காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 8): காஷ்மீர நாசம்!

indian soldiers fighting in 1947 war 7591 - 2026பாகிஸ்தானின் முஸ்லீம் படையினர், பழங்குடியினர் தாக்குதல் என்ற போர்வையில், பாகிஸ்தானின் அபோட்டாபாத் பகுதியிலிருந்து காஷ்மீரை நோக்கி வேகமாக முன்னேறி வந்தனர்.

மூன்று நாட்களுக்குள்ளாக அவர்கள் முசாஃபர்பாத் மற்றும் டோமல் பகுதிகளை கைப்பற்றினர். யுரி நகரத்திற்குள் புகுந்து கொள்ளை அடித்தனர். பின் நகரத்தை தீக்கிரையாக்கினர்.

1947 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 26ந் தேதி, ஸ்ரீநகரிலிருந்து 35 மைல்கள் தொலைவிலிருந்த பரமுலா பகுதியைச் சென்றடைந்தனர். பரமுலா ஒரு ரம்மியமான பகுதி.ஆங்கிலேயர்களின் மனதைக் கவர்ந்த நகரம். ஆங்கிலேய அதிகாரிகள் தங்கள் மனைவிமார்களுடன் தேன் நிலவிற்கும்,ஓய்வெடுக்கவும் செல்லும் இடம்.

அக்டோபர் 26ந்தேதி வரை அழகான பூந்தோட்டங்களுடன்,நிழற்சாலைகளுடன் காட்சி அளித்த நகரம், அடுத்த நாள் மாலைக்குள் பாகிஸ்தானின் முஸ்லீம் படைகளால் சர்வ நாசம் செய்யப்பட்டது.

14,000 ஜனத்தொகை கொண்ட நகரத்தில் 3000 பேர் மட்டுமே உயிர் தப்பினர். மீதம் 11,000 பேரும் கொடூரமாக சித்திரவதைச் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

அங்கிருந்த ஒரு சர்ச் எரிக்கப்பட்டது.கிறிஸ்துவ மிஷினரி ஆஸ்பத்திரி,கான்வென்ட் தீக்கிரையாயின. ஹிந்து தாய்மார்கள்,கிறிஸ்துவ சன்யாசினிகள் ( NUNS ) எண்ணற்றோர் வெட்டவெளியில் வைத்து கற்பழிக்கப்பட்டனர்.

ஒரு ஆங்கிலேய அதிகாரியின் கண் முன்னேயே அவருடைய மனைவி வெறி பிடித்த பாகிஸ்தானிய ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டார்.பின்னர் அந்த அதிகாரியும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

நகரத்தின் மையப் பகுதியில் வைத்து இன்னொரு காஷ்மீர் வாசி சிலுவையில் அறையப்பட்டார். அக்டோபர் 26 ந் தேதி பாரதத்துடன் இணைவதாக மஹாராஜா ஹரிசிங் அறிவித்தார்.

பாகிஸ்தானின் முஸ்லீம் படைகள் இத்தகைய மோசமான வன்முறையை கையாளும் என்று அறிந்திருந்தால் முன்னமேயே காஷ்மீரை பாரதத்துடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் ஹரிசிங் கையெழுத்திட்டிருப்பார்.

அடுத்த நாள் காலையில்,பாரதப் படைகள் விமானம் மூலம் ஸ்ரீநகர் பள்ளத்தாக்கில் வந்திறங்கின. மாலையில் பாகிஸ்தானின் முஸ்லீம் படைகளுடன்,பாரதத்தின் ஹிந்து படைகள் கடுமையாக மோதத் துவங்கின.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஹிந்துக்களின் வேத பூமியாக விளங்கிய காஷ்மீரைக் காக்க போர் மூண்டது.

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories