காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 45): இரு துருவங்களை இணைத்த நூலிழை!

godse narayan apte - 2026

நாராயண் ஆப்தே…. ஏதாவது ஒரு விஷயத்தைச் சொன்னால்… சட்டென்று புரிந்து கொண்டு,அதற்கு பளிச்சென்று ஒரு பதிலை சொல்லக் கூடிய திறமை பெற்றவர்.

எப்போது உற்சாகம் மிகுந்து காணப்படுபவர், மற்றவர்களுக்கு உற்சாகமூட்டக் கூடியவர்… புத்திசாலி,நன்கு படித்தவர்,நன்கு படித்த அங்கத்தினர்கள் நிறைந்த குடும்பப் பின்னணிக் கொண்டவர்…

புகை பிடிக்கும் பழக்கம் உண்டு,அவ்வப்போது சிறிது மது அருந்தும் பழக்கமும் உண்டு… உயர்ந்த,தரமிக்க ஆடைகளை அணிவதில் விருப்பம் அதிகம்…

வாழ்க்கையின் எல்லா நல்ல விஷயங்களும் தனக்கு கிடைக்க வேண்டும் எனும் எண்ணம் மிக்கவர்…

நாதுராம் போன்றே ஆப்தேயும் நடுத்தர பிராமண பின்னணியிலிருந்து வந்த போதும், பிராமண சாதிக்குரிய சமூக ரீதியான தயக்கங்களையோ சம்பிரதாயங்களையோ பின்பற்றுபவர் இல்லை. மாறாக அவற்றை கிண்டலடித்து பேசக் கூடியவர்.

பார்ப்பதற்கு, சற்றே பெண்மைச் சாயல் கொண்ட அழகர். பெண்களுக்கு தன்னிடம் இருக்கும் ஈர்ப்பு பற்றி புளகாங்கிதம் அடைபவர்.

ஏதாவது ஒரு நாள், ஆப்தே பெண்கள் விஷயத்தில் மாட்டிக் கொள்ளப் போகிறார் என்று யாரேனும் எண்ணியிருந்தால் அதில் நியாயம் இருந்திருக்கக் கூடும்.

ALSO READ:  சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

ஆனால்….. அவர் கொலையாளியாக குற்றஞ் சுமத்தப்பட்டு நிற்பார் என்று யாரும் கிஞ்சித்தும் கருதியிருக்க மாட்டார்கள்.

ஒரு சமயம்…. ஒரு தபால் கவர் வந்தது… அதில்.. தபால் தலை மீது, அலுவலக முத்திரை சரியாக பதியவில்லை. கோட்ஸே நினைத்திருந்தால் அந்த தபால் தலையை எச்சரிக்கையாக எடுத்து, மீண்டும் பயன்படுத்தி இருக்க முடியும்.

ஆனால் அது தவறு என்று கோட்ஸே பயன்படுத்த மறுத்து விட்டார். கோட்ஸே இப்படி, ஆப்தே அப்படி..

இத்தகைய முற்றிலும் வெவ்வேறான குணாதிசயங்கள் கொண்ட இருவர் ஒன்றிணைந்தது எப்படி….?

‘ஹிந்து ஒருங்கிணைப்பு‘ எனும் உயரிய லட்சியம் அவர்களை ஒன்றிணைத்தது என்று கூறினால் அது மிகையாகாது. நாராயண் ஆப்தே 1911 ஆம் ஆண்டு பிறந்தவர், ஒரு வருடம் கோட்ஸேக்கு இளையவர். அவருடைய குடும்பம் பூனாவில் வசித்து வந்தது.

அவருடைய தந்தை அந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய சரித்திராசிரியர் மற்றும் சமஸ்கிருத பண்டிதர். மூன்று சகோதரிகள், நான்கு சகோதர்கள் கொண்ட குடும்பத்தில் ஆப்தே மூத்தவர்.

ஆப்தே பூனாவில் பள்ளி படிப்பை முடித்த பின் 1932 ஆம் ஆண்டில் பம்பாய் பல்கலைக்கழகத்திலிருந்து, B.Sc. பட்டம் பெற்றார். அந்தக் காலக்கட்டத்தில் வேலை கிடைப்பது கடினமாக இருந்தது.

ALSO READ:  அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

மூன்று வருடங்கள் காத்திருப்பிற்கு பின், Miss.Bruce எனும் பெண்மணி நடத்தி வந்த அமெரிக்கன் மிஷன் ஹை ஸ்கூலில் ஆசிரியராக வேலை கிடைத்தது.

(தொடரும்)

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories