February 20, 2026, 5:09 PM
29.3 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 46): ஹிந்து ராஷ்ட்ர தள்!

Hindu Mahasabha Relief Center - 2026

ஆப்தே வேலைக்குச் சேருவதற்கு முன்பே அவருக்கு திருமணம் நடந்தது. ஆப்தேயை கலந்தாலோசித்து நடந்ததா அல்லது அவருடைய ஒப்புதலோடு நடந்ததா எனக் கூற இயலாது. பெற்றோர்கள் முடிவுச் செய்து,இத்திருமணத்தை நடத்தினர்.

ஃபெட்டரே ( FEDTARE ) குடும்பம் என்று பூனாவில் அறியப்பட்ட செல்வாக்கு மிக்க, செல்வந்தரின் குடும்பத்தைச் சேர்ந்த சம்பா எனும் பெண், ஆப்தேக்கு மனைவி ஆனார்.

ஒரு விதத்தில், இதை இரு குடும்பங்களின் ‘ வசதிக்கான திருமணம் ‘ என்று குறிப்பிடலாம். வேலையில் சேர்ந்த ஆப்தே கடுமையாக உழைத்தார்.

உடன் வேலை பார்த்தவர்கள், மாணவர்கள் என அனைவரிடையேயும் பிரபலமானார்.

1938 ல், அஹமத் நகரில் இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடுவதில் பயிற்சி அளிக்கும் சங்கம் ( RIFLE CLUB ) ஒன்றைத் துவக்க விரும்பினார். அப்போது பம்பாய் மாகாணத்திலிருந்த காங்கிரஸ் அரசாங்கமும் இதற்கு அனுமதி அளித்தது.

போலி தோட்டாக்கள் தான் உபயோகிக்கப்பட்டது என்றாலும், மத்தியிலிருந்த ஆங்கிலேய அரசாங்கம், இத்தகைய சங்கங்களை சந்தேகத்தோடேயே பார்த்தது.

ஆப்தேவுடைய சங்கத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, ஒரு வருடத்திற்குள்ளாக பூனா உள்ளிட்ட பல நகரங்களில் இது போன்ற சங்கங்கள் உருவாயின. 1939ல், அஹமத்நகரிலிருந்த ஹிந்து மகா சபா கிளையில்,ஆப்தே சேர்ந்தார்.

அங்கே… பின்னாளில் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற விஷ்ணு கர்கரேயை முதன் முதலாகச் சந்தித்தார்.

கர்கரே துறுதுறுப்பானவர்.நடுத்தர உயரம் கொண்டவர், சுருள் சுருளான கருப்பு முடி, தீர்க்கமான கண்கள்… பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.

தன் சுயமுயற்சியால் அஹமத் நகரில் ஹிந்து மகா சபையின் கிளையைத் துவங்கி அந்த பகுதியின் முக்கியத் தலைவராக இருந்தார். ஆரம்பத்தில், கர்கரேக்கு ஆப்தேயை பிடிக்கவில்லை, ஆப்தேக்கும் கர்கரேயை பிடிக்கவில்லை.

ஆப்தே ஒரு கிறிஸ்துவ பள்ளியில் வேலை செய்து வந்ததால், அவர் ஒரு நல்ல ஹிந்து இல்லை என கர்கரே கருதினார். கர்கரே கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும், சொல்லிக் கொள்ளத்தக்க குடும்பப் பின்னணி இல்லாதவர், போதிய படிப்பறிவு இல்லாதவர் என்பதாக எண்ணம் கொண்டு, ஆப்தே, கர்கரேயிடம் நெருங்கவில்லை.

பின்னாளில் நாதுராம் கோட்ஸேதான் இருவரையும் இணைத்தார். இந்தக் காலக் கட்டத்தில், ஆப்தேக்கு கட்சி வேலையில் பெரிய ஈடுபாடு ஒன்றும் இருக்கவில்லை.

ஆசிரியர் தொழிலில்தான் ஈடுபட வேண்டுமென்று விரும்பினார். அதற்காக விசேஷ முயற்சி எடுத்து பி.டி. பட்டமும் பெற்றார். ஆப்தேக்கு ஒரு மகன் பிறந்தான். மிகவும் மகிழ்ந்து போன ஆப்தே, அவனை ‘ பாப்பன் ‘ என்று செல்லமாக அழைத்து வந்தார்.

ஆனால், குழந்தைக்கு இரண்டு வயது இருந்த போது,அதற்கு போதிய மூளை வளர்ச்சியில்லை என்று அறிந்து நொறுங்கிப் போனார் ஆப்தே.

பித்துப் பிடித்தவர் போல ஆனார். ஆசிரியர் தொழிலைக் கை விட்டார். அஹமத் நகரையும், அதன் நினைவுகளையும் விட்டொழிக்க அங்கிருந்து வெளியேறினார்….

1942ல் ‘ வெள்ளையனே வெளியேறு ‘ போராட்டத்தை தொடர்ந்து பெரும்பாலும் காங்கிரஸ் தலைவர்கள் சிறையிலிருந்தார்கள். சாவர்க்கரின் ‘ ஹிந்து மகா சபா ‘ அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுக் கொண்டிருந்தது.

ஒரு அரசியல் கட்சி நேரடியாகச் செய்ய முடியாத காரியங்களைச் செய்வதற்காக, ஒரு ரகசிய இயக்கத்தை துவக்க சாவர்க்கர் முடிவுச் செய்தார்.

அந்த அமைப்பிற்கு ‘ ஹிந்து ராஷ்ட்ர தள் ‘ என பெயரிட்டார். இது 1942 ஆம் ஆண்டு மே மாதம் துவக்கப்பட்டது. பின்னாளில் ‘ தள் ‘ என்றே மக்களிடையே ‘ புகழ் ‘ பெற்றது.

நாதுராம் கோட்ஸேயும், நாராயண் ஆப்தேயும் இதன் முக்கிய பொறுப்பாளர்கள் ஆனார்கள்.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து : யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories