காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 53): அக்ரனி-க்கு கொடுத்த உயிர்!

dainik godse 759 - 2026

ஒரு இரண்டு வருட காலத்திற்கு,’அக்ரனி’ தினசரி, மரணப் படுக்கையில் இருந்தது. உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.திணறித் திணறி மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. கோட்ஸே மற்றும் ஆப்தேயின் மனோதிடம் மட்டுமே பத்திரிகை வெளிவருவதை உறுதி செய்துக் கொண்டிருந்தது.

நாதுராம், மாதம் ஒரு முறையாவது ‘ அக்ரனி ‘ யின் செயல்பாடுகள் குறித்து சாவர்க்கருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.  இடையிடையே, ஆப்தேயும், கோட்ஸேயும், ’அக்ரனி‘ க்காக ஏதாவது கட்டுரைகள் எழுதும்படியாக சாவர்க்கரை கேட்டுக் கொண்டிருந்தனர்.

அதன் மூலம், பத்திரிகையின் கெளரவம் அதிகரிக்கும், விற்பனையும் அதிகரிக்கும் என உறுதியாக நம்பினர். ஆனால் தொடக்கத்தில், பணம் கொடுத்து உதவியதோடு சரி, அதன் பின் அந்த தினசரியின் எந்த விஷயங்களிலும் அவர் தலையிடவில்லை..

godse mag - 2026

ஆப்தே, கோட்ஸேயுடனான தொடர்பு  குறித்து, இந்த தினசரியை சுட்டிக் காட்டி, காந்தி கொலை வழக்கின் போது கேள்வி எழுப்பபட்ட போது, அந்த தினசரிக்கு, ஒரு சிறு குறிப்பு கூட  தான் கொடுத்ததில்லையென சாவர்க்கர் வாதாடினார்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

இதற்கிடையே, இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு வந்து விட்டது.  அதனோடு, ஆப்தேயின் போர் கால வேலையும் போனது. ஆங்கிலேயர்கள் பாரதத்தை விட்டு வெளியேற அவசரம் காட்டத் தொடங்கினர்.

ஆனால் ஜின்னாவும், முஸ்லீம் லீக்கும் நாட்டை முதலில் துண்டாடிக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என ஆங்கிலேயர்களை வற்புறுத்தினர். ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கிடையேயான பதற்றம், பரஸ்பர வெறுப்புணர்வாக மாறியது.

ஹிந்துக்களின் கண்ணோட்டத்தை பிரதிபலித்து வந்த ‘ அக்ரனி ‘ யின் சர்குலேஷன் அதிகரித்தது, விளம்பரங்களும் வரத் துவங்கின. தினசரியின் மாத நஷ்டம் குறையத் தொடங்கி, பத்திரிகையின் விரிவாக்கம் பற்றியும் யோசனை வரத் தொடங்கியது.

cartoon agrani1 - 2026

சொந்தமாக ஒரு பிரிண்டிங் ப்ரஸ்,ஒரு டெலிப்ரிண்டர் வாங்கினார்கள்.  பத்திரிகைக்காக சொந்த கட்டிடமும் தேடத் தொடங்கினார்கள்.

பூனாவில் 495, ஷான்வார் பத் எனும் இடத்தில் நிலம் கிடைத்தது. அதில் அச்சகத்தையும், அலுவலகத்தையும் அமைக்க, ஒரு ஷெட் போடுவதற்காகவும் திட்டமிட்டனர்.

1946 ஆம் வருடம்…. பத்திரிகையை பொறுத்த வரை நல்ல தொடக்கமாக அமைந்தது.

ஆனால்… அந்த வருடம்தான், சுதந்திரத்திற்கும், தேசப் பிரிவினைக்கும் முந்தைய வருடமும் கூட.. அந்த வருடம் தான் பெரிய அளவில் ஹிந்து-முஸ்லீம் கலவரங்கள் மூண்டு, படுகொலைகள் நிகழ்ந்தன…!

ALSO READ:  வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

(தொடரும்)

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories