காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 17): உண்ணாவிரத வழி!

mahatma gandhi - 2026

உண்ணாவிரதம் என்பது, சமூகத்திலே நடைபெறும் நியாயமற்ற செயல்களை ‘அகிம்சை ‘ முறையிலே எதிர்ப்பதாகும்.. என்று விளக்கமளித்தார் காந்தி. வேறு வழிகள் இல்லாத போதுதான் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்வதாக காந்தி தெரிவித்தார்.

ஒரு சமயம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் காந்தியை நேரடியாகவே சந்தித்து ‘’ உங்களுடைய ‘ அகிம்சை ‘ பற்றிய பிதற்றல்களை, தயவுசெய்து விட்டு விடுங்கள்; உங்களால் இந்த தேசத்தின் க்ஷத்திரிய தேஜஸே மாசு படுகிறது‘’ என்று கூறியிருந்தார்.

ஆனால் காந்தி, தான் பிடிச்ச முயலுக்கு மூணே கால்  எனும் குணம் உடையவர் ஆயிற்றே; எந்த நியாயமான அறிவுரையையும் கேட்பவரில்லை …

மசூதிகளிலிருந்து ஹிந்துக்கள் வெளியேறாவிட்டால் உண்ணாவிரதம் என்று மிரட்டுபவர்… பாகிஸ்தானில் ஹிந்துக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது… ஹிந்து பெண்கள் கற்பழிக்கப்பட்ட போது உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லையே…!

தன்னை, ஹிந்து மதத்தை பின்பற்றுபவர் என்று கூறிக் கொண்டவர் 1938ல் ‘வந்தே மாதரத்தை‘ தடை செய்ய வேண்டுமென ஜின்னா வற்புறுத்திய போது அதற்கு ஒப்புக் கொண்டார்.

ALSO READ:  தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

ஹிந்து சாம்ராஜ்யம் அமைத்த சத்ரபதி சிவாஜியை பற்றி யாராவது பேசினால் உடனே தடுத்து நிறுத்துவார். ஏனென்றால் முஸ்லீம்கள் மனம் புண்படுமாம். ’முஸ்லீம் ‘ வெறியாட்டங்களை ‘ எடுத்துரைத்த ‘ ‘ சிவ பவானி ‘ எனும் பாடலைத் தடை செய்தார்.

காந்திக்கு தன் அம்புறாத் தூணியிலிருந்த கடைசி அம்புதான் உண்ணாவிரதம்…

ஆனால் காந்தியின் உண்ணாவிரதம் ஹிந்து-முஸ்லீம் மனங்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த முடியவில்லை என்றால் வேறு எந்த வகையிலும் அது சாத்தியமில்லை என நம்பியவர்கள் அந்தக் காலத்தில் இருக்கத்தான் செய்தார்கள்…

இது புறமிருக்க… தேசப் பிரிவினையின் காரணமாக ஏற்பட்ட விளைவுகளில் ஒன்று…

ஆங்கிலேய அரசு விட்டுச் சென்ற அசையும் சொத்துக்களை ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது.

அதன்படி, கப்பல்கள், விமானங்கள், துப்பாக்கிகள், தோட்டாக்கள், ரெயில் இன்ஜின்கள், ரெயில் பெட்டிகள், லாரிகள், அலுவலக மேஜை நாற்காலிகள், அலுவலகக் கோப்புகள் என அனைத்துமே பங்கு போடப்பட்டது..

ரிசர்வ் வங்கியில் கணக்கிலிருந்த 220 கோடி ரூபாயும் பங்கு போடப்பட்டது. அதில் 25 சதவிகிதமான 55 கோடி ரூபாய் புதிதாக உருவான பாகிஸ்தானுக்கு கொடுப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

ஆனால் இந்த அனைத்து அசையும் சொத்துக்கள் மற்றும் ‘ ரொக்க மீதம் பற்றியக் கணக்கு ‘ போடுதல் அவ்வளவு எளிதாக முடிந்து விடவில்லை.

1947 ஆம் வருடம் நவம்பர் மாதம் வரை இழுபறி நீடித்தது… அதன் பின் தான் இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது..

[ தொடரும் ]

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories