வீட்டு சர்வீஸ் வயர் இரும்பு பைப்பில் மின்சாரம் பட்டு சிறுமி உயிரிழப்பு!

panpozhi girl died electric shock - 2026

வீட்டு சர்வீஸ் வயர் இரும்பு பைப் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் பண்பொழி அருகே உள்ள திருமலைக்கோவில், மெயின் ரோட்டில் வசித்து வருகிறார் ஆட்டோ டிரைவர் முத்துக்குமார். அவரின் மூத்த மகள் காயத்ரி(8) அங்குள்ள அரசுப் பள்ளியில் 3 ம் வகுப்பு படித்து வருகிறாள்.

சம்பவத்தன்று காலை மலையடிவார தெருவில் உள்ள தன் ஆச்சி வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று காலை வீட்டிற்கு அருகே விளையாடியபோது வீட்டின் முன்பு உள்ள மின்சார சர்வீஸ் எர்த் வயரை தாங்கி நிற்கும் பைப்பைப் பிடித்த போது எதிர்பாராமல் மின்சாரம் எர்த் கம்பி வழியாக பாய்ந்தது. பைப்பில் கசிந்து இருந்த மின்சாரம் காயத்திரியின் மீது பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட சிறுமியை அருகே இருந்த உறவினர்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்

அங்கே சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வழியிலேயே சிறுமி இறந்ததை உறுதி செய்தனர். இது குறித்து அச்சன்புதூர் காவல் உதவி ஆய்வாளர் சுதாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

அப்போது, வீட்டின் அருகில் உள்ள அதே மின் கம்பத்தில் மாடு உரசிய போது மாட்டின் மீதும் மின்சாரம் பாய்ந்து தாக்கியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மாடு உயிர் தப்பியது

சம்பவம் குறித்து மின்சார வாரியத்தினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டபோதிலும் உடனடியாக பணியாளர்கள் யாரும் வந்து மின் இணைப்பைத் துண்டிக்கவில்லை.

சம்பவம் குறித்த தகவல் அளிக்கப்பட்டு 1 மணி நேரத்துக்குப் பின்னரே மின் வாரியப் பணியாளர்கள் வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மின் கம்பத்தில்லிருந்து வீட்டிற்கு வரும் அதிகமான மின் வயர்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் மீது மின் தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் மின் வாரியத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வருத்தத்துடன் கூறினர்.

  • செய்தி : குறிச்சி சுலைமான், கடையநல்லூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories