மாயக் கண்ணாடி.. மாமுனிகள் கண்ணாடி! பிம்பமும் பிரதிபிம்பமும்!

mamunikal - 2026வேதாந்த தேசிகன் அருளிச்செய்த “பாதுகா ஸஹஸ்ரம்” எம்பெருமானுடைய பாதுகைகளின் பெருமைகளைப் பலபடிகளாக வருணிக்கின்றது !

32 பகுதிகளாக ( பத்ததிகள் ) 1008 ச்லோகங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் உயர்ந்த நூலிது !

அதில் ‘ பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி ‘ என்றொரு பகுதி உண்டு !

அவன் பாதுகைகள் மணிமயமானவை.. தூமணிகளானபடியால் அவைகளில் நிழல் விழுகையும் , எதிரிலுள்ளவற்றை ( அம் மணிகள் ) பளிச்சென்று காட்டிடுகையும் இயல்பானதே !

பாதுகைகளின் பளிச்சென்ற மணிகள் ; கண்ணாடி போலே பொருள்களைக் காட்டிடுமாம்!

பிராட்டிமார்கள் ஒப்பனைகளைக் ( அலங்காரம் ) கூட பாதுகை மணிகளின் துணை கொண்டே செய்து கொள்கிறார்களாம்..

என்னே மணி பாதுகைகளின் பெருமை !

இங்கே நம் ஸ்ரீமதுபயவே கேசவபாஷ்யம் ஸ்வாமி பகிர்ந்துள்ள படத்தைச் சேவித்ததும் ; இந்த பிம்பப்ரதிபிம்ப பத்ததியில் ஒரு ச்லோகம் நினைவிற்கு வர , அதடியாக இவ்வுரை புனைகின்றேன் இப்போது !

அன்பர்காள் ! படித்தின்புறுக !!

அரவரசாம் நம் அழகிய மணவாள முனி , கண்ணாடியில் தன் திருமேனியைக் கண்டு மகிழ்ந்திடும் தருணம் இது ( இப்படம் ) !

mamuni darsan - 2026

தேஹாத்மாபிமாநிகள் ( ஆத்மாவையே அறியாது; தேஹமே ஆத்மா என்றே நினைத்திருக்கும் அறிவிலிகள் ) தங்கள் உடல் , முகம் முதலானவற்றில் பெருமை கொள்கையும் , தங்கள் அழகைத் தாங்களே மெச்சிடுகையும் வியப்பிற்குரியதன்று !

ஆனால்.. ஜ்ஞாநிகள் அங்ஙனம் தங்கள் தேஹ , முக ஸௌந்தர்யங்களைக் கண்டு சிலாகித்து உவந்திடுவர்களோ ?!

பின்பு ஏன் ஜ்ஞான பக்தி வைராக்கியம் முதலான குணங்களாகிற நல்முத்துகள் நிரம்பியிருக்கும் கடல் போன்றவரான ( தீபக்த்யாதி குணார்ணவரான ) நம் மாமுனிகள் தன் திருமுகமண்டலத்தைத் தானே நோக்கிடுகின்றார் ?! நாட்டாரோடு இயல்வொழிந்தவராயிற்றே இவர் ! ( ஸம்ஸாரிகள் வழி நடவாதவர் ( அவர்கள் இயல்பைக் கைக் கொள்ளாதவர் ) )

பின்பு ஏன் கண்ணாடி பார்க்கின்றார் ?!

இக்கேள்விக்கு விடை சொல்லுமாப் போலே இருக்கும் ஒரு ச்லோகத்தைத் தான் நாம் தற்பொழுது காணவிருக்கிறோம் !

பெருமானுக்குப் பாதுகைகள் அணிந்து கொள்வதில் பெருவிருப்பமாம் !

ஓரோரிடத்திலும் தன் இஷ்டப்படி விளையாடுவதற்கு அவன் துணை கொள்ளும் பாக்கியம் மணிபாதுகைகளுக்கே கிட்டியதெனலாம் !

குற்றமற்ற இரத்தினங்களாலும் அழகாலும் அப்பாதுகைகள் எந்நாளும் ஒளிவிடுகின்றன!

பாதுகைகளைச் சாற்றிக் கொண்டு ( அணிந்து கொண்டு ) ஒய்யாரமாக அவன் நடந்திடும்பொழுது , பிராட்டியின் நினைவினால் உந்தப்பட்டவனாய்; அவளோடு கூடி மகிழ்ந்திட ஆவல் கொண்டவனாய் அவளை நாடி வந்திடுவனாம் இறைவன் !

அவளோ ‘ ஃபணிபதி: சய்யாசனம் ‘ என்கிற படியே புல்குமணையான திருவனந்தாழ்வான் மேல் வீற்றிருப்பள் !

தன் பாதுகைகளைக் கழற்றிக் கீழே வைத்து விட்டு , ஆதிசேஷனாகிற படுக்கையில் பிராட்டியுடன் விளையாடிட வேண்டி ஏறிடுவன் எம்பெருமான் !

ஆயினும் பைந்நாகணையில் அவன் ஏறின பிற்பாடும் , அவனுடைய பிரதிபிம்பமானது ; அப்பாதுகைகளில் காணப்படுகின்றதாம் !

அதாவது பாதுகைகளைக் கழற்றிக் கீழே வைத்துவிட்டு , படுக்கையில் வீற்றிருக்கும் வேளையிலும் அவன் திருமேனியின் பிரதிபலிப்பு பாதுகைகளில் தெரிகின்றது என்றபடி!

தேசிகன் ஸாதிக்கின்றார் ! ப்ரதிபலிப்பு என்கிற வியாஜத்தாலே ( கண்ணாடி போலே பாதுகைகள் அவனைக் காட்டிடுகையாலே ) .. பாதுகைகளைக் கழற்றி வைத்திருந்தும் அதனை விடாதவனாகின்றான் பெருமான் என்றுரைக்கின்றார் !

எல்லாம் சரி ! இதற்கும் மாமுனிகள் கண்ணாடி பார்ப்பதற்கும் யாது தொடர்பு ?! அது தானே உங்கள் கேள்வி ??

மேலே வாசித்திடுக ! ஸ்வேச்சா கேளி ப்ரிய ஸஹசரீம் ஸ்வச்ச ரத்நாபிராமாம் ..ஸ்தாநே ஸ்தாநே நிஹிதசரணே நிர்விசந் ரங்கநாத: |

ஸஞ்சாராந்தே ஸஹ கமலயா ‘சேஷ சய்யாதிரூட: ‘ .. த்யக்த்வாபி த்வாம் த்யஜதி ந புந: ஸ்வப்ரதிச்சந்த லக்ஷ்யாத்|| .. என்பதே அந்த ச்லோகம்..

பாதுகைகளைக் கழற்றி வைத்து விட்டு ; ஆதிசேஷனாகிற படுக்கையில் ஏறினபின்பும் ; அவனுருவம் மணிபாதுகைகளில் பிரதிபலிக்கக் கண்டமை மேலே சொல்லப்பட்டது..

அச்சமயம் அக்காட்சி கண்டு , ஆதிசேஷன் ஆச்சர்யப்பட்டிருக்கக் கூடும்..

அவனைச் சுமந்த பாதுகைகள் அவன் நிழலைக் காட்டிடுமாப் போலே ; அவனைச் சுமக்கின்ற நம்மிலும் அவன் பிரதிபிம்பமாய்த் தெரிந்திடுவானோ என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் எழப்பெற்றவனாய் ,

தன் பணாமணிகளில் அவன் (இறைவன்) உருவம் தெரிந்திடுமாயினும் ;

அது தன்னைத் தானும் கண்டிட எண்ணினவனாய் , தானே ( ஆதிசேஷனே ) மாமுனிகளான படியால் , அர்ச்சையிலும் கார்மேனி அருளாளர் கச்சியில் அந்தர்யாமியான அவன் கண்ணாடியில் ப்ரதிபிம்பமாக காக்ஷி தந்திடுவன் ( ஸுந்தர ஜாமாத்ரு முனி மாநஸ வாஸி யன்றோ பகவான் ( மணவாள மாமுனிகள் ஹ்ருதயத்தில் / மனதில் வஸிப்பவன் பெருமான் ) ) என்று விச்வஸித்து ,

தன் திருமுக மண்டலத்தையும் திருமேனியையும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு , அவ்வழியாலே மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் உடையனான பேரருளாளனின் தர்சநீயமான ( காணத் தக்கதான ) வடிவைக் கண்டு ஹ்ருஷ்டராகிறார் ( மகிழ்கிறார் ) என்று நாமும் சிந்திந்தின்புறும் படியாகவன்றோ இப்படம் விளங்குகின்றது !!

அவனைக் கண்ட பூரிப்பு அவர் தம் திருக்கண்களிலும் திருப்பவளத்திலும் கண்டறியலாகின்றதே !

நம் ப்ரார்த்தனை என்பது என்ன தெரியுமா ? நாம் கண்ணாடி காணுங்கால் நம் மாமுனிகளே தெரிய வேண்டும் என்பதொன்றேயாம் !

– கட்டுரை: அக்காரக்கனி ஸ்ரீநிதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories