February 22, 2026, 7:10 PM
29 C
Chennai

அரசியலில்… பொதுவாழ்வில்… இலக்கணமாய்த் திகழ்ந்தவர்!

george fernandes1 - 2026

முன்னாள் மத்திய ரயில்வே பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் மறைந்துவிட்டார்.

அரசியலில் பொதுவாழ்வில் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் . மறைந்த முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள். ஜார்ஜ்

1975 காலகட்டங்களில் அவசரநிலை பிரகடனம் செய்தபோது தமிழகத்தில் தலைவர் கலைஞர் ஆட்சி நடைபெற்றது. பல வட இந்தியத் தலைவர்களுக்கு மறைந்து வாழும் சரணாலயமாக தமிழகம் திகழ்ந்தது.

அச்சமயம்,திரு ஜார்ஜ் பெர்ணாண்டஸ் அவர்கள் மந்தை வெளியில் பட்டினப்பக்கம் பகுதியில் ஒரு வீட்டில் தங்கி யிருந்தார். சென்னையிலிருந்து ரயிலில் கிளம்பி கல்கத்தாவிற்கு சென்ற அவர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.

அது போல ராம்விலாஸ் பாஸ்வான்.,லல்லுபிரசாத் யாதவ், தற்போதைய பீகார் முதலமைச்சர் நித்திஸ் குமார் போன்றவர்கள் சென்னை வந்தபோது நான் சட்டக்கல்லூரியில் படித்த சமயத்தில் நான தங்கிய M.U.C(Madras University Club) விடுதியில் தங்கியதுண்டு. அவ்விடுதி அந்நாட்களில் அவர்களுடன் சேர்ந்து மதிய உணவு உண்டதுண்டு.

அந்நாட்களில் வடஇந்தியத் தலைவர்களுக்கு பாதுகாப்பாக தமிழகம் திகழ்ந்தது. தலைவர் கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ். அப்போதிருந்தே பெர்ணாண்டஸ் எனக்கும் அறிமுகம் உண்டு. தலைவர் கலைஞர் நள்ளிரவு கைது செய்யப்பட்ட நேரத்தில் தமிழகம் கண்ணீர் வடித்தது.

அந்த காலகட்டத்தில் கலைஞர் சிறையில் சந்திக்க இவர் வந்த போது உடன் இருந்தேன்.

ரயில்வே ஊழியர்களுடைய பொது வேலை நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்து அகில இந்தியாவையே அதிரச் செய்தவர். அதனால் இந்திரா அம்மையாருக்கு அவர் மீது கோபமுண்டு

பெர்ணாண்டஸ் மீது பரோடா டைனமிக் வழக்கு என்ற கிரிமினல் வழக்கு போடப்பட்டது. பிரபுதாஸ் பட்வாரி முன்னாள் தமிழக கவர்னர் அவரும் அவ்வழக்கில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கடுமையான சிக்கல்களை இந்திரா உருவாக்கினார். பெர்ணாண்டஸ் வெளியே நடமாட முடியாத நிலை இருந்தது.

தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் விவசாயச் சங்கப் போராட்டம் ஆரம்பித்தது. அப்போது விவசாயச் சங்கத்தலைவர் நாராயணசாமி நாயுடுவிற்கு போராட்டம் வெற்றி பெற என் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

ஈழத்தமிழர் பிரச்சனை, கூடங்குளம் அணுஉலை, ஸ்டெர்லைட், மீனவர்கள் கைது கோக் எதிர்ப்பு போன்ற தமிழகத்தின் முக்கிய போராட்டங்களில் துணை நின்றவர். சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்த இராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் அருகே 1998ல் ஆய்வு நடத்தினர்.

அவரிடம் எப்போதும் இரண்டு மூன்று பைஜாமா, ஜிப்பா மட்டுமே இருக்கும். மிகவும் எளிமையான மனிதர். அவருடைய கையெழுத்து ஆங்கிலத்தில் மிகவும் கவனத்தைக் கவரும். சட்டக் கல்லூரி மாணவனாக இருந்தபோது அவரை அழைத்துக் கூட்டங்கள் நடத்தியதுண்டு.

கடந்த பத்தாண்டுகளாக முன்னாள் பிரதமர் திரு வாஜ்பாய் அவர்களைப் போலவே இவரும் நினைவிழந்து வீட்டிலயே முடங்கி விட்டார் என்பது கவலையான செய்தி.

  • கே. எஸ். இராதாகிருஷ்ணன் (திமுக., செய்தி தொடர்பாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories