காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 58): பதிலடிகளால் பதறிய தலைகள்!

partition riots - 2026

கூட்டம் முடிந்து, கலைந்து சென்ற வெறிக் கும்பல் ஹிந்துக்களின் வீடுகள், கடைகளை அடித்து நொறுக்கி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என கோர தாண்டவம் ஆடியது. இவையெல்லாம் காட்டுமிராண்டித்தனமான இஸ்லாமியர் ஆக்கிரமித்த காலக்கட்டத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது.

இந்தக் கொலை வெறித் தாக்குதல் இரண்டு நாள் இடைவிடாமல் நடந்தது.  கழுத்து முறிக்கப்பட்ட கோழிபோல வேதனையில் துடுத்தது கல்கத்தா. போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்தபடி தாக்குதலை முதல்வர் கண்காணித்துக் கொண்டிருந்தார்.

குற்றம் புரிந்ததாக கைது செய்யப்பட்ட அனைவரும் முதல்வரின் உத்தரவின் பேரில் உடனே விடுவிக்கப்பட்டனர். ‘ தீயதைப் பார்க்க மாட்டேன், தீயதைக் கேட்க மாட்டேன்‘ என்றபடி கவர்னர் எஃப் பர்ரோஸ் தனது அறையிலேயே சிலை போல் அமர்ந்திருந்தார்.

பாதிக்கப்பட்ட ஹிந்துக்கள் மற்றும் அதிகாரிகள் செய்த முறையீடுகள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லானது. தற்காப்பிற்காகவேனும் பொங்கி எழாவிட்டால், தங்கள் கதி அதோகதிதான என்பதை ஹிந்துக்கள் உணர்ந்தனர்.

பொங்கி எழுந்த ஹிந்துக்களின் ஆவேச அலை முஸ்லீம்களுக்கு எதிராகத் திரும்பியது. முஸ்லீம்கள் உதை வாங்குவதைக் கண்டதும் கவர்னரின் செவியில் கடமையின் அழைப்பு விழுந்தது.

ராணுவத்தை அழைத்து கலவரத்தை ஒடுக்க உத்தரவிட்டார். கொல்லப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கை 10,000க்கும் மேல். படுகாயமடைந்தவர்கள், கை,கால்கள் இழந்தோர்,15,000. வீடு,வாசல் இழந்து அனாதையானவர்கள் 1 லட்சத்திற்கும் மேல்.

‘ ஸ்டேட்ஸ்மன் ‘ பத்திரிகையைச் சேர்ந்த கிம் கிரிஸ்டன் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர், ‘’ கடுமையான யுத்தங்களை நேரில் கண்டவன் நான் ; போர் இது போல இருப்பதில்லை.இது கலவரமும் கிடையாது.இதை வர்ணிக்க வார்த்தை ,மத்தியகால வரலாற்றில்தான் உள்ளது.

அது ‘ வெறித்தாக்குதல் ‘.வெறித்தாக்குதலோ திடீரெனப் பீறிட்டு வருவது.இங்கே இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது ‘’ என்று எழுதினார்.

ஆகஸ்ட் கடைசி வாரத்தில் வைஸ்ராய் வேவல் கல்கத்தாவிற்கு வருகை புரிந்தார்.  அவரது முன்னிலையில் கல்கத்தா ராணுவ கமாண்டர் மற்றும் வங்காள் அரசின் தலைமைச் செயலாளர் இருவரும்,நடந்த வன்செயல்களில் முதல்வர் சுஹ்ரவர்த்தி குற்றவாளி என்று அம்பலப்படுத்தினார்கள்.

ஹிந்துக்களின் பதிலடி என்ற எதிர்பாராத திருப்பம் நேரவே முஸ்லீம் லீகின் படுகொலைத் திட்டத்தில் அவர்கள் கணித்திருந்த முடிவுகள் தவிடுபொடியானது.

அதிகார வர்க்கமும், போலீஸும் உடந்தையாக இருந்து சகல வசதிகளும் செய்து கொடுத்தும் லீகின் ரெளடிக் கூட்டத்தால் ஹிந்துக்களை மிரட்டிப் பணிய வைத்து விட முடியவில்லை.

‘சாது ஹிந்து‘ தனது பாரம்பரிய வீரம் காட்டி முஸ்லீம் லீக் கூட்டத்தை ஒட்டமெடுக்கச் செய்தான்.

(தொடரும்)

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து : யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories