காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 8): காஷ்மீர நாசம்!

indian soldiers fighting in 1947 war 7591 - 2026பாகிஸ்தானின் முஸ்லீம் படையினர், பழங்குடியினர் தாக்குதல் என்ற போர்வையில், பாகிஸ்தானின் அபோட்டாபாத் பகுதியிலிருந்து காஷ்மீரை நோக்கி வேகமாக முன்னேறி வந்தனர்.

மூன்று நாட்களுக்குள்ளாக அவர்கள் முசாஃபர்பாத் மற்றும் டோமல் பகுதிகளை கைப்பற்றினர். யுரி நகரத்திற்குள் புகுந்து கொள்ளை அடித்தனர். பின் நகரத்தை தீக்கிரையாக்கினர்.

1947 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 26ந் தேதி, ஸ்ரீநகரிலிருந்து 35 மைல்கள் தொலைவிலிருந்த பரமுலா பகுதியைச் சென்றடைந்தனர். பரமுலா ஒரு ரம்மியமான பகுதி.ஆங்கிலேயர்களின் மனதைக் கவர்ந்த நகரம். ஆங்கிலேய அதிகாரிகள் தங்கள் மனைவிமார்களுடன் தேன் நிலவிற்கும்,ஓய்வெடுக்கவும் செல்லும் இடம்.

அக்டோபர் 26ந்தேதி வரை அழகான பூந்தோட்டங்களுடன்,நிழற்சாலைகளுடன் காட்சி அளித்த நகரம், அடுத்த நாள் மாலைக்குள் பாகிஸ்தானின் முஸ்லீம் படைகளால் சர்வ நாசம் செய்யப்பட்டது.

14,000 ஜனத்தொகை கொண்ட நகரத்தில் 3000 பேர் மட்டுமே உயிர் தப்பினர். மீதம் 11,000 பேரும் கொடூரமாக சித்திரவதைச் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

ALSO READ:  வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

அங்கிருந்த ஒரு சர்ச் எரிக்கப்பட்டது.கிறிஸ்துவ மிஷினரி ஆஸ்பத்திரி,கான்வென்ட் தீக்கிரையாயின. ஹிந்து தாய்மார்கள்,கிறிஸ்துவ சன்யாசினிகள் ( NUNS ) எண்ணற்றோர் வெட்டவெளியில் வைத்து கற்பழிக்கப்பட்டனர்.

ஒரு ஆங்கிலேய அதிகாரியின் கண் முன்னேயே அவருடைய மனைவி வெறி பிடித்த பாகிஸ்தானிய ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டார்.பின்னர் அந்த அதிகாரியும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

நகரத்தின் மையப் பகுதியில் வைத்து இன்னொரு காஷ்மீர் வாசி சிலுவையில் அறையப்பட்டார். அக்டோபர் 26 ந் தேதி பாரதத்துடன் இணைவதாக மஹாராஜா ஹரிசிங் அறிவித்தார்.

பாகிஸ்தானின் முஸ்லீம் படைகள் இத்தகைய மோசமான வன்முறையை கையாளும் என்று அறிந்திருந்தால் முன்னமேயே காஷ்மீரை பாரதத்துடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் ஹரிசிங் கையெழுத்திட்டிருப்பார்.

அடுத்த நாள் காலையில்,பாரதப் படைகள் விமானம் மூலம் ஸ்ரீநகர் பள்ளத்தாக்கில் வந்திறங்கின. மாலையில் பாகிஸ்தானின் முஸ்லீம் படைகளுடன்,பாரதத்தின் ஹிந்து படைகள் கடுமையாக மோதத் துவங்கின.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஹிந்துக்களின் வேத பூமியாக விளங்கிய காஷ்மீரைக் காக்க போர் மூண்டது.

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories