‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: ஜெயலலிதா இல்லாததால குளிர்விட்டுப் போயிடுச்சு…!

Published:

03 June25 Minister Jayakumar - 2026

ஜெயலலிதா இல்லாததால், சில நடிகர்களுக்கு குளிர்விட்டுப் போயிருக்கிறது என்று, சர்கார் படத்தை தொடர்பு படுத்தி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகியுள்ள சர்கார் திரைப்படம் குறித்த சர்ச்சை அதிகம் வெடித்துள்ள நிலையில், அமைச்சர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதாகக் கூறி வருகின்றனர். ஜெயலலிதாவின் பெயர் தவறுதலாகப் பயன்படுத்தப் பட்டிருப்பது, அரசின் இலவச பொருள்களை தீயிட்டுக் கொளுத்துவது என சர்கார் படம் இப்போது மாநில அரசின் அமைச்சர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் கோமளவல்லி என்ற பெயர் சர்கார் திரைப்படத்தில் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டிருப்பது பற்றி செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர்.

ஜெயலலிதா இல்லாததால், பலருக்கும் குளிர்விட்டுப் போய்விட்டது! சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதுபோல, சர்கார் திரைப்படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார் ஜெயக்குமார்!

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img