காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 53): அக்ரனி-க்கு கொடுத்த உயிர்!

dainik godse 759 - 2026

ஒரு இரண்டு வருட காலத்திற்கு,’அக்ரனி’ தினசரி, மரணப் படுக்கையில் இருந்தது. உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.திணறித் திணறி மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. கோட்ஸே மற்றும் ஆப்தேயின் மனோதிடம் மட்டுமே பத்திரிகை வெளிவருவதை உறுதி செய்துக் கொண்டிருந்தது.

நாதுராம், மாதம் ஒரு முறையாவது ‘ அக்ரனி ‘ யின் செயல்பாடுகள் குறித்து சாவர்க்கருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.  இடையிடையே, ஆப்தேயும், கோட்ஸேயும், ’அக்ரனி‘ க்காக ஏதாவது கட்டுரைகள் எழுதும்படியாக சாவர்க்கரை கேட்டுக் கொண்டிருந்தனர்.

அதன் மூலம், பத்திரிகையின் கெளரவம் அதிகரிக்கும், விற்பனையும் அதிகரிக்கும் என உறுதியாக நம்பினர். ஆனால் தொடக்கத்தில், பணம் கொடுத்து உதவியதோடு சரி, அதன் பின் அந்த தினசரியின் எந்த விஷயங்களிலும் அவர் தலையிடவில்லை..

godse mag - 2026

ஆப்தே, கோட்ஸேயுடனான தொடர்பு  குறித்து, இந்த தினசரியை சுட்டிக் காட்டி, காந்தி கொலை வழக்கின் போது கேள்வி எழுப்பபட்ட போது, அந்த தினசரிக்கு, ஒரு சிறு குறிப்பு கூட  தான் கொடுத்ததில்லையென சாவர்க்கர் வாதாடினார்.

இதற்கிடையே, இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு வந்து விட்டது.  அதனோடு, ஆப்தேயின் போர் கால வேலையும் போனது. ஆங்கிலேயர்கள் பாரதத்தை விட்டு வெளியேற அவசரம் காட்டத் தொடங்கினர்.

ஆனால் ஜின்னாவும், முஸ்லீம் லீக்கும் நாட்டை முதலில் துண்டாடிக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என ஆங்கிலேயர்களை வற்புறுத்தினர். ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கிடையேயான பதற்றம், பரஸ்பர வெறுப்புணர்வாக மாறியது.

ஹிந்துக்களின் கண்ணோட்டத்தை பிரதிபலித்து வந்த ‘ அக்ரனி ‘ யின் சர்குலேஷன் அதிகரித்தது, விளம்பரங்களும் வரத் துவங்கின. தினசரியின் மாத நஷ்டம் குறையத் தொடங்கி, பத்திரிகையின் விரிவாக்கம் பற்றியும் யோசனை வரத் தொடங்கியது.

cartoon agrani1 - 2026

சொந்தமாக ஒரு பிரிண்டிங் ப்ரஸ்,ஒரு டெலிப்ரிண்டர் வாங்கினார்கள்.  பத்திரிகைக்காக சொந்த கட்டிடமும் தேடத் தொடங்கினார்கள்.

பூனாவில் 495, ஷான்வார் பத் எனும் இடத்தில் நிலம் கிடைத்தது. அதில் அச்சகத்தையும், அலுவலகத்தையும் அமைக்க, ஒரு ஷெட் போடுவதற்காகவும் திட்டமிட்டனர்.

1946 ஆம் வருடம்…. பத்திரிகையை பொறுத்த வரை நல்ல தொடக்கமாக அமைந்தது.

ஆனால்… அந்த வருடம்தான், சுதந்திரத்திற்கும், தேசப் பிரிவினைக்கும் முந்தைய வருடமும் கூட.. அந்த வருடம் தான் பெரிய அளவில் ஹிந்து-முஸ்லீம் கலவரங்கள் மூண்டு, படுகொலைகள் நிகழ்ந்தன…!

(தொடரும்)

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories