February 21, 2026, 2:41 PM
30.4 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும்(பகுதி 10):

mountbatten jinnah - 2026

காஷ்மீர் பிரச்சனை மவுண்ட்பேட்டனை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளியது. பாரதத்தின் சார்பாகச் செயல்பட்டால்,பாரதம்,பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தராக செயல்படவில்லை,ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுகிறார் எனும் அவப்பெயர் ஏற்படும் என்ற தயக்கத்தால்,மவுண்ட்பேட்டன் முழு மனதுடன் பாரதத்தின் பக்கம் நிற்கவில்லை.

இரு நாடுகளுக்கிடையே பெரிய அளவில் போர் மூளக்கூடாது என்பதை உறுதிச் செய்வதிலேயே அவரது கவனம் இருந்தது.

indo pak war - 2026

அவருக்கிருந்த உடனடி பிரச்சனை,காஷ்மீருக்கு படைகளை அனுப்பி விட்ட காரணத்தால்,மதக்கலவரங்களை ஒடுக்க தேவையான அளவிற்கு பலமில்லாது தவித்தார்.

அழைத்தவுடன் வந்து நின்ற துருப்புக்களைப் பார்த்தே அனுபவப்பட்டவருக்கு, இப்போது வெறுமனே ஆங்காங்கே பரவிக் கொண்டிருந்த மதக்கலவரங்களைப் பற்றிய தகவல்கள்,பெருமளவில் அகதிகள் முகாம்களை நோக்கி சாரியாக வந்துக் கொண்டிருந்த மக்கள் ,அவர்கள் எதிர் கொண்டிருந்த பிரச்சனைகள் ஆகியவற்றை கேட்டுக் கொண்டு செய்வதறியாது தத்தளிப்பது மட்டுமே செய்ய முடிந்தது.

நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது. தலைநகர் டெல்லியில் உருவாகிக் கொண்டிருந்த பிரச்சனைகளின் அளவை சாதாரணமாக புரிந்துக் கொள்ள முடியாது என்பதாக இருந்தது.

பத்து லட்சம் ஜனத்தொகையைக் கொண்ட டெல்லியின் மக்கள் எண்ணிக்கை இரு மடங்காகி அரசு நிர்வாகத்திற்கு விழி பிதுங்கியது.

அதுவும் வந்த அகதிகள் சாதாரணமாக வரவில்லை.

கோபத்துடன்,சொல்லொண்ணா துயரங்களை தாங்கிய நெஞ்சினராக இருந்தனர்.செய்வதறியாது,இருண்ட எதிர்காலத்தை எதிர் நோக்கினவராக இருந்தனர். ஒரு பெரிய அலையிலே சிக்கிக் கொண்ட புழு,பூச்சிகளைப் போல் இருந்தனர்.

மனிதனுக்கு எதிராக மனிதன் நடத்திக் காட்டிய காட்டுமிராண்டித்தனமான அட்டூழியங்களை எதிர் கொண்டு திகைத்துப் போயிருந்தனர். அப்படி வந்த அகதிகளில் ஒருவன் பெயர் மதன்லால் பாஃவா.

பின்னாளில் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்றவன். வழியெங்கும் முஸ்லீம் வெறியர்கள் நிகழ்த்திய அட்டுழியங்களை அவன் விவரித்தான். அதைக் கேட்க கேட்க நம் இரத்தம் கொந்தளிக்கும்.

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories