காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 123)

gandhi godse - 2026

பின்னாளில் கோபால் கோட்ஸே இந்த நிகழ்வைப்பற்றி நினைவுகூர்கையில் கூறினார் :

‘’ கார்கரேயும் நானும் சிற்றுண்டி சாப்பிட அமர்ந்திருந்தோம்.அப்போது ஒரு போலீஸ் படை ஒரு மனிதனை தலையும் ,முகமும்,தோள்களும் ஒரு பழுப்பு நிற போர்வையால் மறைத்திருந்த வண்ணம் அழைத்து வந்தார்கள்.

அந்த போர்வையை அவர்கள் விலக்கும் முன்னரே அந்த மனிதன் மதன்லால் பஹ்வா என்பது எங்களுக்குத் தெரிந்து விட்டது.

அவன் எங்களுடைய பெயர்களை போலீசாருக்கு தெரிவித்து விட்டான்.எங்களை அடையாளம் காட்டுவதற்காக அவனை ரெயில் நிலையத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதும் புரிந்துவிட்டது.

அந்த தேனீர் விடுதி 40 அடிக்கு 30 அடி அளவில் பெரியதாக அமைந்திருந்தது.

அங்கே கூட்டமும் இல்லை.

மதன்லாலை விடுதிக்குள் சுற்றிலும் பார்க்கச் சொன்னார்கள்.யாரையாவது அவன் அடையாளம் காண்கிறானா என்று அவன் கண்களையே இரு போலீஸ்காரர்கள் பார்த்தவண்ணம் இருந்தார்கள்.

ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு இல்லையென்று தலையசைவால் பஹ்வா தெரிவித்தான்.

அவனுடன் பாதுகாப்பிற்கு வந்தவர் மீண்டும் போர்வையால் அவன் தலையையும்,முகத்தையும் மறைத்து அவனை வெளியே அழைத்துச் சென்று விட்டார்.

எங்கள் அதிர்ஷ்டம் எங்கள் திசையில் அவன் பார்க்கவில்லை ‘’.

ஆனால் கோபால் கோட்ஸே கூறியது சரியல்ல.

தலையிலிருந்து போர்வை விலக்கப்பட்டவுடனேயே கோபால் கோட்ஸேயையும்,தன்னுடைய ஆருயிர் நண்பரான கார்கரேயையும் மதன்லால் பஹ்வா பார்த்துவிட்டார்.

ஆனால் அங்கிருந்த அனைவரையும் உற்றுபார்த்ததுபோல இவர்களையும் உற்றுபார்த்துவிட்டு அதன் பின்தான் அவர்கள் அங்கு இல்லையென்று தலையசைத்தார்.

அவரை வெளியே அழைத்துச்சென்ற போலீசார்,ரெயிலின் ஒவ்வொரு பெட்டியாக அழைத்துச்சென்று தேடுதல் வேட்டையை நடத்தினார்கள்.

ரெயிலின் கடைசி பெட்டிக்கு அவர்கள் சென்றபிறகு கோபால் கோட்ஸே நிதானமாக தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தார்.

மதன்லால் பஹ்வா கைதானச் செய்தி அவருடைய பம்பாய் நண்பரான பேராசிரியர் Dr.J.C.ஜெயினை எட்டியது.

ஜெயினின் நண்பர்கள் பலருக்கு,மதன்லால் பஹ்வா ஜெயினின் நண்பர் என்பது தெரியும்.

அதிலும் குறிப்பாக அங்கத் சிங் என்பவரிடம் Dr.ஜெயின் ,மதன்லால் பஹ்வா,காந்தியை கொல்லத் திட்டமிட்டிருப்பதாக தன்னிடம் தெரிவித்தாகக் கூறியிருந்தார்.

ஆனால் மதன்லால் பஹ்வா தன்னிடம் பேசியிருந்ததைப்பற்றி Dr.ஜெயின் போலீசாரிடம்
அப்போது எதுவுமே கூறாமல் விட்டுவிட்டார்.

ஆனால் இப்போது அவருக்கு பயம் பற்றிக்கொண்டு விட்டது.

தன்னிடம் தெரிவித்திருந்ததைப் பற்றி தன் வாக்குமூலத்தில் பஹ்வா கூறியிருந்தால்…

தன் மெளனம் தனக்கு ஆபத்தாக முடியுமோ என அஞ்சினார்.

அப்போது ஜெயினிற்கு வயது 40 .ஹிந்தி மொழியில் PH.D பட்டம் பெற்றவர்,ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.

கல்வியறிவு உடையவர்,நல்ல சமூகப்பின்னணி உள்ளவர்.

ஒரு குடிமகனாக தன் கடமைகளையும் பொறுப்புகளையும் நன்கு அறிந்திருந்தவர்.

மதன்லால் தன்னிடம் காந்தியை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறியபோது,ஒரு அகதி தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்களின் காரணமாக ஏதோ பிதற்றுகிறார் என்று எண்ணி அதைப்பொருட்டாக எண்ணாமல் தள்ளியிருந்தாலும்,

இப்போது மதன்லால் பஹ்வா பிடிப்பட்டுவிட்டபிறகு,

தனக்குத்தெரிந்ததை அதிகாரத்திலிருந்த யாரிடமாவது தெரிவிக்கவேண்டியது தன் கடமையென்று எண்ணினார்.

( தொடரும் )

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories