February 22, 2026, 5:34 PM
29 C
Chennai

வீட்டு சர்வீஸ் வயர் இரும்பு பைப்பில் மின்சாரம் பட்டு சிறுமி உயிரிழப்பு!

panpozhi girl died electric shock - 2026

வீட்டு சர்வீஸ் வயர் இரும்பு பைப் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் பண்பொழி அருகே உள்ள திருமலைக்கோவில், மெயின் ரோட்டில் வசித்து வருகிறார் ஆட்டோ டிரைவர் முத்துக்குமார். அவரின் மூத்த மகள் காயத்ரி(8) அங்குள்ள அரசுப் பள்ளியில் 3 ம் வகுப்பு படித்து வருகிறாள்.

சம்பவத்தன்று காலை மலையடிவார தெருவில் உள்ள தன் ஆச்சி வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று காலை வீட்டிற்கு அருகே விளையாடியபோது வீட்டின் முன்பு உள்ள மின்சார சர்வீஸ் எர்த் வயரை தாங்கி நிற்கும் பைப்பைப் பிடித்த போது எதிர்பாராமல் மின்சாரம் எர்த் கம்பி வழியாக பாய்ந்தது. பைப்பில் கசிந்து இருந்த மின்சாரம் காயத்திரியின் மீது பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட சிறுமியை அருகே இருந்த உறவினர்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்

அங்கே சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வழியிலேயே சிறுமி இறந்ததை உறுதி செய்தனர். இது குறித்து அச்சன்புதூர் காவல் உதவி ஆய்வாளர் சுதாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

அப்போது, வீட்டின் அருகில் உள்ள அதே மின் கம்பத்தில் மாடு உரசிய போது மாட்டின் மீதும் மின்சாரம் பாய்ந்து தாக்கியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மாடு உயிர் தப்பியது

சம்பவம் குறித்து மின்சார வாரியத்தினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டபோதிலும் உடனடியாக பணியாளர்கள் யாரும் வந்து மின் இணைப்பைத் துண்டிக்கவில்லை.

சம்பவம் குறித்த தகவல் அளிக்கப்பட்டு 1 மணி நேரத்துக்குப் பின்னரே மின் வாரியப் பணியாளர்கள் வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மின் கம்பத்தில்லிருந்து வீட்டிற்கு வரும் அதிகமான மின் வயர்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் மீது மின் தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் மின் வாரியத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வருத்தத்துடன் கூறினர்.

  • செய்தி : குறிச்சி சுலைமான், கடையநல்லூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories