காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 43): ஆங்கிலேயப் படைகளுக்கு ஆதரவாக!

savarkkar in pune - 2026

முதலாம் உலகப் போர் 1914 ஆம் வருடம் ஜூலை மாதம் 28ந் தேதி தொடங்கி 1918ஆம் வருடம் நவம்பர் மாதம் 11ந் தேதி வரை நீடித்தது. இந்தப் போரின் போது, ஆங்கிலேயர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை காந்தி எடுத்தார்.

இந்தியர்கள், பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து போரிட வேண்டும் என்று வலியுறுத்தி பலரையும் ராணுவத்தில் பங்கேற்கச் செய்தார். ஆங்கிலேயர்கள், KAISER-I-HIND எனும் பதக்கத்தை காந்திக்கு அளித்து கெளரவித்தனர். ‘ இந்தியாவின் தலைவர் ‘ என்று இதற்கு பொருள் கொள்ளலாம்.

ஆங்கிலேய அரசிற்கு விசுவாசமாக,ஆதரவாகச் செயல்படுபவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பதக்கம் இது. அதன் பிறகு, சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி நாயகரானார் காந்தி.

ஆனால் இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது, போரை புறக்கணிக்கும் படியாக மக்களைக் கேட்டுக் கொண்டார். அதனை தொடர்ந்து தேசம் முழுவதும் ‘ ஒத்துழையாமை இயக்கத்தை ‘ துவங்கி,’வெள்ளையனே வெளியேறு ‘ கோஷத்தை முன்னிறுத்தினார்.

’ ஆங்கிலேயர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை ‘ தெரிவிக்க வேண்டும் என்று தொடக்கத்தில் வலியுறுத்திய நேரு பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு காந்தியின் பிரச்சாரத்தோடு சேர்ந்துக் கொண்டார்.

ஆங்கிலேய அரசிற்கு நெருக்குதலை ஏற்படுத்திய இந்த நிகழ்வுகளால், காந்தி, நேரு மற்றும், இதர முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

முதலாம் உலகப்போரின் போது,அந்தமான் சிறையில் வாடிக் கொண்டிருந்த சாவர்க்கர், அப்போது ஜெர்மனியின் வெற்றியை விரும்பினார்.

ஆனால் இப்போது இரண்டாம் உலகப் போரின் போது, ஆங்கிலேய அரசிற்கு முழு ஆதரவைத் தெரிவித்து, பிரிட்டிஷ் ராணுவத்தில் பெருமளவில் சேரும்படியாக தன் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஏன் இந்த நிலைப்பாடு என்பது குறித்து பகிரங்கமாகத் தெரிவித்தார். ஹிந்துக்கள் ஆயுதங்களை பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.வெகு விரைவில் அதற்கான தேவையும் எழக் கூடும் என்றார்.

என்னே காலத்தின் கோலம் !

எந்த ஆயுதங்களை வைத்திருந்ததை, இந்தியர்கள் பயன்படுத்த முயன்றதை, குற்றம் எனக் கூறி கடும் தண்டனையை விதித்ததோ, அதே ஆங்கிலேய அரசு நவீன ஆயுதங்களை பயன்படுத்த இந்தியர்களுக்கு கற்றுக் கொடுக்க முன் வந்தது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாவிட்டால் அது முட்டாள்தனம் என சாவர்க்கர் கருதினார். அவருடைய பார்வை, இரண்டாம் உலகப் போரையும் கடந்து இருந்தது.

ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, இங்கு ஹிந்துக்களையும், முஸ்லீம்களையும் விட்டுச் சென்ற பிறகு, ஹிந்துக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இந்த ஆயுதப் பயிற்சி உதவும் என சாவர்க்கர் பகிரங்கமாக அறிவித்தார்.

காரணம் எதுவாயினும் சரி, சாவர்க்கரின் ஆதரவு நிலைப்பாட்டை ஆங்கிலேய அரசு வரவேற்று ஏற்றுக் கொண்டது. தங்களுக்கு நண்பனாக இல்லாது போனாலும், அப்போதைக்கு எதிரி இல்லை எனும் கோணத்தில் சாவர்க்கரை பார்த்தது ஆங்கிலேய அரசு.

அவரை சுதந்திரமாக நடமாட விட்டது. அதே சமயம் ரகசியமாகக் கண்காணித்தது.

( தொடரும் )

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories