காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 65): அப்ரூவ்ரான திகம்பர்

digambar ramachandra badge - 2026
தன் தம்பி திக்ஷிதிக்கு ‘ அனுமதிக்கப்பட்ட‘ வாங்கவோ விற்கவோ லைசென்ஸ் தேவைப் படாத ஆயுதங்கள் சப்ளை செய்பவர்களில், திகம்பர் பாட்கே என்பவர் ஒருவர் என்பதும், அவர் பூனாவில் ‘ சஸ்த்ர பண்டர் ‘ (ஆயுதங்கள் விற்பனையகம்‘) என்ற பெயரில் கடையை நடத்தி வருகிறார் என்பதும் தாதா மஹராஜுக்கு தெரிந்திருந்தது.

இந்த பட்கேதான், கார்கரே குழு நவ்காளி சென்ற போது 6 இரும்பு வலைக் கவசங்களை விற்றவர். தாதா மஹராஜ் அவரோடு பேசியதில்லை.ஆனால் சில நேரங்களில் பார்த்திருக்கிறார்.

திகம்பர் பாட்கேயை, ஆப்தேயும் கோட்ஸேயும் நன்கு அறிவர். பின்னாளில் காந்தியை கொலை செய்ய திட்டமிட்ட போது அதில் பங்கேற்றவர். ஆனால் வழக்கின் போது அப்ரூவராக மாறி விட்டார் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

1947 ஆம் வருடம் ஜூலை மாதம் வாக்கில், பாகிஸ்தானிய தலைவர்களை, அவர்களுடைய பாராளுமன்ற கட்டிடத்தை தகர்த்து மொத்தமாக கொன்று விட ஆப்தே திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவலை தாதா மஹராஜ் அறிந்த கால கட்டத்தில்  நாதுராமும் ஆப்தேயும் திகம்பர் பாட்கேயை எட்டத்திலேயே வைத்திருந்தார்கள்.

அவரிடமிருந்து இவர்கள் எந்த ‘ அனுமதிக்கப்பட்ட ‘ ஆயுதங்கள் வாங்கியதும் இல்லை, தங்களுடைய ரகசியத் திட்டங்கள் பற்றி பேசியதும் இல்லை. ஆகவே அவரைப் பற்றி அக்கறை கொள்ளவும் இல்லை.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

dhikambar - 2026

ஆப்தே செய்யவிருந்த காரியத்தைக் கேட்டு ‘ த்ரில்’ அடைந்த தாதா மஹராஜ், அவரை சந்திக்கவும், பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளவும், அவருக்கு ஏதாவது விதத்தில் உதவ முடியுமா என பார்ப்பதற்காகவும் பூனா விரைந்தார்.

1947 ஜூலை மாதத்தில், தாதா மஹராஜ் இரண்டு முறை ஆப்தேயிடம் ரகசிய ஆலோசனைகள் நடத்தினார். ஒரு கூட்டத்தில் கார்கரேயும் கலந்துக் கொண்டார்.

பாகிஸ்தான் பாராளுமன்றக் கட்டிடத்தை தகர்க்க இரண்டு ‘ மார்டர்கள் ‘ ( ஒரு பெரிய வகையான துப்பாக்கி ) தேவைப்படும் என்றும் அதற்கு 5000 ரூபாய் ஆகும் என்றும் ஆப்தே கூறினார். ஆப்தேயின் ராணுவ பின்னணியை அறிந்திருந்த தாதா மஹராஜ் பணத்தை கொடுக்கச் சம்மதித்தார்.

ஆப்தேயுடனான பேச்சு வார்த்தையில் திருப்தியடைந்த தாதா மஹராஜ் பம்பாய் திரும்பினார். ஆனால், பின்னாளில் காந்தி கொலை வழக்கின் போது, தான் பணம் ஏதும் தரவில்லை என தாதா மஹராஜ் மறுத்தார்.

அவர் பணம் கொடுத்திருக்கக் கூடும் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆப்தே அந்த இரண்டு ‘ மார்டர் ‘ களை வாங்கினாரா இல்லையா என்று தெரியவில்லை.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

தாதா மஹராஜிடம் ஆப்தே கூறுகையில்,அவை கோவாவில் கிடைப்பதாகவும், அங்கிருந்த போர்த்துகீயர்களிடமிருந்து வாங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் ஆப்தே கூறிய ’ மார்டர்கள் ‘கிடைப்பது சாத்தியமா, அப்படியே கிடைத்தாலும், ராணுவத்தில் வெறும் நிர்வாகப் பணியில் இருந்த ஆப்தேயிற்கு அதை பயன்படுத்தத் தெரியுமா, நல்ல பயிற்சிப் பெற்ற ராணுவ வீரருக்கே, ‘ மார்டாரை பயன்படுத்துவது எளிதான காரியம் இல்லை….

அப்படியேயிருந்தாலும் அதை பாகிஸ்தான் பாராளுமன்றக் கட்டிடத்தை தகர்க்க எப்படி அங்கு கொண்டுச் செல்ல திட்டமிட்டிருந்தார் என்பதற்கான கேள்விகளுக்கு கடைசி வரை விடை கிடைக்கவேயில்லை.

போர்த்துகீயர்களிடமிருந்து ‘ மார்டர்கள் ‘ கிடைக்கவே இல்லை என்பதுதான் உண்மையாக இருக்க முடியும். ஏனென்றால்,இப்போது ஆப்தேயின் கவனம் ஒரு ஸ்டென் கன் வாங்குவதில் திரும்பி இருந்தது.

( தொடரும் )

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories