December 5, 2025, 6:58 PM
26.7 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 78): மதன்லால் பஹ்வாவின் காதல்!

madanlal pahwa1 - 2025

மதன்லால் பஹ்வாவின் காதலியின் பெயர் ஷெவந்தா. உண்மையிலேயே,ஏதும் தீங்கிழைக்கும் முன்னரே,மதன்லால் பஹ்வாவை கைது செய்ய விட வேண்டும் என போலீஸ் எண்ணியிருந்தால்,அவர்களால் செய்திருக்க முடியும்.

பஹ்வா மற்றும் ஷெவந்தா,இருவருக்குமிடையேயான கடிதப் போக்குவரத்தை கண்காணித்திருந்தாலே,பஹ்வாவின் இருப்பிடம் தெரிய வந்திருக்கும்.

சந்தேகிக்கப்படும் குற்றவாளி ஒருவருடனான கடிதங்களை இடைமறித்து என்ன எழுதியிருக்கிறது என்று தெரிந்துக் கொள்வது காலாக்காலமாக இந்தியாவில் காவல்துறை செய்து வந்த ஒன்றே.

ஷெவந்தாவிற்கு பஹ்வா மீதிருந்த காதல் பற்றி போலீஸுக்குத் தெரியவில்லை என்பது வியப்பே. ஏனென்றால்,பஹ்வாவுடைய செயல்பாடுகளை கண்காணிக்கும்படியாக அவர்களுக்கு உத்தரவிருந்தது.

madanlal pahwa2 - 2025
மதன்லால் பஹ்வா

ஷெவந்தாதான் பாவம். அவளுடைய அடையாளத்தை போலீசார் கடைசி வரை வெளிப்படுத்தவில்லை.மதன்லால் பஹ்வா எழுதிய இரு கடிதங்களுக்கு அவளின் பதில்களோடு அது முடிந்துபோனது.

அவள் அவன் மீது வெறித்தனமான காதலில் இருந்தாள் என்பது அந்த கடிதங்களிலிருந்து தெரிந்தது.ஆனால் அவன் அவளை ஆசைக்காட்டி கைவிடப் போகிறான் என்பதை அவள் உணரவே இல்லை.

அவள் படிப்பறிவு இல்லாதவள்தான். ஆனாலும் அவன் மீதான காதலை வெளிப்படுத்த அவள் ,சில ஹிந்தி ஈரடி கவிதைகளை மேற்கோள் காட்டி கடிதங்களில் எழுதி இருந்தாள்.

அந்த கவிதைகள்… காதலும் காமமும் ஒருங்கே தொனிக்கும் வார்த்தைகளைக் கொண்டவை. முதல் கடிதம் 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ந் தேதி எழுதப்பட்டது.

மதன்லால் பஹ்வாவின் கடிதத்திற்கு எழுதிய பதில் கடிதம். அதில் அவள் ‘’ எனக்கு எல்லாம் புரிகிறது ‘’ என்று குறிப்பிடுகிறாள். ‘’ இரண்டு நாட்கள் மட்டுமே உங்கள் காதலைக் காட்டி விட்டு என்னை விட்டு செல்கிறீர்களே …என் மனம் உங்களுக்காக ஏங்குகிறது ..இந்த கடிதத்தை தந்திப் போல பாவித்து உடனே என்னிடம் திரும்பி வந்து விடுங்கள்..’’

அவள் வார்த்தைகள் கூறுவன கொஞ்சம் மட்டுமே… இரண்டாவது கடிதம் அடுத்த நாளே எழுதப்பட்டது. அவன் மீதான வெறித்தனமான காதல் அவளை வாட்டுகிறது என்றும் உடனே தன்னிடம் திரும்பி வந்து விடும்படியும் எழுதுகிறாள்.

திரும்பி வரும் போது அவளுக்குக்காக ஒரு பட்டுச்சேலையும்,காலணிகளும் வாங்கி வரும்படியும் எழுதினாள். ‘’ விரைவில் வாருங்கள்,என் மனம் துயரப்படுகிறது ‘’ என முடித்து விட்டு ..

‘’ என் மலர்த் தோட்டம் நீயின்றி வெறிச்சோடி இருக்கிறது..
என் மனதை வேட்டையாடிக் கொண்டிருப்பவனே சீக்கிரம் வா
இரவுகள் கழிகின்றன,பகல்கள் போய் கொண்டிருக்கின்றன
என் மனமோ மூழ்கிக்கொண்டிருக்கிறது…
இளவேனிற் காலம் வந்து விட்டது…மலர்படுக்கை கொள்ளைக்கொள்ள காத்திருக்கிறது…
வா..என்னை வேட்டையாட வா..
என்னுடைய வாழ்க்கை துணைவனே,உன்னுடைய காதல் என்னை வாட்டுகிறது
அதன் எண்ணத்தை வாய் விட்டுக் கூற என் பெண்மை தடுக்கிறது..
நீயின்றி நான் எப்படி வாழ்வேன்…
வா..என் வேட்டைக்காரனே ..! ‘’

எனும் அர்த்தம் தொனிக்கும் ஹிந்தி மொழி கவிதையை எழுதியிருந்தாள். இந்த முறை மதன்லாலை அவளுடைய ‘ டார்லிங் ‘ என விளித்து முடிக்கிறாள். அதை தொடர்ந்து வேறு ஒரு ஈரடி கவிதையும் எழுதப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தாரால் நியமிக்கப்பட்டிருந்த மொழிப்பெயர்ப்பாளரால் ‘ வார்த்தைகள் புரியவில்லை ‘ என கூறப்பட்டது. முதல் கடிதம் பம்பாயிற்கு வந்து சேருமுன்னரே மதன்லால் பஹ்வா டெல்லிக்கு கிளம்பி விட்டிருந்தார்.

அரசுத்தரப்பு அவற்றை சாட்சியங்களாக கோர்ட்டில் தாக்கல் செய்தபோதுதான் இரு கடிதங்களையும் பார்த்தார் மதன்லால் பஹ்வா. மதன்லால் மற்றும் மற்றவர்கள் மீதான குற்றங்களை நிரூபிக்க அவை ஆவணங்களாக பயன்படுத்தப்பட்டன.

ஷெவந்தாவை பொறுத்தவரை,அந்த ‘காதல் நோய் ‘ கடிதத்தை எழுதிய நான்கு நாட்கள் கழித்துதான் பஹ்வா என்ன காரியத்தில் ஈடுபட்டிருந்தார் என தெரிய வந்தது. ‘ பிர்லா ஹவுஸ் ‘ ஸில்,ஜனவரி 20ந்தேதி காந்தி, பிரார்த்தனைக் கூட்டம் நடத்தி வந்த நேரத்தில்அந்த வளாகத்திற்குள் வெடிகுண்டு வீசியதற்காக மதன்லால் பஹ்வா கையும் களவுமாகப் பிடிபட்டார்.

(தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories