காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 74): தீக்ஷித் மஹராஜின் கூட்டு!

godse - 2026

மதன்லால் பஹ்வா, டாக்டர் ஜெயினின் புத்தகங்களை விற்பனை செய்து வந்த போது, அதை வாங்கியவர்களில் ஒருவர், தாதா மஹாராஜின் சகோதரர் தீக்ஷித் மஹராஜ்.

மதன்லால் பஹ்வா விற்ற புத்தகத்துக்கு, தீக்ஷித் மஹராஜ் கொடுத்த விலை 5 ரூபாய். புத்தகங்கள் பையில், மதன்லால் பஹ்வா, வழக்கமாக ஒளித்து எடுத்துக் கொண்டு செல்லும் வெடிகுண்டுகளில் சிலவற்றை, தீக்ஷித் மஹராஜ் வாங்கினாரா இல்லையா என்று இருவருமே எந்தக் காலக்கட்டத்திலும் வெளியிடவில்லை.

அப்படியொரு பரிவர்த்தனை நடந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.  தன்னுடைய சகோதரர் சார்பில், வெடிகுண்டுகளை வாங்குவது, தீக்ஷித் மஹாராஜ் செய்யும் வழக்கமான ஒன்றுதானே.

ஆப்தேயின் திட்டங்களைக் கேட்டு, தாதா மஹராஜ் பிரமித்துப் போயிருந்த காலக்கட்டம் அது.

இந்த காலக்கட்டத்தில்தான் ( 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் ) ஆப்தேயிடம், தன்னால் சில ‘ கையெறி குண்டுகளையும்,டைனமைட்டையும் ‘ கொடுத்துதவ முடியும் என்று தாதா மஹராஜ் தெரிவித்திருந்தார்.

எது எப்படியோ, அந்த ஒரு புத்தகத்தின் விற்பனை மூலம், தீக்ஷித் மஹராஜ் மதன்லால் பஹ்வா இருவரும் நெருக்கமானார்கள். மதன்லால் பஹ்வா, திக்ஷித் மஹராஜ் சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்தது.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

செம்பூர் முகாமில் தங்கியிருந்த அகதிகளுக்கு உதவும் பொருட்டு துணிகள் மற்றும் சமையல் பாத்திரங்களை திக்ஷித் மஹராஜ்,மதன்லால் பஹ்வாவிடம் வழங்கினார்.

திக்ஷித் மஹராஜை, மதன்லால் பஹ்வா முதல் முறையாக சந்தித்து சென்ற பிறகு,தன் அண்ணன் தாதா மஹராஜிடம் சந்திப்பின் முழு விவரங்களையும் திக்ஷித் மஹராஜ் தெரிவித்திருப்பார் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

அதே போல, மதன்லால் பஹ்வா காணாவண்ணம்,தாதா மஹராஜ் மட்டும் மதன்லால் பஹ்வாவை பார்த்திருப்பார் என்பதும் உறுதி.

அஹமத் நகரிலிருந்து பம்பாயிற்கு ,’ கையெறி குண்டுகள் ‘ விற்பனை செய்யக்கூடிய யாரேனும் கிடைப்பார்களா என்று தேடி வந்த விஷ்ணு கார்கரே 1947 ஆம் வருடம் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் தொடக்கத்திலோ மதன்லால் பஹ்வாவை சந்தித்தார்.

அந்த நேரத்தில்,தொழிற்சாலையில்,மதன்லால் பஹ்வா வேலை பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய வாய்ப்பில்லை. ஏனென்றால்,அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் மதன்லால் பஹ்வாவின் இடது கை ஆள்காட்டி விரலின் மேல் பகுதி துண்டிக்கப்பட்டிருந்தது.

ஒரு நாள் தொழிற்சாலையில்,வெடிகுண்டுகள் தயாரிப்பிற்கு உதவும் ‘ TURN TABLE ‘ கியர்களில் விரல் மாட்டிக் கொண்டு விட்டது. அவருடைய உதவியாளர் உடனடியாக மெஷினை நிறுத்தி விட்டாலும், மெஷினின் இரண்டு பற்சக்கரங்கள் இடையே விரல் நன்றாக மாட்டிக் கொண்டு நிறைய இரத்தப் போக்கும் ஏற்பட்டது.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

பின்னாளில், பல வருடங்கள் கழித்து , காந்தி கொலை வழக்கில் பெற்ற ஆயுள் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகி விட்ட பிறகு … ஒரு புத்தகத்தின் ஆசிரியரிடம் இது பற்றி விவரித்த மதன்லால், ’ முழுவதுமாக தயாரித்து முடிக்கப்படாத வெடிகுண்டுகள்,அவை தயாரிக்கப்பட்டு வந்த இடத்தில் சிதறிக் கிடந்தன.

டாக்டர் யாரேயையேனும் வரவழைக்கலாமா என்றால்,அது தற்கொலைக்கு ஒப்பானது.ஏனென்றால் விஷயம் வெளியே கசிந்து,போலீஸிடும் மாட்டிக் கொள்ளும் அபாயம் இருந்தது. ஆகவே, நான் ஒரு கத்தியை எடுத்து என் விரலை வெட்டி ‘ TURN TABLE ‘ சக்கரத்திலிருந்து விரலை விடுவித்துக் கொண்டேன் ‘’

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories