சிறுநீர்ப் பாசனம் செய்து தமிழின் வளத்தை நாறடிப்பவர்கள்!

h raja - 2026

சென்னையில் பாஜக. பொதுக்கூட்டத்தில் பேசிய அமீத் ஷா, தன் பேச்சில், ‘Minor Irrigation’ என்றார். அதை ‘சிறு நீர்ப் பாசனம்’ என்று மொழிபெயர்ப்பாளர் ஹெச்.ராஜா கூறிவிட்டாராம்! ‘தமிழ் ஆர்வலர்கள்’ – ‘நான் தமில் அண்டா’- ‘முற்போக்கூஸ்’… எல்லாம் குதி குதி என்று குதிக்கிறார்கள் !

இதற்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்! ஈவேரா கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்தம் ஓரளவு சரிதான். ‘ளை’- ‘னை’… என்பதையெல்லாம் மேலே கொம்பு சுழி போட்டு எழுதியது போய் எளிமைப் படுத்தப்பட்டது வரை சரி! அது வரைக்கும் ஓகே!

ஆனால் ‘தலைவர்’ என்ன சொன்னாலும் அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்கும் அடிமை புத்தி, உங்களை எங்கே கொண்டு வந்து நிறுத்தியது தெரியுமா ஈவேரா விசுவாசிகளே?!

தலைவர் -‘ஔ’- எழுத்து வேண்டாம் : அதை ‘அவ்’ என்று எழுதலாம் என்றார். (இதேபோல் -‘ஐ’- க்கு பதில் – ‘அய்’- அதாவது ஐயா வுக்கு பதிலாக ‘அய்யா’). இதில் நீங்களும் உங்கள் தலைவரும் விவரம் கெட்ட தனமாக -ஔ- வை நீக்கிவிட்டு -அவ்- ஆக்கினீர்களே (அவ்வை சண்முகம் சாலை!) அங்குதான் விதி விளையாடியது!

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

இப்போது நான் சில உதாரணங்கள் தருகிறேன்! ‘அந்த வழியில்’- அவ்வழியில்: (அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி)

‘அந்த விதமாக’- அவ்விதமாக: ‘அந்த வகையில்’- அவ்வகையில். இப்படியே ‘அந்த வண்ணம்’- ‘அவ்வண்ணம்’… இப்படியே பல சொற்கள் கூறலாம்! அந்த என்ற சுட்டுச்சொல் ‘அவ்’ என்று குறுகி வரும்!

அந்த வைப்பாட்டி – அவ்வைப்பாட்டி! ஆக ‘ஔ’ வை ஒழித்து, ‘ஔவைப்பாட்டி’ யையும் ‘அவ்வைப்பாட்டி’ ஆக்கியவர்கள் நீங்கள்!

அவ்வைப் பாட்டி – என்று பிரித்து எழுதினால் நீங்கள் சீர்திருத்தி அழைத்துக் குறிப்பிடும் ‘ஔவைப்பாட்டி’ வருவாள்: அவ்வைப்பாட்டி என்று சேர்த்து எழுதினால், கேடுகெட்ட அரசியலில், விதிவிலக்குகள் நீங்கலாக, ஊருக்கு ஊர் பரவலாகப் பெருகி உள்ள ஏதோ ஒரு தலைவரின் எவளோ ஒரு வைப்பாட்டிதான் வருவாள்!

உங்களுக்குதான் ‘சேர்ப்பதிலும்’- ‘பிரிப்பதிலும்’ நிறையக் குழப்பங்கள் உள்ளதே!

சொல்லப்போனால் உங்கள் திராவிடச் சிக்கல்களே, பிளவுகளே ‘சேர்ப்பதிலும்’- ‘பிரிப்பதிலும்’ உள்ள சிக்கல்கள்தானே!

தப்பாக வேறு எதையோ கற்பனை செய்ய வேண்டாம்! ‘ர்’ சேர்த்து ‘திராவிடர் கழகம்’ என்றார் ஈவேரா! அந்த ‘ர்’ ஐ பிரித்துவிட்டு ‘திராவிட முன்னேற்றக் கழகம்’- என்றார் அண்ணாதுரை. பிறகு கட்சி பிளந்த போது திமுகவில் எம்.ஜி.ஆர்., ‘அ’ சேர்த்தார், பிறகு இன்னொரு பிளவில் வைகோ ‘ம’ சேர்த்தார்…. இப்படி சேர்த்துவிடுவதிலும் பிரித்துவிடுவதிலும் கரை கண்டவர்கள்தானே நீங்கள்!

ALSO READ:  வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

இப்படிப்பட்டவர்களுக்கு ‘சிறு நீரை’ப் பிரிக்கத் தெரியாமல் போனதுதான் அதிசயம். தமிழ் அற்புதமான மொழி – கூடினால் ஒரு பொருள்; பிரிந்தால் வேறு பொருள்! ‘சிறு நீர்ப்பாசனம்’- என்பது ஒன்றும் கேலிக்குரியதல்ல! அதை உங்கள் பாணியில் கூட்டிவிட்டுக் கூட்டு ஒலியாக ‘சிறுநீர்ப்பாசனம்’- என்று ஒலிக்கச் செய்தலே கேலிக்குரியது!

அது சரி! மொழியைச் சீர் திருத்துகிறேன் என்று நீங்கள் அடித்த அக்கப்போர் கொஞ்சமா, நஞ்சமா!! குடிக்கும் ‘காபியை’ – ‘கொட்டை வடிநீர்’ என்றது முதல் ‘செல்ஃபோனை’- அகவி, முண்டக்கூவி என்றெல்லாம் நீங்கள் படுத்திய பாடு சொல்லி மாளாது!

அதைவிட INITIAL எனப்படும் பெயர் முதலெழுத்தை ‘தலை எழுத்து’ என்றாக்கி, “இனி எல்லாரும் தமிழில்தான் அவரவர் தலை எழுத்தை எழுத வேண்டும்”- என்று நீங்கள் சாமியாடிய காலம் ஒன்று உண்டு!

மிக மிகக் கற்பனையான பெயர்கள் சிலவற்றைத் தருகிறேன் – ஆனால் அவை நிஜத்தில் உங்கள் மூடத்தனமான தனித் தமிழ்வெறி எவ்வளவு கேனத்தனமானது என்பதைப் புரியவைக்கும்!

ALSO READ:  இந்திய மண்ணில் சிக்கிய சிஐஏ ஏஜெண்ட்! மணிப்பூர், மிசோரம்... என்ன நடக்குது இங்கே!

பாலூர் விசுவநாதன் மகன் ராமசாமி பா. வி. ராமசாமி ஆனான்! வேலூர் சின்னச்சாமி மகள் கமலா வே. சி. கமலாவாகிச் சீரழிந்து போனாள்! கும்பகோணம் சுப்ரமணி மகன் மூர்த்தி கு. சு. மூர்த்தியாகிப் பெயர்ப்பலகை முதல் வருகைப் பதிவேடுவரை சகலத்தையும் நாறடித்தான்!

அந்த நாற்றத்தோடு ஒப்பிடுகையில் ஹெச்.ராஜா மொழிபெயர்ப்பில் ‘சிறு நீர்ப்பாசனம்’ ஒன்றும் நாறிவிடவில்லை!!

– முரளி சீதாராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories