காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 19): உண்ணாவிரதம் தோற்ற இடம்!

mahatma gandhi - 2026

காந்தியின் இந்த உண்ணாவிரதம் வெற்றி பெறுமா?  இதற்கு முன்பு வெற்றி பெற்றிருக்கிறதே !

1921 ல் வேல்ஸ் இளவரசர் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொள்ள பாரதம் வந்த போது, அவருக்கு எதிர்ப்பு காட்டும் விதமாக அவர் செல்லும் இடமெல்லாம் ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டுமென காந்தி மக்களை கேட்டுக் கொண்டார். ஹர்த்தால் என்பது அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்கும் முறையாகும்.

கடைகள் மூடியிருக்கும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள், தெருக்கள் வெறிச்சோடிக் காணப்படும்…

ஆனால், வேல்ஸ் இளவரசர் காலடி எடுத்து வைத்த முதல் இடமான பம்பாயில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் தெருக்களில் திரண்டு கோஷங்கள் எழுப்பி, வேல்ஸ் இளவரசருக்கு கறுப்புக் கொடிகள் காட்டி தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

கூட்டத்தைக் கலைக்க காவல்துறை பலப்பிரயோகம் செய்தது. கூட்டம் சிதறி ஓட, ஆங்கிலேய அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் காவல்துறையினர் தாறுமாறாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

வன்முறை பாரதத்தின் பல இடங்களுக்கும் பரவும் சூழ்நிலை நிலவியது. காந்தி அதிர்ச்சியடைந்தார். அமைதி திரும்புவதற்காக காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.

ஐந்து நாட்களுக்குள் கலவரங்கள் குறையத் தொடங்கின. மூன்று வருடங்களுக்குப் பிறகு காந்தி மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கினார்.

இந்த உண்ணாவிரதம் 21 நாட்களுக்கு நீடிக்கும் என அறிவித்தார்.

உண்ணாவிரதத்தின் நோக்கம் : மக்களின் பாவங்களுக்காக தன்னை தண்டித்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.

வடமேற்கு எல்லை பகுதியிலிருந்த கோஹட் எனும் இடத்தில் பெரிய அளவில் ஹிந்து முஸ்லீம் கலவரம் வெடித்தது.

அது இரு சமூகங்களிடையேயும் மனமாச்சர்யங்களை உருவாக்கி நாடெங்கும் கலவரங்கள் பரவும் நிலை ஏற்பட்டது. காந்தியின் உண்ணாவிரதத்தின் காரணமாக இரு சமூகங்களுக்கிடையே தற்காலிகமாக அமைதி திரும்பியது. அதன் பின் காந்தி உண்ணாவிரதம் என்பது அவ்வப்போது நடக்கும் நிகழ்வாகிப் போனது.

1932ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்பாக ஒரு உண்ணாவிரதம் நடந்தது. காலவரையற்ற உண்ணாவிரதம் என்று அறிவிக்கப்பட்டு, ஐந்து நாட்களில் முடிவிற்கு வந்தது.

மீண்டும் 1943ல், ’ வெள்ளையனே வெளியேறு ‘ இயக்கத்தின் போது நடந்த காவல் துறை மற்றும் இராணுவத்தின் அத்துமீறல்களைக் கண்டித்து நடைப்பெற்றது.அது 21 நாட்களுக்கு நீடித்தது.

1947ஆம் வருடம்,செப்டம்பர் மாதம் 1ந்தேதி காந்தி மறுபடியும் உண்ணாவிரத அறிவித்திருந்தார். அது, கல்கத்தாவில் ஹிந்துக்கள் பெரிய அளவில் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், அதனை முடிவிற்குக் கொண்டு வரவும்..

அப்போது கல்கத்தாவின் கவர்னராக ராஜாஜி இருந்தார். அவர் காந்தியிடம் உண்ணாவிரதத்தை கைவிடும்படி பேசிப் பார்த்தார்.

‘’ என்னுடைய உள்ளத்தில் இருந்து ஒரு குரல் எனக்கு வழிகாட்டுகிறது. அதன்படி நான் நடக்கிறேன் ‘’ என்றார் காந்தி.

‘’ நீங்கள்தான் அந்த உள்ளிருந்து வழிகாட்டும் குரலான கடவுளிடம் உங்களை ஒப்படைத்துக் கொண்டு விட்டீரே, அதன் பிறகு, உண்ணாவிரத காலங்களில் ஏன் தண்ணீருடன் எலுமிச்சை சாறை கலந்து சாப்பிடுகிறீர்கள் ’’ என்று ராஜாஜி கேட்டார்.

‘’ நீங்கள் சொல்வது சரிதான். எலுமிச்சை சாறு சாப்பிடுவது என்னுடைய பலவீனம்தான். அதை நிறுத்தி விடுகிறேன் ‘’ என்றார் காந்தி.

இந்த முறை உண்ணாவிரதத்தின் நோக்கம் 73 மணி நேரத்தில் நிறைவேறியது.

ஆக, காந்தியின் இறுதி ஆயுதமான உண்ணாவிரதம் கடந்தக் காலங்களிலே வெற்றியை பெற்று தந்திருக்கிறது..

ஆனால் இந்த முறை.. கொந்தளித்துக் கொண்டிருந்த அகதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் கோபம், கண் எதிரே கற்பிழந்த பெண்கள் பற்றிய சிந்தனை ஓட்டம், ஆயிரக்கணக்கில் பலியான ஆண்களும் பெண்களும்….

காந்தி இருந்தால் என்ன செத்தால் என்பதாகத்தான் அவர்கள் மன நிலை இருந்தது..

’ பழிக்கு பழி ‘ என்பதாக மட்டுமே அவர்கள் எண்ண ஓட்டம் இருந்தது. ‘ இரத்தத்திற்கு இரத்தம் ‘ என்று கோஷமிட்டு டெல்லி வீதிகளெங்கும் வலம் வந்தனர்.

‘எங்களுக்கு அமைதி தேவையில்லை, எங்கள் சிறுமிகளை, இளம் பெண்களை, திருமணமான தாய்மார்களை.. வயது வித்தியாசம் பாராது சின்னாபின்னமாக்கிய முஸ்லீம் வெறியர்களை விட முடியாது… அவர்கள் கொன்று குவித்த ஆயிரக் கணக்கான ஹிந்துக்களின் மரணத்திற்கு முஸ்லீம்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் ‘’

இந்த வெறிதான் ஹிந்துக்களிடையே நிலவியது… காந்திக்கும் இது புரிந்து போனது..

’‘ அகிம்சைக்கு நாம் விடை கொடுத்துக் கொண்டிருக்கிறோம் ‘’ என்று தன் செயலாளரான பியாரிலாலிடம் காந்தி கூறினார்.

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories