December 5, 2025, 9:33 PM
26.6 C
Chennai

மாயக் கண்ணாடி.. மாமுனிகள் கண்ணாடி! பிம்பமும் பிரதிபிம்பமும்!

mamunikal - 2025வேதாந்த தேசிகன் அருளிச்செய்த “பாதுகா ஸஹஸ்ரம்” எம்பெருமானுடைய பாதுகைகளின் பெருமைகளைப் பலபடிகளாக வருணிக்கின்றது !

32 பகுதிகளாக ( பத்ததிகள் ) 1008 ச்லோகங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் உயர்ந்த நூலிது !

அதில் ‘ பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி ‘ என்றொரு பகுதி உண்டு !

அவன் பாதுகைகள் மணிமயமானவை.. தூமணிகளானபடியால் அவைகளில் நிழல் விழுகையும் , எதிரிலுள்ளவற்றை ( அம் மணிகள் ) பளிச்சென்று காட்டிடுகையும் இயல்பானதே !

பாதுகைகளின் பளிச்சென்ற மணிகள் ; கண்ணாடி போலே பொருள்களைக் காட்டிடுமாம்!

பிராட்டிமார்கள் ஒப்பனைகளைக் ( அலங்காரம் ) கூட பாதுகை மணிகளின் துணை கொண்டே செய்து கொள்கிறார்களாம்..

என்னே மணி பாதுகைகளின் பெருமை !

இங்கே நம் ஸ்ரீமதுபயவே கேசவபாஷ்யம் ஸ்வாமி பகிர்ந்துள்ள படத்தைச் சேவித்ததும் ; இந்த பிம்பப்ரதிபிம்ப பத்ததியில் ஒரு ச்லோகம் நினைவிற்கு வர , அதடியாக இவ்வுரை புனைகின்றேன் இப்போது !

அன்பர்காள் ! படித்தின்புறுக !!

அரவரசாம் நம் அழகிய மணவாள முனி , கண்ணாடியில் தன் திருமேனியைக் கண்டு மகிழ்ந்திடும் தருணம் இது ( இப்படம் ) !

mamuni darsan - 2025

தேஹாத்மாபிமாநிகள் ( ஆத்மாவையே அறியாது; தேஹமே ஆத்மா என்றே நினைத்திருக்கும் அறிவிலிகள் ) தங்கள் உடல் , முகம் முதலானவற்றில் பெருமை கொள்கையும் , தங்கள் அழகைத் தாங்களே மெச்சிடுகையும் வியப்பிற்குரியதன்று !

ஆனால்.. ஜ்ஞாநிகள் அங்ஙனம் தங்கள் தேஹ , முக ஸௌந்தர்யங்களைக் கண்டு சிலாகித்து உவந்திடுவர்களோ ?!

பின்பு ஏன் ஜ்ஞான பக்தி வைராக்கியம் முதலான குணங்களாகிற நல்முத்துகள் நிரம்பியிருக்கும் கடல் போன்றவரான ( தீபக்த்யாதி குணார்ணவரான ) நம் மாமுனிகள் தன் திருமுகமண்டலத்தைத் தானே நோக்கிடுகின்றார் ?! நாட்டாரோடு இயல்வொழிந்தவராயிற்றே இவர் ! ( ஸம்ஸாரிகள் வழி நடவாதவர் ( அவர்கள் இயல்பைக் கைக் கொள்ளாதவர் ) )

பின்பு ஏன் கண்ணாடி பார்க்கின்றார் ?!

இக்கேள்விக்கு விடை சொல்லுமாப் போலே இருக்கும் ஒரு ச்லோகத்தைத் தான் நாம் தற்பொழுது காணவிருக்கிறோம் !

பெருமானுக்குப் பாதுகைகள் அணிந்து கொள்வதில் பெருவிருப்பமாம் !

ஓரோரிடத்திலும் தன் இஷ்டப்படி விளையாடுவதற்கு அவன் துணை கொள்ளும் பாக்கியம் மணிபாதுகைகளுக்கே கிட்டியதெனலாம் !

குற்றமற்ற இரத்தினங்களாலும் அழகாலும் அப்பாதுகைகள் எந்நாளும் ஒளிவிடுகின்றன!

பாதுகைகளைச் சாற்றிக் கொண்டு ( அணிந்து கொண்டு ) ஒய்யாரமாக அவன் நடந்திடும்பொழுது , பிராட்டியின் நினைவினால் உந்தப்பட்டவனாய்; அவளோடு கூடி மகிழ்ந்திட ஆவல் கொண்டவனாய் அவளை நாடி வந்திடுவனாம் இறைவன் !

அவளோ ‘ ஃபணிபதி: சய்யாசனம் ‘ என்கிற படியே புல்குமணையான திருவனந்தாழ்வான் மேல் வீற்றிருப்பள் !

தன் பாதுகைகளைக் கழற்றிக் கீழே வைத்து விட்டு , ஆதிசேஷனாகிற படுக்கையில் பிராட்டியுடன் விளையாடிட வேண்டி ஏறிடுவன் எம்பெருமான் !

ஆயினும் பைந்நாகணையில் அவன் ஏறின பிற்பாடும் , அவனுடைய பிரதிபிம்பமானது ; அப்பாதுகைகளில் காணப்படுகின்றதாம் !

அதாவது பாதுகைகளைக் கழற்றிக் கீழே வைத்துவிட்டு , படுக்கையில் வீற்றிருக்கும் வேளையிலும் அவன் திருமேனியின் பிரதிபலிப்பு பாதுகைகளில் தெரிகின்றது என்றபடி!

தேசிகன் ஸாதிக்கின்றார் ! ப்ரதிபலிப்பு என்கிற வியாஜத்தாலே ( கண்ணாடி போலே பாதுகைகள் அவனைக் காட்டிடுகையாலே ) .. பாதுகைகளைக் கழற்றி வைத்திருந்தும் அதனை விடாதவனாகின்றான் பெருமான் என்றுரைக்கின்றார் !

எல்லாம் சரி ! இதற்கும் மாமுனிகள் கண்ணாடி பார்ப்பதற்கும் யாது தொடர்பு ?! அது தானே உங்கள் கேள்வி ??

மேலே வாசித்திடுக ! ஸ்வேச்சா கேளி ப்ரிய ஸஹசரீம் ஸ்வச்ச ரத்நாபிராமாம் ..ஸ்தாநே ஸ்தாநே நிஹிதசரணே நிர்விசந் ரங்கநாத: |

ஸஞ்சாராந்தே ஸஹ கமலயா ‘சேஷ சய்யாதிரூட: ‘ .. த்யக்த்வாபி த்வாம் த்யஜதி ந புந: ஸ்வப்ரதிச்சந்த லக்ஷ்யாத்|| .. என்பதே அந்த ச்லோகம்..

பாதுகைகளைக் கழற்றி வைத்து விட்டு ; ஆதிசேஷனாகிற படுக்கையில் ஏறினபின்பும் ; அவனுருவம் மணிபாதுகைகளில் பிரதிபலிக்கக் கண்டமை மேலே சொல்லப்பட்டது..

அச்சமயம் அக்காட்சி கண்டு , ஆதிசேஷன் ஆச்சர்யப்பட்டிருக்கக் கூடும்..

அவனைச் சுமந்த பாதுகைகள் அவன் நிழலைக் காட்டிடுமாப் போலே ; அவனைச் சுமக்கின்ற நம்மிலும் அவன் பிரதிபிம்பமாய்த் தெரிந்திடுவானோ என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் எழப்பெற்றவனாய் ,

தன் பணாமணிகளில் அவன் (இறைவன்) உருவம் தெரிந்திடுமாயினும் ;

அது தன்னைத் தானும் கண்டிட எண்ணினவனாய் , தானே ( ஆதிசேஷனே ) மாமுனிகளான படியால் , அர்ச்சையிலும் கார்மேனி அருளாளர் கச்சியில் அந்தர்யாமியான அவன் கண்ணாடியில் ப்ரதிபிம்பமாக காக்ஷி தந்திடுவன் ( ஸுந்தர ஜாமாத்ரு முனி மாநஸ வாஸி யன்றோ பகவான் ( மணவாள மாமுனிகள் ஹ்ருதயத்தில் / மனதில் வஸிப்பவன் பெருமான் ) ) என்று விச்வஸித்து ,

தன் திருமுக மண்டலத்தையும் திருமேனியையும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு , அவ்வழியாலே மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் உடையனான பேரருளாளனின் தர்சநீயமான ( காணத் தக்கதான ) வடிவைக் கண்டு ஹ்ருஷ்டராகிறார் ( மகிழ்கிறார் ) என்று நாமும் சிந்திந்தின்புறும் படியாகவன்றோ இப்படம் விளங்குகின்றது !!

அவனைக் கண்ட பூரிப்பு அவர் தம் திருக்கண்களிலும் திருப்பவளத்திலும் கண்டறியலாகின்றதே !

நம் ப்ரார்த்தனை என்பது என்ன தெரியுமா ? நாம் கண்ணாடி காணுங்கால் நம் மாமுனிகளே தெரிய வேண்டும் என்பதொன்றேயாம் !

– கட்டுரை: அக்காரக்கனி ஸ்ரீநிதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories