வீட்டு சர்வீஸ் வயர் இரும்பு பைப்பில் மின்சாரம் பட்டு சிறுமி உயிரிழப்பு!

panpozhi girl died electric shock - 2026

வீட்டு சர்வீஸ் வயர் இரும்பு பைப் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் பண்பொழி அருகே உள்ள திருமலைக்கோவில், மெயின் ரோட்டில் வசித்து வருகிறார் ஆட்டோ டிரைவர் முத்துக்குமார். அவரின் மூத்த மகள் காயத்ரி(8) அங்குள்ள அரசுப் பள்ளியில் 3 ம் வகுப்பு படித்து வருகிறாள்.

சம்பவத்தன்று காலை மலையடிவார தெருவில் உள்ள தன் ஆச்சி வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று காலை வீட்டிற்கு அருகே விளையாடியபோது வீட்டின் முன்பு உள்ள மின்சார சர்வீஸ் எர்த் வயரை தாங்கி நிற்கும் பைப்பைப் பிடித்த போது எதிர்பாராமல் மின்சாரம் எர்த் கம்பி வழியாக பாய்ந்தது. பைப்பில் கசிந்து இருந்த மின்சாரம் காயத்திரியின் மீது பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட சிறுமியை அருகே இருந்த உறவினர்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்

அங்கே சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வழியிலேயே சிறுமி இறந்ததை உறுதி செய்தனர். இது குறித்து அச்சன்புதூர் காவல் உதவி ஆய்வாளர் சுதாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

அப்போது, வீட்டின் அருகில் உள்ள அதே மின் கம்பத்தில் மாடு உரசிய போது மாட்டின் மீதும் மின்சாரம் பாய்ந்து தாக்கியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மாடு உயிர் தப்பியது

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

சம்பவம் குறித்து மின்சார வாரியத்தினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டபோதிலும் உடனடியாக பணியாளர்கள் யாரும் வந்து மின் இணைப்பைத் துண்டிக்கவில்லை.

சம்பவம் குறித்த தகவல் அளிக்கப்பட்டு 1 மணி நேரத்துக்குப் பின்னரே மின் வாரியப் பணியாளர்கள் வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மின் கம்பத்தில்லிருந்து வீட்டிற்கு வரும் அதிகமான மின் வயர்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் மீது மின் தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் மின் வாரியத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வருத்தத்துடன் கூறினர்.

  • செய்தி : குறிச்சி சுலைமான், கடையநல்லூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories