காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 37): காந்தி தாத்தா வந்தாரு.. சுதந்திரம் வாங்கி தந்தாரு…

savarkar vd - 2026

பிரிட்டிஷ் அரசாங்கம், சாவர்க்கரை கைது செய்து பாரதத்திற்கு கொண்டு செல்லும் நிகழ்வை மிகவும் இரகசியமாக வைத்திருந்தாலும், சாவர்க்கர் ‘ மொரியா ‘ கப்பலில் அழைத்துச் செல்லப்படுகிறார் என்ற தகவல் அப்போது பாரிஸிலிருந்த பெண் புரட்சியாளர் மேடம் காமா அவர்களுக்கும் அவருடைய இயக்கச் சகாக்களுக்கும் தெரிந்து விட்டது.

கப்பல் ‘ மார்செய்ல்ஸ்’ ஸை அடைந்து விட்டதை அறிந்து,சாவர்க்கரை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்பதற்காக ,வா.வே.சு. அய்யர் மற்றும் வேறு சிலரை அழைத்துக் கொண்டு காரில் பாரிஸிலிருந்து ‘ மார்செய்ல்ஸ் ‘ விரைந்தார் காமா.

அவர் மார்செய்ல்ஸ் சென்றடைவதற்குள்ளாக எல்லாம் கை மீறி போய் விட்டிருந்தது. அதற்குள்ளாக சாவர்க்கர் கைது செய்யப்பட்டு மீண்டும் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு 10,15 நிமிடங்கள் ஆகி விட்டிருந்தது.

உள்ளூர் வாசிகளிடமிருந்து நிகழ்ந்தேறிய பரபரப்பைப் பற்றிக் கேட்டறிந்த மேடம் காமா, கப்பலிலிருந்து கடலுக்குள் குதித்து தப்ப முயன்ற சாவர்க்கரின் சரித்திர புகழ்மிக்க சாகசத்தைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனார்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

சாவர்க்கரை நேரத்திற்கு வந்து காப்பாற்ற முடியாது போனதற்காக மிகவும் வருந்தினார். மார்ஸெய்ல்ஸ் மேயர் எம்.ஜாரஸிடம் நடந்தவைகளைப் பற்றி புகார் கொடுத்தார்.

பிரான்ஸ் மண்ணில் பிரிட்டிஷ் போலீசாரால் சாவர்க்கர் கைது செய்யப்பட்டது அத்துமீறல் மட்டுமல்லாது, பிரான்ஸ் நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் என்று கூறினார்.

இந்த செய்தியை,பிரான்ஸ் நாட்டு முக்கிய தினசரியான ‘ லி டெம்ஸ்’ க்கு அவரே நேரிடையாக தெரிவித்தார். சட்டவிதிகளை மீறி சாவர்க்கர் கைது செய்யப்பட்ட விஷயம் ‘ லி டெம்ஸ்’ ஸில் வெளியாகி காட்டுத் தீ போல் உலகெங்கும் பரவி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

பிரிட்டிஷ் அரசாங்கம், பாரபட்சமாக வழக்கை ஜோடிக்கும் என்றுணர்ந்த மேடம் காமா, சாவர்க்கரை சந்தித்து ஆவன செய்யும்படியாக, பாரிஸ்டர் ஜோசப் பாப்டிஸிடாவிற்கு தந்தி மூலம் செய்தி அனுப்பினார்.

சாவர்க்கருக்கு எப்படியாவது விடுதலை கிடைக்கச் செய்ய வேண்டுமென் மேடம் காமா துடித்தார். பாரிஸிலிருந்த பிரிட்டிஷ் தூதரகத்திற்கு சென்று இது தொடர்பான ஒரு மனுவையும் கொடுத்தார்.

அதில்,’’ இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட துப்பாக்கிகள் சாவர்க்கர் அனுப்பியது அல்ல, அதற்கு பொறுப்பு தான் தான் ‘’ என அதில் தெரிவித்திருந்தார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

இந்த செயல் மூலம், மேடம் காமாவின் துணிவு, செயல் திறன், தேச பக்தி தெரிய வருகிறது அல்லவா !!

அத்தோடு நில்லாமல், உலகெங்கும் உள்ள அனைத்து நாட்டின் பத்திரிகை களிலும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சட்ட விரோத செயல்பாட்டை வெளியே கொண்டு வந்தார்.

மேடம் காமாவின் புரட்சிகர செயல்பாடுகளைப் பற்றி இன்னும் கூறிக் கொண்டு போகலாம்,ஆனால் தொடரில் அதற்கு வாய்ப்பு இல்லாதது வருத்தமாகத்தான் இருக்கிறது.

ஆனால் ஒரு காரியத்தை நாம் செய்யலாம்… இன்று காந்தி ஜெயந்தி ஆதலால், ஓங்கி உரக்க காந்தியின் பக்தர்கள் மனம் மகிழ்ந்து போக ..பாடலாம்…

‘ காந்தி தாத்தா வந்தாரு சுதந்திரம் வாங்கித் தந்தார், நேரு மாமா வந்தாரு மிட்டாய் தந்தாரு…. ‘

(தொடரும்)

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories