மாயக் கண்ணாடி.. மாமுனிகள் கண்ணாடி! பிம்பமும் பிரதிபிம்பமும்!

mamunikal - 2026வேதாந்த தேசிகன் அருளிச்செய்த “பாதுகா ஸஹஸ்ரம்” எம்பெருமானுடைய பாதுகைகளின் பெருமைகளைப் பலபடிகளாக வருணிக்கின்றது !

32 பகுதிகளாக ( பத்ததிகள் ) 1008 ச்லோகங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் உயர்ந்த நூலிது !

அதில் ‘ பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி ‘ என்றொரு பகுதி உண்டு !

அவன் பாதுகைகள் மணிமயமானவை.. தூமணிகளானபடியால் அவைகளில் நிழல் விழுகையும் , எதிரிலுள்ளவற்றை ( அம் மணிகள் ) பளிச்சென்று காட்டிடுகையும் இயல்பானதே !

பாதுகைகளின் பளிச்சென்ற மணிகள் ; கண்ணாடி போலே பொருள்களைக் காட்டிடுமாம்!

பிராட்டிமார்கள் ஒப்பனைகளைக் ( அலங்காரம் ) கூட பாதுகை மணிகளின் துணை கொண்டே செய்து கொள்கிறார்களாம்..

என்னே மணி பாதுகைகளின் பெருமை !

இங்கே நம் ஸ்ரீமதுபயவே கேசவபாஷ்யம் ஸ்வாமி பகிர்ந்துள்ள படத்தைச் சேவித்ததும் ; இந்த பிம்பப்ரதிபிம்ப பத்ததியில் ஒரு ச்லோகம் நினைவிற்கு வர , அதடியாக இவ்வுரை புனைகின்றேன் இப்போது !

அன்பர்காள் ! படித்தின்புறுக !!

அரவரசாம் நம் அழகிய மணவாள முனி , கண்ணாடியில் தன் திருமேனியைக் கண்டு மகிழ்ந்திடும் தருணம் இது ( இப்படம் ) !

mamuni darsan - 2026

தேஹாத்மாபிமாநிகள் ( ஆத்மாவையே அறியாது; தேஹமே ஆத்மா என்றே நினைத்திருக்கும் அறிவிலிகள் ) தங்கள் உடல் , முகம் முதலானவற்றில் பெருமை கொள்கையும் , தங்கள் அழகைத் தாங்களே மெச்சிடுகையும் வியப்பிற்குரியதன்று !

ஆனால்.. ஜ்ஞாநிகள் அங்ஙனம் தங்கள் தேஹ , முக ஸௌந்தர்யங்களைக் கண்டு சிலாகித்து உவந்திடுவர்களோ ?!

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

பின்பு ஏன் ஜ்ஞான பக்தி வைராக்கியம் முதலான குணங்களாகிற நல்முத்துகள் நிரம்பியிருக்கும் கடல் போன்றவரான ( தீபக்த்யாதி குணார்ணவரான ) நம் மாமுனிகள் தன் திருமுகமண்டலத்தைத் தானே நோக்கிடுகின்றார் ?! நாட்டாரோடு இயல்வொழிந்தவராயிற்றே இவர் ! ( ஸம்ஸாரிகள் வழி நடவாதவர் ( அவர்கள் இயல்பைக் கைக் கொள்ளாதவர் ) )

பின்பு ஏன் கண்ணாடி பார்க்கின்றார் ?!

இக்கேள்விக்கு விடை சொல்லுமாப் போலே இருக்கும் ஒரு ச்லோகத்தைத் தான் நாம் தற்பொழுது காணவிருக்கிறோம் !

பெருமானுக்குப் பாதுகைகள் அணிந்து கொள்வதில் பெருவிருப்பமாம் !

ஓரோரிடத்திலும் தன் இஷ்டப்படி விளையாடுவதற்கு அவன் துணை கொள்ளும் பாக்கியம் மணிபாதுகைகளுக்கே கிட்டியதெனலாம் !

குற்றமற்ற இரத்தினங்களாலும் அழகாலும் அப்பாதுகைகள் எந்நாளும் ஒளிவிடுகின்றன!

பாதுகைகளைச் சாற்றிக் கொண்டு ( அணிந்து கொண்டு ) ஒய்யாரமாக அவன் நடந்திடும்பொழுது , பிராட்டியின் நினைவினால் உந்தப்பட்டவனாய்; அவளோடு கூடி மகிழ்ந்திட ஆவல் கொண்டவனாய் அவளை நாடி வந்திடுவனாம் இறைவன் !

அவளோ ‘ ஃபணிபதி: சய்யாசனம் ‘ என்கிற படியே புல்குமணையான திருவனந்தாழ்வான் மேல் வீற்றிருப்பள் !

தன் பாதுகைகளைக் கழற்றிக் கீழே வைத்து விட்டு , ஆதிசேஷனாகிற படுக்கையில் பிராட்டியுடன் விளையாடிட வேண்டி ஏறிடுவன் எம்பெருமான் !

ஆயினும் பைந்நாகணையில் அவன் ஏறின பிற்பாடும் , அவனுடைய பிரதிபிம்பமானது ; அப்பாதுகைகளில் காணப்படுகின்றதாம் !

ALSO READ:  நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

அதாவது பாதுகைகளைக் கழற்றிக் கீழே வைத்துவிட்டு , படுக்கையில் வீற்றிருக்கும் வேளையிலும் அவன் திருமேனியின் பிரதிபலிப்பு பாதுகைகளில் தெரிகின்றது என்றபடி!

தேசிகன் ஸாதிக்கின்றார் ! ப்ரதிபலிப்பு என்கிற வியாஜத்தாலே ( கண்ணாடி போலே பாதுகைகள் அவனைக் காட்டிடுகையாலே ) .. பாதுகைகளைக் கழற்றி வைத்திருந்தும் அதனை விடாதவனாகின்றான் பெருமான் என்றுரைக்கின்றார் !

எல்லாம் சரி ! இதற்கும் மாமுனிகள் கண்ணாடி பார்ப்பதற்கும் யாது தொடர்பு ?! அது தானே உங்கள் கேள்வி ??

மேலே வாசித்திடுக ! ஸ்வேச்சா கேளி ப்ரிய ஸஹசரீம் ஸ்வச்ச ரத்நாபிராமாம் ..ஸ்தாநே ஸ்தாநே நிஹிதசரணே நிர்விசந் ரங்கநாத: |

ஸஞ்சாராந்தே ஸஹ கமலயா ‘சேஷ சய்யாதிரூட: ‘ .. த்யக்த்வாபி த்வாம் த்யஜதி ந புந: ஸ்வப்ரதிச்சந்த லக்ஷ்யாத்|| .. என்பதே அந்த ச்லோகம்..

பாதுகைகளைக் கழற்றி வைத்து விட்டு ; ஆதிசேஷனாகிற படுக்கையில் ஏறினபின்பும் ; அவனுருவம் மணிபாதுகைகளில் பிரதிபலிக்கக் கண்டமை மேலே சொல்லப்பட்டது..

அச்சமயம் அக்காட்சி கண்டு , ஆதிசேஷன் ஆச்சர்யப்பட்டிருக்கக் கூடும்..

அவனைச் சுமந்த பாதுகைகள் அவன் நிழலைக் காட்டிடுமாப் போலே ; அவனைச் சுமக்கின்ற நம்மிலும் அவன் பிரதிபிம்பமாய்த் தெரிந்திடுவானோ என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் எழப்பெற்றவனாய் ,

தன் பணாமணிகளில் அவன் (இறைவன்) உருவம் தெரிந்திடுமாயினும் ;

அது தன்னைத் தானும் கண்டிட எண்ணினவனாய் , தானே ( ஆதிசேஷனே ) மாமுனிகளான படியால் , அர்ச்சையிலும் கார்மேனி அருளாளர் கச்சியில் அந்தர்யாமியான அவன் கண்ணாடியில் ப்ரதிபிம்பமாக காக்ஷி தந்திடுவன் ( ஸுந்தர ஜாமாத்ரு முனி மாநஸ வாஸி யன்றோ பகவான் ( மணவாள மாமுனிகள் ஹ்ருதயத்தில் / மனதில் வஸிப்பவன் பெருமான் ) ) என்று விச்வஸித்து ,

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

தன் திருமுக மண்டலத்தையும் திருமேனியையும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு , அவ்வழியாலே மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் உடையனான பேரருளாளனின் தர்சநீயமான ( காணத் தக்கதான ) வடிவைக் கண்டு ஹ்ருஷ்டராகிறார் ( மகிழ்கிறார் ) என்று நாமும் சிந்திந்தின்புறும் படியாகவன்றோ இப்படம் விளங்குகின்றது !!

அவனைக் கண்ட பூரிப்பு அவர் தம் திருக்கண்களிலும் திருப்பவளத்திலும் கண்டறியலாகின்றதே !

நம் ப்ரார்த்தனை என்பது என்ன தெரியுமா ? நாம் கண்ணாடி காணுங்கால் நம் மாமுனிகளே தெரிய வேண்டும் என்பதொன்றேயாம் !

– கட்டுரை: அக்காரக்கனி ஸ்ரீநிதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories