December 5, 2025, 2:55 PM
26.9 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 58): பதிலடிகளால் பதறிய தலைகள்!

partition riots - 2025

கூட்டம் முடிந்து, கலைந்து சென்ற வெறிக் கும்பல் ஹிந்துக்களின் வீடுகள், கடைகளை அடித்து நொறுக்கி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என கோர தாண்டவம் ஆடியது. இவையெல்லாம் காட்டுமிராண்டித்தனமான இஸ்லாமியர் ஆக்கிரமித்த காலக்கட்டத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது.

இந்தக் கொலை வெறித் தாக்குதல் இரண்டு நாள் இடைவிடாமல் நடந்தது.  கழுத்து முறிக்கப்பட்ட கோழிபோல வேதனையில் துடுத்தது கல்கத்தா. போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்தபடி தாக்குதலை முதல்வர் கண்காணித்துக் கொண்டிருந்தார்.

குற்றம் புரிந்ததாக கைது செய்யப்பட்ட அனைவரும் முதல்வரின் உத்தரவின் பேரில் உடனே விடுவிக்கப்பட்டனர். ‘ தீயதைப் பார்க்க மாட்டேன், தீயதைக் கேட்க மாட்டேன்‘ என்றபடி கவர்னர் எஃப் பர்ரோஸ் தனது அறையிலேயே சிலை போல் அமர்ந்திருந்தார்.

பாதிக்கப்பட்ட ஹிந்துக்கள் மற்றும் அதிகாரிகள் செய்த முறையீடுகள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லானது. தற்காப்பிற்காகவேனும் பொங்கி எழாவிட்டால், தங்கள் கதி அதோகதிதான என்பதை ஹிந்துக்கள் உணர்ந்தனர்.

பொங்கி எழுந்த ஹிந்துக்களின் ஆவேச அலை முஸ்லீம்களுக்கு எதிராகத் திரும்பியது. முஸ்லீம்கள் உதை வாங்குவதைக் கண்டதும் கவர்னரின் செவியில் கடமையின் அழைப்பு விழுந்தது.

ராணுவத்தை அழைத்து கலவரத்தை ஒடுக்க உத்தரவிட்டார். கொல்லப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கை 10,000க்கும் மேல். படுகாயமடைந்தவர்கள், கை,கால்கள் இழந்தோர்,15,000. வீடு,வாசல் இழந்து அனாதையானவர்கள் 1 லட்சத்திற்கும் மேல்.

‘ ஸ்டேட்ஸ்மன் ‘ பத்திரிகையைச் சேர்ந்த கிம் கிரிஸ்டன் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர், ‘’ கடுமையான யுத்தங்களை நேரில் கண்டவன் நான் ; போர் இது போல இருப்பதில்லை.இது கலவரமும் கிடையாது.இதை வர்ணிக்க வார்த்தை ,மத்தியகால வரலாற்றில்தான் உள்ளது.

அது ‘ வெறித்தாக்குதல் ‘.வெறித்தாக்குதலோ திடீரெனப் பீறிட்டு வருவது.இங்கே இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது ‘’ என்று எழுதினார்.

ஆகஸ்ட் கடைசி வாரத்தில் வைஸ்ராய் வேவல் கல்கத்தாவிற்கு வருகை புரிந்தார்.  அவரது முன்னிலையில் கல்கத்தா ராணுவ கமாண்டர் மற்றும் வங்காள் அரசின் தலைமைச் செயலாளர் இருவரும்,நடந்த வன்செயல்களில் முதல்வர் சுஹ்ரவர்த்தி குற்றவாளி என்று அம்பலப்படுத்தினார்கள்.

ஹிந்துக்களின் பதிலடி என்ற எதிர்பாராத திருப்பம் நேரவே முஸ்லீம் லீகின் படுகொலைத் திட்டத்தில் அவர்கள் கணித்திருந்த முடிவுகள் தவிடுபொடியானது.

அதிகார வர்க்கமும், போலீஸும் உடந்தையாக இருந்து சகல வசதிகளும் செய்து கொடுத்தும் லீகின் ரெளடிக் கூட்டத்தால் ஹிந்துக்களை மிரட்டிப் பணிய வைத்து விட முடியவில்லை.

‘சாது ஹிந்து‘ தனது பாரம்பரிய வீரம் காட்டி முஸ்லீம் லீக் கூட்டத்தை ஒட்டமெடுக்கச் செய்தான்.

(தொடரும்)

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து : யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories