மாயக் கண்ணாடி.. மாமுனிகள் கண்ணாடி! பிம்பமும் பிரதிபிம்பமும்!

mamunikal - 2026வேதாந்த தேசிகன் அருளிச்செய்த “பாதுகா ஸஹஸ்ரம்” எம்பெருமானுடைய பாதுகைகளின் பெருமைகளைப் பலபடிகளாக வருணிக்கின்றது !

32 பகுதிகளாக ( பத்ததிகள் ) 1008 ச்லோகங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் உயர்ந்த நூலிது !

அதில் ‘ பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி ‘ என்றொரு பகுதி உண்டு !

அவன் பாதுகைகள் மணிமயமானவை.. தூமணிகளானபடியால் அவைகளில் நிழல் விழுகையும் , எதிரிலுள்ளவற்றை ( அம் மணிகள் ) பளிச்சென்று காட்டிடுகையும் இயல்பானதே !

பாதுகைகளின் பளிச்சென்ற மணிகள் ; கண்ணாடி போலே பொருள்களைக் காட்டிடுமாம்!

பிராட்டிமார்கள் ஒப்பனைகளைக் ( அலங்காரம் ) கூட பாதுகை மணிகளின் துணை கொண்டே செய்து கொள்கிறார்களாம்..

என்னே மணி பாதுகைகளின் பெருமை !

இங்கே நம் ஸ்ரீமதுபயவே கேசவபாஷ்யம் ஸ்வாமி பகிர்ந்துள்ள படத்தைச் சேவித்ததும் ; இந்த பிம்பப்ரதிபிம்ப பத்ததியில் ஒரு ச்லோகம் நினைவிற்கு வர , அதடியாக இவ்வுரை புனைகின்றேன் இப்போது !

அன்பர்காள் ! படித்தின்புறுக !!

அரவரசாம் நம் அழகிய மணவாள முனி , கண்ணாடியில் தன் திருமேனியைக் கண்டு மகிழ்ந்திடும் தருணம் இது ( இப்படம் ) !

mamuni darsan - 2026

தேஹாத்மாபிமாநிகள் ( ஆத்மாவையே அறியாது; தேஹமே ஆத்மா என்றே நினைத்திருக்கும் அறிவிலிகள் ) தங்கள் உடல் , முகம் முதலானவற்றில் பெருமை கொள்கையும் , தங்கள் அழகைத் தாங்களே மெச்சிடுகையும் வியப்பிற்குரியதன்று !

ஆனால்.. ஜ்ஞாநிகள் அங்ஙனம் தங்கள் தேஹ , முக ஸௌந்தர்யங்களைக் கண்டு சிலாகித்து உவந்திடுவர்களோ ?!

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

பின்பு ஏன் ஜ்ஞான பக்தி வைராக்கியம் முதலான குணங்களாகிற நல்முத்துகள் நிரம்பியிருக்கும் கடல் போன்றவரான ( தீபக்த்யாதி குணார்ணவரான ) நம் மாமுனிகள் தன் திருமுகமண்டலத்தைத் தானே நோக்கிடுகின்றார் ?! நாட்டாரோடு இயல்வொழிந்தவராயிற்றே இவர் ! ( ஸம்ஸாரிகள் வழி நடவாதவர் ( அவர்கள் இயல்பைக் கைக் கொள்ளாதவர் ) )

பின்பு ஏன் கண்ணாடி பார்க்கின்றார் ?!

இக்கேள்விக்கு விடை சொல்லுமாப் போலே இருக்கும் ஒரு ச்லோகத்தைத் தான் நாம் தற்பொழுது காணவிருக்கிறோம் !

பெருமானுக்குப் பாதுகைகள் அணிந்து கொள்வதில் பெருவிருப்பமாம் !

ஓரோரிடத்திலும் தன் இஷ்டப்படி விளையாடுவதற்கு அவன் துணை கொள்ளும் பாக்கியம் மணிபாதுகைகளுக்கே கிட்டியதெனலாம் !

குற்றமற்ற இரத்தினங்களாலும் அழகாலும் அப்பாதுகைகள் எந்நாளும் ஒளிவிடுகின்றன!

பாதுகைகளைச் சாற்றிக் கொண்டு ( அணிந்து கொண்டு ) ஒய்யாரமாக அவன் நடந்திடும்பொழுது , பிராட்டியின் நினைவினால் உந்தப்பட்டவனாய்; அவளோடு கூடி மகிழ்ந்திட ஆவல் கொண்டவனாய் அவளை நாடி வந்திடுவனாம் இறைவன் !

அவளோ ‘ ஃபணிபதி: சய்யாசனம் ‘ என்கிற படியே புல்குமணையான திருவனந்தாழ்வான் மேல் வீற்றிருப்பள் !

தன் பாதுகைகளைக் கழற்றிக் கீழே வைத்து விட்டு , ஆதிசேஷனாகிற படுக்கையில் பிராட்டியுடன் விளையாடிட வேண்டி ஏறிடுவன் எம்பெருமான் !

ஆயினும் பைந்நாகணையில் அவன் ஏறின பிற்பாடும் , அவனுடைய பிரதிபிம்பமானது ; அப்பாதுகைகளில் காணப்படுகின்றதாம் !

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

அதாவது பாதுகைகளைக் கழற்றிக் கீழே வைத்துவிட்டு , படுக்கையில் வீற்றிருக்கும் வேளையிலும் அவன் திருமேனியின் பிரதிபலிப்பு பாதுகைகளில் தெரிகின்றது என்றபடி!

தேசிகன் ஸாதிக்கின்றார் ! ப்ரதிபலிப்பு என்கிற வியாஜத்தாலே ( கண்ணாடி போலே பாதுகைகள் அவனைக் காட்டிடுகையாலே ) .. பாதுகைகளைக் கழற்றி வைத்திருந்தும் அதனை விடாதவனாகின்றான் பெருமான் என்றுரைக்கின்றார் !

எல்லாம் சரி ! இதற்கும் மாமுனிகள் கண்ணாடி பார்ப்பதற்கும் யாது தொடர்பு ?! அது தானே உங்கள் கேள்வி ??

மேலே வாசித்திடுக ! ஸ்வேச்சா கேளி ப்ரிய ஸஹசரீம் ஸ்வச்ச ரத்நாபிராமாம் ..ஸ்தாநே ஸ்தாநே நிஹிதசரணே நிர்விசந் ரங்கநாத: |

ஸஞ்சாராந்தே ஸஹ கமலயா ‘சேஷ சய்யாதிரூட: ‘ .. த்யக்த்வாபி த்வாம் த்யஜதி ந புந: ஸ்வப்ரதிச்சந்த லக்ஷ்யாத்|| .. என்பதே அந்த ச்லோகம்..

பாதுகைகளைக் கழற்றி வைத்து விட்டு ; ஆதிசேஷனாகிற படுக்கையில் ஏறினபின்பும் ; அவனுருவம் மணிபாதுகைகளில் பிரதிபலிக்கக் கண்டமை மேலே சொல்லப்பட்டது..

அச்சமயம் அக்காட்சி கண்டு , ஆதிசேஷன் ஆச்சர்யப்பட்டிருக்கக் கூடும்..

அவனைச் சுமந்த பாதுகைகள் அவன் நிழலைக் காட்டிடுமாப் போலே ; அவனைச் சுமக்கின்ற நம்மிலும் அவன் பிரதிபிம்பமாய்த் தெரிந்திடுவானோ என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் எழப்பெற்றவனாய் ,

தன் பணாமணிகளில் அவன் (இறைவன்) உருவம் தெரிந்திடுமாயினும் ;

அது தன்னைத் தானும் கண்டிட எண்ணினவனாய் , தானே ( ஆதிசேஷனே ) மாமுனிகளான படியால் , அர்ச்சையிலும் கார்மேனி அருளாளர் கச்சியில் அந்தர்யாமியான அவன் கண்ணாடியில் ப்ரதிபிம்பமாக காக்ஷி தந்திடுவன் ( ஸுந்தர ஜாமாத்ரு முனி மாநஸ வாஸி யன்றோ பகவான் ( மணவாள மாமுனிகள் ஹ்ருதயத்தில் / மனதில் வஸிப்பவன் பெருமான் ) ) என்று விச்வஸித்து ,

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

தன் திருமுக மண்டலத்தையும் திருமேனியையும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு , அவ்வழியாலே மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் உடையனான பேரருளாளனின் தர்சநீயமான ( காணத் தக்கதான ) வடிவைக் கண்டு ஹ்ருஷ்டராகிறார் ( மகிழ்கிறார் ) என்று நாமும் சிந்திந்தின்புறும் படியாகவன்றோ இப்படம் விளங்குகின்றது !!

அவனைக் கண்ட பூரிப்பு அவர் தம் திருக்கண்களிலும் திருப்பவளத்திலும் கண்டறியலாகின்றதே !

நம் ப்ரார்த்தனை என்பது என்ன தெரியுமா ? நாம் கண்ணாடி காணுங்கால் நம் மாமுனிகளே தெரிய வேண்டும் என்பதொன்றேயாம் !

– கட்டுரை: அக்காரக்கனி ஸ்ரீநிதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories