் ஜேல உள்ளவங்க டிவிட்டர் பாக்கலைன்னா எப்படி..? நீங்க எப்படி ரிப்போர்ட்டரா இருக்கீங்க?! என்று தகுதியைக் குறித்து கேள்வி எழுப்புகிறார்…

தொடர்ந்து, வேறொரு கேள்விக்கு, நீங்க என்ன தொலைக்காட்சி..? என்று கேட்க, அதற்கு அவர், தந்தி டிவி சார்… என்கிறார்.

அவருக்கு பதிலளிக்கு டிடிவி., உங்க நிருபருக்கு மதுரையிலே பதில் கொடுத்து தனியாக சிடில்லாம் அனுப்பிவெச்சேன்… கத்துக்குட்டிகளுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று சொன்னேன்.. முதல்ல நான் சொல்ல அந்த பதிலை போடுங்க பிறகு சொல்கிறேன்… என்கிறார் டிடிவி.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

இன்னொரு கேள்வி கேட்கப் பட்டபோது, உங்க சேனலுக்கு அரசு இதை எல்லாம் கேளுங்க உங்களுக்கு விளம்பரம் தர்றோம்னு பேரம் பேசியிருக்கறதா சொல்றாங்களே.. அது உண்மைன்னா இதுவும் உண்மை என்கிறார்.

நிருபர்களுடன் ஏதோ ஹோட்டலில் டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டு தனிப்பட்ட முறையில் பேசுவது போல், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கையாளும் டிடிவி.,யின் இத்தகைய போக்கு மாற வேண்டும்! தனிப்பட்ட முறையில் செய்தியாளர்களை சுட்டிக் காட்டி, அடையாளப் படுத்தும் கருணாநிதியின் பாணி, அவருடன் சேர்ந்து சவக்குழியில் மூடப் பட்டாக வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Topics

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

Entertainment News

Popular Categories