December 5, 2025, 2:35 PM
26.9 C
Chennai

மீம்ஸ் ஹீரோ வடிவேலு.. இது வெறும் பேரு இல்ல… வாழ்வியல் தத்துவம்!

vadivelu - 2025

வடிவேலு..பேர் அல்ல..அது ஒரு வாழ்வியல் தத்துவம்..! வடிவேலு… மீம்ஸ்… – டீவிக்கள், சோஷியல் மீடியாஸ், பொதுவெளிகள், தமிழர்களின் தினசரி உரையாடல்கள் என நீக்கமற நிறைந்திருக்கும் மூச்சுக்காற்று..

வாய்மொழியைவிட அவரின் உடல் மொழி செய்திருக்கும் துவம்சங்களால் இன்றளவும், தமிழர்களின் வாழ்வில் தவிர்க்கமுடியாத அம்சமாகவே மாறிப்போய் விட்டார் வைகை புயல் என்ற வடிவேலு.

26 ஆண்டுகளுக்கு முன்பு தேவர்மகன் படத்தில் ஒரு கை வெட்டப்பட்ட நிலையில், ”என்னே? கர்மம், கழுவுற கையாலே சாப்பிடவும் வேண்டியிருக்கும்” என்று ஒல்லியான வடிவேலு, குணச்சித்திரத்தில் குமுறித்தள்ளியபோது அவருக்குள் இப்படி காமெடி காட்டாறு மறைந்திருக்கிறது என்பதை எவ்வளவு பேர் அறிந்திருப்பார்கள்?

வண்டு முருகன்’, தீப்பொறி திருமுகம், அலார்ட் ஆறுமுகம் பிச்சுமணி’ நாய் சேகர், கைப்புள்ள, ‘சூனா பானா’, ‘ பேக்கரி வீரபாகு’, ‘ஸ்நேக் பாபு’, வக்கீல் படித்துறை பாண்டி’, ”என்கவுன்ட்டர் ஏகாம்பரம்’, ‘நேசமணி’, ‘புலிகேசி’…

இப்படி வடிவேலுவின் காரெக்டர்களை பட்டியலிடும்போது, அவரின் வாயால் வார்த்தைகளாக வந்து விழுந்து சாகா வரம் பெற்ற டயலாக்குகள்தான் எத்தனையெத்தனை?

சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு?
பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருந்தது..
வடை போச்சே
நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணணும்
யேய். அவனா நீ..

டயலாக் பட்டியல் அதுபாட்டிற்கு போய்க்கொண்டே இருக்கும்.. பொதுவாக, நகைச்சுவைக்கு, மண்சார்ந்த உணர்வுகளோடு பிரதிபலிக்கும்போது பல மடங்கு பலம் கூடிவிடும்.

நம்முடைய தெருக்கூத்துக்களில், புராணம் அல்லாமல் நடப்பவற்றில் இப்படித்தான் வாழ்வியல் நக்கல்களை மையமாக வைத்து அள்ளித் தெளிப்பார்கள்..

அந்தந்த காலம், ஆட்கள், சம்பவங்கள் போன்றவற்றை வைத்து காமடியை பின்னினால் அதுதொடர்பான விஷயங்ளை அறிந்தவர்களுக்கு மட்டுமே சிரிப்பை வரவழைக்கும். அதேபோலத்தான் சிலருக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களை வைத்து காமெடி பண்ணுவதும், பெரும்பாலும் சுலபத்தில் புரியாது. நீண்ட காலத்திற்கும் நிலைக்காது.

ஆர்னால்ட்டையும் அனிருத்துவும் ஒப்பிட்டு காமெடி செய்தால் எத்தனைபேருக்கு புரியும்? அது எவ்வளவு தூரம் தாங்கும்..?

ஆனால் பொதுவாக தனி மனித உணர்வுகளை கோர்த்து பின்னப்படுகிற காமெடி காட்சிகள்தான் தலைமுறைகள் கடந்து பிரவாகம் எடுக்கும்..

மோசடித்தனத்தை நச்சென்று விவரித்த கல்யாண பரிசு தங்கவேலு சேட்டைகள் போன்றவை இதே ரகம்தான்.

அந்த வழியை பின்பற்றி, தனி மனித அலம்பல்களை உள்வாங்கி அப்படியே வெளியேகாட்டிய வடிவேலு உண்மையிலேயே வியக்கத்தக்க கலைஞன்…

அதனால்தான் அவரது ஒவ்வொரு டயலாக்கும் எல்லா மட்டத்து ஆட்களாலேயும், சட்டசபையில்கூட, நகைச்சுவை சந்தர்ப்பத்திற்காக எடுத்தாளப்பட்டுவருகிறது.

மற்றவர்களை வயிறுவலிக்க சிரிக்க வைப்பது என்பது இயற்கையின் மிகப்பெரிய அருட் கொடை.. அந்த வரத்தைப் பெற்ற, ஒன் அண்ட் ஒன்லி மீம்ஸ் ஹீரோ வடிவேலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

  • கருத்து: ஏழுமலை வேங்கடேசன் (ஊடகவியலாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories