காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 46): ஹிந்து ராஷ்ட்ர தள்!

Hindu Mahasabha Relief Center - 2026

ஆப்தே வேலைக்குச் சேருவதற்கு முன்பே அவருக்கு திருமணம் நடந்தது. ஆப்தேயை கலந்தாலோசித்து நடந்ததா அல்லது அவருடைய ஒப்புதலோடு நடந்ததா எனக் கூற இயலாது. பெற்றோர்கள் முடிவுச் செய்து,இத்திருமணத்தை நடத்தினர்.

ஃபெட்டரே ( FEDTARE ) குடும்பம் என்று பூனாவில் அறியப்பட்ட செல்வாக்கு மிக்க, செல்வந்தரின் குடும்பத்தைச் சேர்ந்த சம்பா எனும் பெண், ஆப்தேக்கு மனைவி ஆனார்.

ஒரு விதத்தில், இதை இரு குடும்பங்களின் ‘ வசதிக்கான திருமணம் ‘ என்று குறிப்பிடலாம். வேலையில் சேர்ந்த ஆப்தே கடுமையாக உழைத்தார்.

உடன் வேலை பார்த்தவர்கள், மாணவர்கள் என அனைவரிடையேயும் பிரபலமானார்.

1938 ல், அஹமத் நகரில் இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடுவதில் பயிற்சி அளிக்கும் சங்கம் ( RIFLE CLUB ) ஒன்றைத் துவக்க விரும்பினார். அப்போது பம்பாய் மாகாணத்திலிருந்த காங்கிரஸ் அரசாங்கமும் இதற்கு அனுமதி அளித்தது.

போலி தோட்டாக்கள் தான் உபயோகிக்கப்பட்டது என்றாலும், மத்தியிலிருந்த ஆங்கிலேய அரசாங்கம், இத்தகைய சங்கங்களை சந்தேகத்தோடேயே பார்த்தது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

ஆப்தேவுடைய சங்கத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, ஒரு வருடத்திற்குள்ளாக பூனா உள்ளிட்ட பல நகரங்களில் இது போன்ற சங்கங்கள் உருவாயின. 1939ல், அஹமத்நகரிலிருந்த ஹிந்து மகா சபா கிளையில்,ஆப்தே சேர்ந்தார்.

அங்கே… பின்னாளில் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற விஷ்ணு கர்கரேயை முதன் முதலாகச் சந்தித்தார்.

கர்கரே துறுதுறுப்பானவர்.நடுத்தர உயரம் கொண்டவர், சுருள் சுருளான கருப்பு முடி, தீர்க்கமான கண்கள்… பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.

தன் சுயமுயற்சியால் அஹமத் நகரில் ஹிந்து மகா சபையின் கிளையைத் துவங்கி அந்த பகுதியின் முக்கியத் தலைவராக இருந்தார். ஆரம்பத்தில், கர்கரேக்கு ஆப்தேயை பிடிக்கவில்லை, ஆப்தேக்கும் கர்கரேயை பிடிக்கவில்லை.

ஆப்தே ஒரு கிறிஸ்துவ பள்ளியில் வேலை செய்து வந்ததால், அவர் ஒரு நல்ல ஹிந்து இல்லை என கர்கரே கருதினார். கர்கரே கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும், சொல்லிக் கொள்ளத்தக்க குடும்பப் பின்னணி இல்லாதவர், போதிய படிப்பறிவு இல்லாதவர் என்பதாக எண்ணம் கொண்டு, ஆப்தே, கர்கரேயிடம் நெருங்கவில்லை.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பின்னாளில் நாதுராம் கோட்ஸேதான் இருவரையும் இணைத்தார். இந்தக் காலக் கட்டத்தில், ஆப்தேக்கு கட்சி வேலையில் பெரிய ஈடுபாடு ஒன்றும் இருக்கவில்லை.

ஆசிரியர் தொழிலில்தான் ஈடுபட வேண்டுமென்று விரும்பினார். அதற்காக விசேஷ முயற்சி எடுத்து பி.டி. பட்டமும் பெற்றார். ஆப்தேக்கு ஒரு மகன் பிறந்தான். மிகவும் மகிழ்ந்து போன ஆப்தே, அவனை ‘ பாப்பன் ‘ என்று செல்லமாக அழைத்து வந்தார்.

ஆனால், குழந்தைக்கு இரண்டு வயது இருந்த போது,அதற்கு போதிய மூளை வளர்ச்சியில்லை என்று அறிந்து நொறுங்கிப் போனார் ஆப்தே.

பித்துப் பிடித்தவர் போல ஆனார். ஆசிரியர் தொழிலைக் கை விட்டார். அஹமத் நகரையும், அதன் நினைவுகளையும் விட்டொழிக்க அங்கிருந்து வெளியேறினார்….

1942ல் ‘ வெள்ளையனே வெளியேறு ‘ போராட்டத்தை தொடர்ந்து பெரும்பாலும் காங்கிரஸ் தலைவர்கள் சிறையிலிருந்தார்கள். சாவர்க்கரின் ‘ ஹிந்து மகா சபா ‘ அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுக் கொண்டிருந்தது.

ஒரு அரசியல் கட்சி நேரடியாகச் செய்ய முடியாத காரியங்களைச் செய்வதற்காக, ஒரு ரகசிய இயக்கத்தை துவக்க சாவர்க்கர் முடிவுச் செய்தார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

அந்த அமைப்பிற்கு ‘ ஹிந்து ராஷ்ட்ர தள் ‘ என பெயரிட்டார். இது 1942 ஆம் ஆண்டு மே மாதம் துவக்கப்பட்டது. பின்னாளில் ‘ தள் ‘ என்றே மக்களிடையே ‘ புகழ் ‘ பெற்றது.

நாதுராம் கோட்ஸேயும், நாராயண் ஆப்தேயும் இதன் முக்கிய பொறுப்பாளர்கள் ஆனார்கள்.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து : யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories