காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 77): மதன்லால் பஹ்வாவுடன் கர்கரே

karkare - 2026

சாதாரண சூழ்நிலையில், கார்கரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.மேல் விசாரணை நடந்து முடியும் வரை சிறையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,போலீஸ் ஏன் அவரை உடனடியாக கைது செய்யாது மெத்தனம் காட்டியது என்றே புரியாதிருந்தது.

வெடிகுண்டுகள்,ரிவால்வர்,வெடிமருந்துகள் போன்றவற்றை லைசென்ஸ் இல்லாது வைத்திருந்தது மிகவும் சீரியஸான குற்றம். ஏற்கெனவே போலீஸ் அறிக்கைகளில் மதன்லால் பஹ்வாவின் பெயர் கார்கரேயுடன் சேர்ந்தே இருந்தது.

‘’ எப்பொழுதும் பிரச்சனைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும் நபர் ‘’ எனும் முத்திரை இருந்தது. கடைசியாக 1948 ஆம் வருடம் ஜனவரி மாதம் 5ந் தேதி அஹமத்நகரில் ஒரு பிரச்சனையில் சிக்கி இருந்தார்.

மத நல்லிக்கணம் தொடர்பாக ஒரு சொற்பொழிவாற்ற முக்கிய காங்கிரஸ் தலைவர் ராவ்சாஹிப் பட்வர்தன் அஹமத்நகர் வந்திருந்தார். அவரை பேசவிடாமல் தடுக்கும் நோக்கில் மதன்லால் பஹ்வா கோஷங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தார்.

ஒரு கட்டத்தில் மேடை மீது ஏறி,பட்வர்தனிடமிருந்து மைக்கை பிடுங்கி அவரை பேச விடாமல் தடுத்தார். அங்கிருந்த போலீசார் அவரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று லாக்கப்பில் அடைத்தனர்.

ALSO READ:  மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

விடியற்காலை வரை சிறையிலேயே வைத்திருந்த பின் விடுவிக்கப்பட்டார். ஜனவரி மாதம் 9ந் தேதியன்று அஹமத்நகர் காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ரஸாக், மதன்லால் பஹ்வாவும்,கார்கரேயும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட வேண்டும் என்று மேலதிகாரிகளுக்கு பரிந்துரைச் செய்தார். ஆனால் அந்த பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு,உரிய இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட மூன்று நாட்கள் ஆகி விட்டது.

அதற்குள் கார்கரே மற்றும் மதன்லால் இருவரும் தப்பியோடி விட்டனர். என்றைய தினம் இன்ஸ்பெக்டர் ரஸாக் இவர்கள் இருவரின் கைதுக்கான பரிந்துரையை அனுப்பினாரோ,அதே நாளில் இவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

காவல்துறையில்,ரகசியக் கோப்புக்களை நெருங்கக் கூடிய வாய்ப்பிருக்கும் அவர்களுடைய நண்பர் யாரோ ஒருவர்தான் இவர்களுக்கு,கைது செய்யப்பட இருக்கும் தகவலை தெரிவித்திருக்க வேண்டும். அஹமத்நகர் மாவட்டத்தின் போலீஸ் கண்காணிப்பாளரின் செயலாளராகச் செயல்பட்டு வந்த இன்ஸ்பெக்டர் J.N.ஜோஷி,பின்னாளில் சில விஷயங்களை தெரிவித்தார்.

‘’ ஜனவரி மாதம் 10 ந் தேதி வாக்கில் ( சரியான தேதி ஜனவரி 9 ஆக இருந்திருக்க வேண்டும் ) நான் மதன்லால் பஹ்வாவை அஹமத்நகர் ரயில் நிலையத்தில் எதேச்சையாகச் சந்தித்தேன். அவனிடம் பேசவும் செய்தேன்.அவன் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும்,அதற்காக டெல்லிக்கு செல்வதாகவும் கூறினான் ‘’.

ALSO READ:  1 முதல் 9ம் வகுப்பு வரை... முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

அடுத்த ஓரிரு நாட்களுக்குள்ளாகவே, இன்ஸ்பெக்டர் ஜோஷிக்கு மதன்லால் பஹ்வா,கார்கரே ஆகிய இருவரையும் கைது செய்ய வாரண்ட் தயாராகிக் கொண்டிருக்கும் விவரம் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.  ஆனால் மதன்லால் பஹ்வா டெல்லிக்கு போய் விட்ட விவரத்தை தன் உயர் அதிகாரியிடம் ஏனோ தெரிவிக்கவில்லை.

இன்னும் கூற போனால் ஜனவரி மாதம் 21ந் தேதி வரை இது பற்றி வாயை திறக்கவே இல்லை. அதற்குள்ளாகவே காந்தியை கொல்லும் முயற்சியாக,GUN COTTON ( இது ஒரு நைட்ரோ-செலுலஸ் வகையிலானது ) வெடிகுண்டு ஒன்றை ,டெல்லியில் காந்தியின் பிரார்த்தனை கூட்டத்தின் போது மதன்லால் பஹ்வா வெடிக்கச் செய்தார். ஆனால் அங்கிருந்து தப்புவதற்குள் போலீஸாரால் கையும் களவுமாகப் பிடிப்பட்டு விட்டார்.

அவருடைய கால்சட்டைப் பைக்குள் வெடிப்பதற்கு தயாரான நிலையில் இன்னொரு வெடிகுண்டும் இருந்தது. மதன்லால் பஹ்வாவை பொறுத்த வரை தன்னுடைய நடமாட்டங்களைப் பற்றிய விவரங்களை அவர் ரகசியமாகவே வைத்துக் கொள்ளவே இல்லை.

சொல்லப் போனால், இன்ஸ்பெக்டர் ஜோஷியிடம் தான் திருமணம் செய்துக் கொள்ளும் பொருட்டு டெல்லி போவதாகக் கூறியது உண்மைதான். அவர் தேவையில்லாமல் தெரிவித்த தகவல்,டெல்லிக்கு போகும்முன் பம்பாய் போகப்போவதாக கூறியதுதான்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

பம்பாய்க்கு சென்ற இரண்டு நாட்களுக்குள்ளாக,அஹமத்நகரிலிருந்த தன் காதலிக்கு ஒரு கடிதம் எழுதினார். பம்பாயில் ஒரு விலாசத்தைக் கொடுத்து,தன்னுடன் தொடர்பு கொள்ள அந்த விலாசத்திற்கு கடிதம் எழுதும்படி கூறி இருந்தார்.

அந்த விலாசம் : c/o பேராசிரியர் ஜெயின்,மங்கல் நிவாஸ்,சிவாஜி பார்க் ,தாதர்,பம்பாய்.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories